An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Monday, 30 December 2013
ROBERT JOHN KENNEDY: செய்திகள் - 30.12.13
ROBERT JOHN KENNEDY: செய்திகள் - 30.12.13: செய்திகள் - 30.12.13 ------------------------------ ------------------------------ ------------------------------ ------------ 1. ...
செய்திகள் - 30.12.13
செய்திகள் - 30.12.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல்
2. திருக்குடும்பத் திருநாளன்று திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம்
3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி
4. அமெரிக்க மக்கள் கருத்துக் கணிப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக உயர்ந்த இடம்
5. இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளிட பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு
6. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான போரை அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்
7. எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல்
டிச.30,2013. ஒரு குடும்பத்தில் வயது முதிர்ந்தோரும், குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே, அக்குடும்பத்தில் உறவுகள் நலமாக உள்ளனவா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 29, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட திருக்குடும்பத் திருநாளையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த 60,000க்கும் அதிகமான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருக்குடும்பத் திருநாளன்று நற்செய்தியாக வழங்கப்பட்டிருந்த, இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரும் எகிப்திற்குத் தப்பித்துச்செல்லும் நிகழ்வைத் தன் உரையின் மையமாக்கியத் திருத்தந்தை அவர்கள், உலகெங்கும், புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் குடும்பங்களைச் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.
சொந்த நாட்டிலிருந்து வேற்று நாடுகளுக்கு அன்னியராக விரட்டப்படும் மக்களை நினைவுகூரும் வேளையில், குடும்பங்களுக்குள்
அன்னியராக நடத்தப்படும் மக்களையும் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று
சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல் என்று கூறினார்.
பொறுத்துக்கொள்ளுங்கள், நன்றி, மன்னித்துக்கொள்ளுங்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் நலமாக, மகிழ்வாக இருக்கும் என்று கூறியத் திருத்தந்தை, அனைவரையும் அந்த வார்த்தைகளை தன்னோடு சேர்ந்து சொல்லவைத்ததை, கூடியிருந்தோர் அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
நற்செய்தியை அறிவிப்பது என்ற உயர்ந்த செயல்பாடு ஒவ்வொரு குடும்பத்திலுமிருந்து துவங்குகிறது என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு நாள் குடும்ப வாழ்வையும் நிறைவுடன் வாழ, அன்னை மரியா, யோசேப்பு, இயேசு ஆகியோரின் உதவியை நாடுவோம் என்று தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருக்குடும்பத் திருநாளன்று திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம்
டிச.30,2013. டிசம்பர் 29, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூவேளை செப உரையை வழங்கியபின், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த குடும்பங்களையும், இத்தாலியின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இளையோரையும் சிறப்பாக குறிப்பிட்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
விரைவில் கூடவிருக்கும் கர்தினால்கள் அவையும், அதைத் தொடர்ந்து நிகழவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றமும், குடும்பம் என்ற மையக்கருத்தில் விவாதங்களை மேற்கொள்ளவிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவை மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக அமைய ஒரு சிறு செபம் ஒன்றைக் கூறினார்.
திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம் பின்வருமாறு:
திருக்குடும்பத்திடம் செபம்
இயேசு, மரியா, யோசேப்பே,
உங்களுக்குள் இருக்கும்
உண்மையான அன்பின் மகிமையைத் தியானிக்கின்றோம்.
உங்களிடம் நம்பிக்கையோடு இறைஞ்சுகிறோம்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
எமது குடும்பங்களும்
ஒன்றிப்பின் இடங்களாக, செபத்திற்கென கூடிவரும் மேல்மாடி அறைகளாக,
நற்செய்தியின் உண்மையான பள்ளிகளாக
குட்டிக் குடும்பத் திருஅவைகளாக
அமையும் வரம் தாரும்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
வன்முறையின், பிரிவினைகளின்
அனுபவத்தை இனிமேல்
ஒருபோதும் குடும்பங்கள் எதிர்நோக்காதிருக்கட்டும்.
குடும்பங்கள் காயப்பட்டு அல்லது அவமானப்பட்டு இருந்தால்
அவை விரைவில் ஆறுதலையும் நற்சுகத்தையும் பெறட்டும்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
குடும்பத்தின் புனிதத்துவத்தை, அதன் மாறாத இயல்பை,
கடவுளின் திட்டத்திலுள்ள அதன் அழகை
நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றம்
அனைவரிலும் தட்டியெழுப்ப உதவி செய்யும்.
இயேசு, மரியா, யோசேப்பே,
எங்களின் இவ்வேண்டுதல்களைக் கேட்டு அவற்றை நிறைவேற்றும். ஆமென்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி
டிச.30,2013. 'இயேசு பாலனின் முகத்தில் நாம் தந்தையாம் இறைவனின் முகத்தைக் கண்டு தியானிக்கிறோம். வாருங்கள் அவரை ஆராதிப்போம்' என தன் இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன், இத்தாலியம், ஆங்கிலம், அரபு, இஸ்பானியம், போலந்து, செர்மானியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் இக்கிறிஸ்துமஸ் காலத்தில் டுவிட்டர் வழி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. அமெரிக்க மக்கள் கருத்துக் கணிப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக உயர்ந்த இடம்
டிச.30,2013. அமெரிக்காவில்
உள்ள கத்தோலிக்கர்களில் 88 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் திருஅவையின் தலைவராகச் செயல்படும் முறையைப் பாராட்டியுள்ளனர் என்று
CNN ஊடகத்தின் கருத்துக் கணிப்பு ஒன்று அண்மையில் தெரிவித்துள்ளது.
இணையத்தளம், முகநூல் என்ற இரு சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பேசப்படும் ஒரு தலைவராக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, Times வார இதழ் 2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளது, தகுதியானத் தேர்வு என்று CNN தன் கணிப்பில் கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளர் இளம் பருவத்தினர் வாழ்ந்த சிறைக்குச் சென்று அவர்கள் காலடிகளைக் கழுவியதையும், தன் பிறந்தநாளன்று வீடற்றோருடன் காலை உணவைப் பகிர்ந்துகொண்டதையும், அருவருக்கத்தக்க முகத் தோற்றம் கொண்ட ஒருவரை அணைத்ததையும் மக்கள் பெருமளவில் பாராட்டியுள்ளனர் என்று இக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 16ம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 1035 பேர் கலந்துகொண்டனர் என்று CNN அறிவித்துள்ளது.
ஆதாரம் : CNN
5. இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளிட பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு
டிச.30,2013.
பிலிப்பீன்ஸ் மக்கள் தங்கள் பழைய தீய வழிகளைக் கைவிட்டு 2014ம் ஆண்டை
விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்கவேண்டும் என
அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர்பேரவைத் தலைவர்.
பிலிப்பீன்ஸ் சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளி, புத்தாண்டில்
புதிய வாழ்வை மேற்கொள்ள விசுவாசிகள் முன்வரவேண்டும் என பிலிப்பீன்ஸ்
ஆயர்கள் சார்பில் அழைப்புவிடுத்துள்ள ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Socrates Villegas, கடத்தல், வன்முறை, பயங்கரவாதம், இலஞ்ச ஊழல் போன்றவை நிறுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.
'மீண்டும் புதிதாகத் துவக்குவோம்' என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த புத்தாண்டு மேய்ப்புப்பணி சுற்றறிக்கை, சிரியா நாட்டின் அமைதிக்கான செபத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான போரை அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்
டிச.30,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான அனைத்துலக உதவிப்பணிகளின் ஓர் அங்கமாக 1,600 பிரான்ஸ் இராணுவ வீரர்கள் வந்துள்ளபோதிலும், வன்முறைகள் நிறுத்தப்பாடாத நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உதவிக்கு அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்.
ஐ.நா. அமைதி காப்புத் துருப்புகளின் உடனடித் தலையீடு தேவைப்படுகின்றது என அழைப்புவிடுத்த மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga, மற்றும் இஸ்லாமிய மத்த்தலைமைக் குரு Omar Kobine Layama, 'மத்திய ஆப்ரிக்கக் குடியரசு போரை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கு மதமும் காரணங்கள் எனச் சொல்லப்படும் நிலையில், அந்நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டியது அனைத்துலகச் சமுதாயத்தின் கடமை என மேலும் உரைத்துள்ளனர்.
கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தி நிறுவனங்கள் கூறும்வேளை, Bangui நகரில் மட்டும் ஏறத்தாழ 60 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui நகரில் இம்மாதத் துவக்கத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
ஆதாரம் : MISNA
7. எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு
டிச.30,2013. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் எகிப்தில் அண்மைக் காலங்களில் பெருகிவருவதால், அரசியலைப்பு
மாற்றங்கள் தொடர்புடைய மக்கள் கருத்து வாக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள்
பங்கெடுக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற கவலையை வெளியிட்டுள்ளனர் எகிப்து
கிறிஸ்தவத் தலைவர்கள்.
அண்மைக்
காலங்களில் எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்
அதிகரித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு கத்தோலிக்கத்
திருஅவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருட்திரு Rafic Greiche, கிறிஸ்தவர்களின்
மனங்களில் அச்சத்தை விதைப்பதன் மூலம் அரசியலமைப்பு திருத்தம் குறித்த
கருத்து வாக்கெடுப்பில் அவர்களைப் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருக்க வைப்பதே
இஸ்லாமிய தீவிரவாதிகளின் நோக்கம் என்றார்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ வழிபாட்டுமுறையினரின் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள் சனவரி மாதம் 7ம் தேதி இடம்பெற உள்ள நிலையில், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் இருக்கின்றபோதிலும், அச்சமின்றி கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறினார் அருட்திரு Greiche.
இஸ்லாமியக்
குழு ஒன்றை தீவிரவாத அமைப்பு என அறிவித்து எகிப்து அரசு தடைசெய்துள்ளதை
ஒட்டியும் அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்
அதிகரித்துள்ளன.
எகிப்தில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற சனவரி மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் இடம்பெற உள்ளது
ஆதாரம் : AsiaNews
ROBERT JOHN KENNEDY: India says welcome back to jingoism
ROBERT JOHN KENNEDY: India says welcome back to jingoism: India says welcome back to jingoism Reaction to diplomat's arrest in US is out of proportion. ...
India says welcome back to jingoism
India says welcome back to jingoism
Reaction to diplomat's arrest in US is out of proportion.
More specifically it’s a row over her arrest ordered by Preet Bahara, US Attorney for the Southern District of New York and a fellow Indian.
It is quite normal for Indian diplomats, used to having servants back home, to take domestic assistants with them while on foreign postings. This is so they are not dependent on local help, which is likely to be more expensive.
It’s ironic that Indians in the US and back home had celebrated Bahara’s appointment as a measure of how high the Indian community has risen in their new country.
Trouble flared when Dr Khobragade was arrested on December 12 in New York, soon after dropping her daughter at school. She was accused of underpaying her Indian domestic help and giving false information for visa applications, charges that invite a prison term.
The arrest shocked Dr Khobragade, her family and the Indian government who presumed she had diplomatic immunity and would not be charged.
It turned out her diplomatic immunity as a consular officer is not in the same category as those enjoyed by ambassadors and other senior diplomats.
Her attorney alleges she was taken to a police station, body and cavity searched, and then put in a cell with criminals including sex workers and drug addicts. People back in India thought this was adding insult to injury.
US authorities are firm that the manner of her arrest, and her treatment in detention, are not the main issues. They insist the arrest procedures were according to American norms and those accused of crimes under the law must be prosecuted irrespective of their rank.
On top of all this, it also turns out Dr Khobragade is accused of giving false information while buying an apartment in a controversial Mumbai residential complex.
Dr Khobragade, daughter of a senior civil servant, and of Dalit origin, is patently well connected. That may have something to do with the overreaction by the government of India. This reaction is not normal when Indians are arrested in Pakistan or Sri Lanka, the Middle East or Africa. India’s jingoist TV news channels have jumped on the bandwagon, giving it blanket coverage.
The government has been possibly forced into a position of demanding not just a formal apology from the United States – and not just expressions of regret – but that the US drop all charges against the diplomat.
The government in fact posted Dr Khobragade to the United Nations presuming this would give her retroactive immunity from future arrest and persecution, but this has met with resistance from the Department of State which has to keep its own norms, according to its spokesperson.
It would seem the Indian government does not believe in rule of law.
India, with its trade, financial and defense ties with the US, and with a very large Indian diaspora enjoying what the land of opportunity has to offer cannot afford to annoy Washington beyond a point.
This has been made quite clear by pronouncements from senior ministers who have highlighted the “strategic partnership between the world’s two biggest democracies,” and commerce minister Anand Sharma’s declaration that nothing will be allowed to strain these ties.
But India’s political parties, specially the main opposition Bharatiya Janata Party, have gone overboard to a ridiculous extent.
The parties have held protests in Delhi, Mumbai and other cities, where American flags have been burned.
Commentators have suggested that same sex partners of American diplomats be arrested under India’s draconian anti-gay laws. Protesters have demanded that India arrest and strip search American diplomats.
Whipped by an angry media, the Foreign Ministry seems bent on doing just that.
Special privileges including police courtesy cards have been withdrawn from US diplomats, as have their privileges to import food items, alcohol and other goods, a benefit enjoyed by most embassies.
In a bizarre move, Delhi police also removed traffic barriers meant to prevent terrorist attacks from around the US embassy.
Foreign minister, Salman Khursheed, has even said he will not return to parliament until the matter is resolved to India’s satisfaction.
Among the more controversial demands is that the US disregard its legal processes, withdraw charges against the diplomat and arrest and repatriate the maid at the centre of the controversy.
But some sane voices are at last being heard in government circles and civil society, presenting an alternate way of solving this row.
Voices within the government are saying that a high level dialogue be initiated, an apology given for the diplomat's strip and cavity searches, and that the law be allowed to take its course without further arrest.
Civil society is also waking up to its duties as a voice of reason. And those who know the art are mediating between governments to give the unsavory incident a quiet burial.
Commercial and security interests are all too important, for both India and the US, to jeopardize them. And of course it would be wise that the Indian government warn its diplomats not to violate laws in countries where they have been posted, and if possible, to learn to live with the servants they brought from home in India.
John Dayal is the general secretary of the All India Christian Council and a member of the Indian government’s National Integration Council.
Source: ucanews.com
ROBERT JOHN KENNEDY: Scientific studies show that wealth reduces compas...
ROBERT JOHN KENNEDY: Scientific studies show that wealth reduces compas...: Scientific studies show that wealth reduces compassion Researchers say empathy for others declines as prosperity increases. ...
Scientific studies show that wealth reduces compassion
Scientific studies show that wealth reduces compassion
Researchers say empathy for others declines as prosperity increases.
Berkeley psychologists Paul Piff and Dacher Keltner ran several studies looking at whether social class (as measured by wealth, occupational prestige, and education) influences how much we care about the feelings of others. In one study, Piff and his colleagues discreetly observed the behavior of drivers at a busy four-way intersection. They found that luxury car drivers were more likely to cut off other motorists instead of waiting for their turn at the intersection. This was true for both men and women upper-class drivers, regardless of the time of day or the amount of traffic at the intersection. In a different study they found that luxury car drivers were also more likely to speed past a pedestrian trying to use a crosswalk, even after making eye contact with the pedestrian.
In order to figure out whether selfishness leads to wealth (rather than vice versa), Piff and his colleagues ran a study where they manipulated people’s class feelings. The researchers asked participants to spend a few minutes comparing themselves either to people better off or worse off than themselves financially. Afterwards, participants were shown a jar of candy and told that they could take home as much as they wanted. They were also told that the leftover candy would be given to children in a nearby laboratory. Those participants who had spent time thinking about how much better off they were compared to others ended up taking significantly more candy for themselves--leaving less behind for the children.
A related set of studies published by Keltner and his colleagues last year looked at how social class influences feelings of compassion towards people who are suffering. In one study, they found that less affluent individuals are more likely to report feeling compassion towards others on a regular basis. For example, they are more likely to agree with statements such as, “I often notice people who need help,” and “It’s important to take care of people who are vulnerable.” This was true even after controlling for other factors that we know affect compassionate feelings, such as gender, ethnicity, and spiritual beliefs.
In a second study, participants were asked to watch two videos while having their heart rate monitored. One video showed somebody explaining how to build a patio. The other showed children who were suffering from cancer. After watching the videos, participants indicated how much compassion they felt while watching either video. Social class was measured by asking participants questions about their family’s level of income and education.
The results of the study showed that participants on the lower end of the spectrum, with less income and education, were more likely to report feeling compassion while watching the video of the cancer patients. In addition, their heart rates slowed down while watching the cancer video—a response that is associated with paying greater attention to the feelings and motivations of others.
Source: Scientific American
ROBERT JOHN KENNEDY: Pope delivers blunt Christmas message to Curia
ROBERT JOHN KENNEDY: Pope delivers blunt Christmas message to Curia: Pope delivers blunt Christmas message to Curia Avoid mediocrity, gossip and bureaucracy, he tells administrators. ...
Subscribe to:
Posts (Atom)
போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!
போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
ROBERT JOHN KENNEDY: Nakkan Pullan Inscription | நல்லமனார் கோட்டை | Tam...
-
Bombay archdiocese studies porn addiction among youth Study aims at understanding those who use it, and finding programmes to help...