Friday 20 September 2024

Pope to religious: 'Take decisive steps to follow Christ'

 

Pope to religious: 'Take decisive steps to follow Christ'



Pope Francis encourages religious gathered in Rome for their General Chapters to take "decisive steps in following Christ" and look at the Blessed Virgin Mary as a model.

By Deborah Castellano Lubov

Take decisive steps in following Christ and listen to His voice.

Pope Francis offered this encouragement as he met on Thursday with the Congregation of the Sacred Hearts of Jesus and Mary and the Sisters of the Divine Savior, on the occasion of the General Chapters.

“Like the disciples,” he said, “you are called to listen to the voice of Jesus, to deepen in your contemplation and to be capable of living and announcing the love of God incarnate in Him, particularly through service in favor of those most in need and also through Eucharistic and reparative prayer.”

“Only by following Christ with fidelity and docility will your structures" and through "the dissemination of the spiritual and historical heritage of your Congregations,” he observed, will "you be able to enjoy a renewed spring that will make your charism shine in the current moment of the history of humanity.”

Following Christ

Given this, Pope Francis invited them to a careful listening to the will of God, “which is not easy,” and “to take decisive steps in following Christ."

This, he clarified, does not consist only "in learning a doctrine," but also "in taking on a way of life.”

The Holy Father assured the consecrated religious of his closeness and prayer "that they may renew themselves through a discernment inspired and sustained by the values of the Gospel," and that, in their hearts, “their desire to live united to Jesus and remain faithful to the foundational charism may intensify.”

Need for Prayer

The Holy Father urged them “to stop for a long time in prayer, especially during these days of the Chapter,” noting that, there, in the Cenacle, is where "the fire of the Spirit is nourished."

“From there,” he highlighted, “you will be able to set out again to ignite the world with His love, serving those in need and giving hope back to the discouraged.”

Blessed Mother’s example

Mary, the Holy Father said, teaches us this with her example.

“I would like to conclude by remembering a characteristic trait of the Madonna: she never shows herself, but always Jesus. ‘Do whatever He tells you.’ This is the Madonna: she points to Jesus, always. Never to herself.”

ROBERT JOHN KENNEDY: Rev. Robert John Kennedy after crossing 50 years j...

ROBERT JOHN KENNEDY: Rev. Robert John Kennedy after crossing 50 years j...:  Rev. Robert John Kennedy after crossing 50 years joyfully

Rev. Robert John Kennedy after crossing 50 years joyfully

 Rev. Robert John Kennedy after crossing 50 years joyfully










Thursday 19 September 2024

மணிப்பூரில் அமைதியை நோக்கிய இந்திய அரசின் திட்டங்கள்

 

மணிப்பூரில் அமைதியை நோக்கிய இந்திய அரசின் திட்டங்கள்


மணிப்பூர் கலவரத்தால் 230க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 60,000 மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

இந்தியாவின் மணிப்பூர் கலவரத்தால்  16 மாதங்களாக போராடிவரும் இந்து மற்றும் கிறிஸ்தவர்களின் அமைதிக்கான, மத்திய அரசின் புதிய பரிந்துரை திட்ட வரைவுகள் குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர் என்று UCA செய்தி நிறுவனம் தெரிவிக்கறது.

தேசிய தலைநகர் புது தில்லியில் செப்டம்பர் 17அன்று செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், மணிப்பூரில் அமைதிக்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், புதிய அமைதி பரிந்துரைகள் தயாராக உள்ளது என்றும் கூறினார்.

குக்கி  மற்றும் மேத்தி இனக் குழுக்களிடையே அமைதிக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறிய இந்திய உள்துறை அமைச்சர் அது குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டதாக செய்தி நிறுவனம் கூறுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி கலவரம்  தொடங்கிய உடனேயே இவ்வன்முறையை எதிர்கொள்ள, இந்திய அரசு செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், நலமாய்  இருந்திருக்கும் என்றும், குக்கி, மேத்தி ஆகிய இரு தரப்பினரும் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு திருப்புமுனையை அடைவது கடினம் என்றும் திருஅவைத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

வளமிக்க   மேத்தி இன மக்களுக்கு பழங்குடியினர்க்குரிய உரிமைகளும் சலுகைகளும்  வழங்க வேண்டும் என்ற  நீதிமன்ற நடவடிக்கைக்கு, கடந்த ஆண்டு குக்கி  பழங்குடியின மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது மதவெறி வன்முறை தொடங்கியது.

இக்கலவரத்தால் ஏற்கனவே 230க்கும் மேற்பட்ட மக்கள்  உயிரிழந்த நிலையில் 60,000 மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்  கிறிஸ்தவர்கள். மேலும், 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் குக்கி இனக் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு தனி ஆட்சி வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் கூறுகிறது.

மேலும், பள்ளத்தாக்குகளில் வாழும் மேத்தி இன மக்கள், குக்கி இன மக்களை தங்கள் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும், தற்போதுள்ள சூழலினால் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசிக்கும் குக்கி  இனக்கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப இயலாது என்றும் திருஅவைத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மணிப்பூரில் உள்ள கிறிஸ்தவர்கள், தென்கிழக்கு ஆசியாவின்  மோதல்களால் பாதிக்கப்பட்ட மியான்மரில் உள்ள மக்களுடன்  நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளனர் என்றும், மியான்மரில் செழித்து வரும் போதைப்பொருள் வர்த்தகமே மணிப்பூர்  மாநிலத்தின்   இனக்கலவரத்திற்கு மூல காரணம் என்றும் அம்மாநில முதல்வர் N .பிரேன் சிங் குற்றம் சாட்டியுள்ளார் என்றும் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும்,  மியான்மருடன்  1,643 கி.மீ., நீளமுள்ள மணிப்பூரின் எல்லை முழுவதும் வேலி அமைக்கப்படும் என பிப்ருவரி  6 அன்று, இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில், 30கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், புதிய அமைதி பரிந்துரை வரைவுகளுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்ததாகவும் UCA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ROBERT JOHN KENNEDY: Rev. Robert John Kennedy at Golden Jubilee age in ...

ROBERT JOHN KENNEDY: Rev. Robert John Kennedy at Golden Jubilee age in ...:    Rev. Robert John Kennedy at Golden Jubilee age in 2024 

Rev. Robert John Kennedy at Golden Jubilee age in 2024

  Rev. Robert John Kennedy at Golden Jubilee age in 2024 






Rev. Robert John Kennedy in new ministry since June 2024

Rev. Robert John Kennedy in new ministry 

                        since June 2024


RESIDENCIAL ADDRESS:

ROBERT JOHN KENNEDY
MANAGING DIRECTOR - NIDD
MULAGUMOODU & POST – 629167
KANYAKUMARI DISTRICT, TAMIL NADU, INDIA.
MOB: 9443490023, 8903417068
EMAIL: revrojokennedy@gmail.com
Web blog: https://robertjohnkennedy.blogspot.com
 

OFFICE ADDRESS:

ROBERT JOHN KENNEDY
MANAGING DIRECTOR
NANJIL INTEGRATED DAIRY DEVELOPMENT (NANJIL MILK)
5/15, MULAGUMOODU & POST – 629167
KANYAKUMARI DISTRICT, TAMIL NADU, INDIA.
MOB: 9488552370, PHONE: 04651-248370, 248881
EMAIL: nanjilmilk@gmail.com; nanjilmilkidd@gmail.com
Web: www.nanjilmilk.com
Corporate ID: U15209TN2013NPL089488
GSTIN: 33AAECN2463R1Z2

 

ROBERT JOHN KENNEDY: Rev. Robert John Kennedy at age of 50 in 2024

ROBERT JOHN KENNEDY: Rev. Robert John Kennedy at age of 50 in 2024:   Rev. Robert John Kennedy at age of 50 in 2024

Rev. Robert John Kennedy at age of 50 in 2024

 Rev. Robert John Kennedy at age of 50 in 2024






Sunday 15 September 2024

IAS அதிகாரியை விட அதிக சம்பளம்,மதிப்பு தரும் படிப்பு இது -இந்தியாவில் 30...

Post Office Monthly Income Scheme 2023 | Deposit Schemes in Post Office ...

Post office 799 scheme 2024 post office insurance post office life ins...

இனிமேல் கண்ணாடி தேவையில்லை.. 15 நிமிடத்தில் கண் பார்வை சரி ஆகிவிடும் - வ...

ஓணத்தின் முந்தைய இரவில் பயணப்படும் கேரளாவின் திருவோணத்தோணி பற்றி தமிழர்க...

The Nun Who Died Smiling Could Be Argentina's Next Saint!

ஓணம் தமிழர்கள் கொண்டாடிய பண்டிகை - ஆதாரங்கள் தரும் சங்க காலச் சுவடிகள்

பல நாடுகளின் உளவுப்பிரிவினர் மத்தியில் தனித்துநிற்கும் ‘தமிழ் பொதுவேட்பா...

Monday 2 September 2024

திருத்தந்தையின் திருப்பயணம் மதநல்லிணக்கத்தைப் பேணும்!

 


திருத்தந்தையின் திருப்பயணம் மதநல்லிணக்கத்தைப் பேணும்!

பாப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூரை உள்ளடக்கிய திருத்தந்தையின் நான்கு நாடுகளுக்கான திருப்பயணத்தின் முதல் சந்திப்பு இந்தோனேசியாவில் அமைகிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

இந்தோனேசியாவிற்கான தனது திருப்பயணத்தின்போது இஸ்திக்லால் மசூதிக்கு வருகை தரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை, மதநல்லிணக்கத்தைப் பேணுவதற்கான முயற்சிகளுக்கு ஓர் அங்கீகாரத்தையும் மற்றும் ஊக்கத்தையும் தருகிறது என்று ஜகார்த்தாவின் பேராயர் கர்தினால் இக்னேஷியஸ் சுஹாரியோ ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள் கூறியதாக, யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மசூதியின் மதநல்லிணக்க வரலாற்றைப் புரிந்து கொண்ட பின்னரே, இத்தகையதொரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று கர்தினால் ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள் இணையதள செய்தியில் தெரிவித்திருப்பதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தோனேசியாவில் மதங்களுக்கிடையேயான மத நல்லிணக்கத்தைத் திருப்பீடம் உண்மையிலேயே பாராட்டுகிறது என்றும், மேலும் இங்குள்ள இஸ்லாமியத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அந்நாட்டின் ஆயர் பேரவையின்போது கர்தினால் ஹார்ட்ஜோட்மோட்ஜோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இந்தோனேசியாவின் முதல் அரசுத் தலைவர் சுகர்னோ அவர்கள், அதன் முதல் பிரதமர் முகமது ஹட்டா பரிந்துரைத்த மற்றொரு இடத்திற்குப் பதிலாக ஜகார்த்தா பேராலயத்திற்கு அருகில் உள்ள இஸ்திக்லால் மசூதியைக் கட்டத் தேர்வு செய்தது ஒரு தற்செயலான நிகழ்வல்ல, இது ஒரு இணக்கமான வாழ்வை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பெருமிதம் அடைந்துள்ளார் ஹார்ட்ஜோட்மோட்ஜோ.

மேலும் நாட்டில் தற்போதுள்ள மத நல்லிணக்கணம் மற்றும் ஒன்றிப்புக் காரணமாக, இந்தோனேசியாவின் இஸ்லாமியத் தலைவர்கள் வத்திக்கானுக்கு அடிக்கடி அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பேராயர் ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள், அந்நாட்டின் அமைதியான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாம் பற்றி பேசவே அவர்கள் அழைக்கப்படுவதாகவும், இது பாகிஸ்தான் அல்லது மத்திய கிழக்கு போன்ற பிற நாடுகளிலிருந்து வேறுபட்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்தோனேசியாவில் நிறுவப்பட்டுள்ள மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் நல்லுறவுகள் தொடர்ந்து பேணப்பட்டு பலப்படுத்தப்படும் என்று எதிபார்க்கப்படுவதாகவும், உடன்பிறந்த உறவையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதியேற்றுயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் ஹார்ட்ஜோட்மோட்ஜோ.

தூய விண்ணேற்பு அன்னை பேராலயத்திலிருந்து 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது திருப்பயணத்தின்போது செப்டம்பர் 5-ஆம் தேதி, வியாழனன்று, வருகைதருகிறார்.


மகிழ்ச்சி, உற்சாகத்துடன் காத்திருக்கும் பாப்புவா நியுகினியா

 

மகிழ்ச்சி, உற்சாகத்துடன் காத்திருக்கும் பாப்புவா நியுகினியா

வரலாறாக மாற இருக்கும் இத்திருத்தூதுப் பயணத்தின் வரலாற்று நிகழ்விற்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் - அருள்பணியாளார் மிகுவேல்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாப்புவா நியு கினியா மக்கள் திருத்தந்தையின் வருகைக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார்கள் என்றும், இசை வழியாக நற்செய்தியை அறிவித்து கடவுளின் தூய அழகு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் மிகுவேல் தெலா காலே.

செப்டம்பர் 2 திங்கள்கிழமை திருத்தந்தையின் 45 ஆவது திருத்த்தூதுப் பயணத்தை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு கூறியுள்ளார் பாப்புவா நியுனினியாவில் உள்ள வார்த்தை மனுவுருவானார் துறவு சபையின் அருள்பணியாளர் Miguel de la Calle.

வார்த்தை மனுவுருவானவர் மறைப்பணியாளர்களின் நற்செய்திப்பணி, திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கும் மக்களின் உணர்வு, செப்டம்பர் 8 அன்னை மரியின் பிறப்பு பெருவிழா, பாரடைஸ் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி போன்றவற்றைப் பற்றி எடுத்துரைத்த அருள்பணியாளர் மிகுவேல் அவர்கள், வரலாறாக மாற இருக்கும் இத்திருத்தூதுப் பயணத்தின் வரலாற்று நிகழ்விற்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

செப்டம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை ஏறக்குறைய 3 மணி நேரம் திருத்தந்தை தங்களுடன் இருப்பதாக எடுத்துரைத்த அருள்பணியாளர் மிகுவேல் அவர்கள், அதற்கான தயாரிப்பான மைதானத்தை சுத்தம் செய்தல், பூக்களால் அலங்கரித்தல் போன்ற செயல்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்கின்றார்கள் என்றும், மாலையில் ஒப்புரவு மற்ரும் செப வழிபாடுகளில் பங்கேற்று தங்களையேத் தயாரித்து வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு முதல் அதாவது ஏறக்குறைய 27 ஆண்டுகளாக பாப்புவா நியூ கினியாவில் வார்த்தை மனுவுருவானவர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள மிகுவேல் அவர்கள், மறைப்பணியாளர்களின் கடுமையான உழைப்பினால் தமத்திரித்துவ மனிதநேயப்பள்ளியானது செயல்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.      

தென்மேற்கு பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கில் அமைந்துள்ள பாப்புவா நியூ கினியா, உலகின் மிகக் குறைந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட நாடுகளில் ஒன்று என்றும், 70 இலட்சத்திற்கும் அதிகமான வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட பேச்சுவழக்குகள் இம்மக்கள் மத்தியில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.

🔴 LIVE முதல் நன்றித் திருப்பலி | அருட்பணி. அமித் ஷாஜன் | புனித அலங்கார அ...

Indonesia prepares to host Pope Francis on his most challenging trip to ...

Pope Francis Goes to Southeast Asia!

Pope to religious: 'Take decisive steps to follow Christ'

  Pope to religious: 'Take decisive steps to follow Christ' Pope Francis encourages religious gathered in Rome for their General Cha...