Monday, 30 December 2013

Pope delivers blunt Christmas message to Curia

Pope delivers blunt Christmas message to Curia

Avoid mediocrity, gossip and bureaucracy, he tells administrators.

 

Vatican City:  Pope Francis warned Vatican administrators Saturday that their work can take a downward spiral into mediocrity, gossip and bureaucratic squabbling if they forget that theirs is a professional vocation of service to the church.

Francis made the comments in his Christmas address to the Vatican Curia, the bureaucracy that forms the central government of the 1.2-billion strong Catholic Church. The speech was eagerly anticipated given that Francis was elected in March on a mandate to overhaul the antiquated and oftentimes dysfunctional Vatican administration.

Already, heads have started to roll: Just last week, Francis reshuffled the advisory body of the powerful Congregation for Bishops, the office that vets all the world's bishop nominations. He removed the arch-conservative American Cardinal Raymond Burke, a key figure in the U.S. culture wars over abortion and gay marriage, and also nixed the head of Italy's bishops' conference and another hardline Italian, Cardinal Mauro Piacenza, earlier axed as head of the Vatican office responsible for priests.

Other changes are on the horizon: In the coming weeks Francis will name his first batch of cardinals and in February will preside over the third summit of his "Group of Eight" cardinal advisers, who are expected to put forward a first round of proposals for revamping the Holy See bureaucracy.

Francis has said he wants a Vatican Curia that is more responsive to the needs of local bishops, who have long complained of Rome's slow or unhelpful interventions in their work caring for souls. Francis has said he wants the church as a whole to be less consumed with moralizing than showing mercy to the needy, wherever they are.

Francis thanked the cardinals, bishops and priests gathered in the Clementine Hall for the Christmas address for their work, diligence and creativity. Deviating from his prepared text, he said "There are saints in the Curia!"

But he also reminded them that Vatican officials must display professionalism and competence as well as holiness in their lives.

"When professionalism is lacking, there is a slow drift downwards toward mediocrity. Dossiers become full of trite and lifeless information, and incapable of opening up lofty perspectives," he said. "Then too, when the attitude is no longer one of service to the particular churches and their bishops, the structure of the Curia turns into a ponderous, bureaucratic customs house, constantly inspecting and questioning, hindering the working of the Holy Spirit and the growth of God's people."

Source: Huffington Post Religion

ROBERT JOHN KENNEDY: A Christian who won't serve others "is a pagan"

ROBERT JOHN KENNEDY: A Christian who won't serve others "is a pagan": A Christian who won't serve others "is a pagan" Once again, Pope Francis stresses the need for humility. ...

A Christian who won't serve others "is a pagan"

A Christian who won't serve others "is a pagan"

Once again, Pope Francis stresses the need for humility.

 

Vatican City:  In his Wednesday general audience this morning, Pope Francis stressed the importance of humility and service in the Christian life.

“It is an ugly thing when one sees a Christian who does not want to lower himself, who does not want to serve, a Christian who parades around everywhere. It’s terrible, no? That person isn’t a Christian: he is a pagan! The Christian serves (and) lowers himself,” said the Pope on Dec. 18 in St. Peter’s Square.

With Christmas approaching, Pope Francis focused on the great ‘gift’ of God in sending his son, who came humbly as a baby in Bethlehem.

“In Christmas, God reveals himself not as one who stands above and who dominates the universe, but as He who lowers himself,” explained the Pontiff.

“God lowers himself, coming down to earth as little and poor, showing that in order to be similar to him we must not place ourselves above others, but rather lower ourselves, place ourselves in service, make ourselves small with the small, poor with the poor.”

The incarnation of God made man, encouraged Pope Francis, should be a model for every Christian.

“We must make it so that our brothers and sisters never feel alone. Our presence in solidarity to their side expresses not only with words but with the eloquence of gestures that God is close to all.”

Moreover, God did not expect or demand perfection. “The presence of God in the midst of humanity is not carried out in an ideal, idyllic world, but in this real world, marked by many good and bad things, marked by division, cruelty, poverty, abuse, and war,” noted the Pope.

Still, “he chose to live our history as it is, with all the weight of its limitations and dramas. In so doing, he demonstrated in an unparalleled way his merciful inclinations and overflowing love toward his human creatures.”

Source: Catholic News Agency

ROBERT JOHN KENNEDY: கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்

ROBERT JOHN KENNEDY: கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்: கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும் கரடி பொம்மை என்றாலே குழந்தைகளுக்குத் தனிப்பட்ட ஆர்வம்தான். கிறிஸ்மஸ் காலத்தில் இந்தப் பொம்மை பெரு...

கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்

கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்

கரடி பொம்மை என்றாலே குழந்தைகளுக்குத் தனிப்பட்ட ஆர்வம்தான். கிறிஸ்மஸ் காலத்தில் இந்தப் பொம்மை பெருமளவில் விற்பனையாகும். பெரியவர்கள்கூட ஆசையுடன் வாங்கி வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தும் கரடி பொம்மைக்கு, ‘டெடி பேர் (Teddy Bear) என்ற பெயர் அமைந்ததற்கு, சுவாரசியமான ஒரு பின்னணி உண்டு.
கரடி பொம்மை முதன் முதலில் அமெரிக்காவில்தான் அறிமுகமானது. அமெரிக்க அதிபராக இருந்த தியடோர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். 1902ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று மிசிசிபி பகுதியில் அவர் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது காயத்துடன் அப்பக்கம் உலவிய சின்னக் கரடிக்குட்டி ஒன்றைக் கண்டார். அதைக் கண்டதும், அவருடன் வந்தவர்கள் கரடியைச் சுடுவதற்கு வலியுறுத்தினர். ஆனால், தியடோர் ரூஸ்வெல்ட் அதைச் சுடாமல் விட்டுவிட்டார்.
இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. பத்திரிகையில் கரடிக்குட்டிப் படத்துடன் செய்திகள் வந்தன. தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கு டெடி என ஒரு செல்லப் பெயர் உண்டு. அந்த நேரத்தில் கரடியையும், தியடோர் ரூஸ்வெல்ட்டையும் சேர்த்து வரைந்த கார்ட்டூன் படத்துக்கு ரூஸ்வெல்ட்டும் கரடியும் என்ற பொருளில், ‘டெடி பேர் என்று  பெயர் சூட்டியிருந்தனர். பொம்மை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தப் பரபரப்பை பயன்படுத்திக் கொண்டன. அன்று முதல் டெடி பேர் என்பது கரடி பொம்மையின் பெயரானது. அது மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி டெடி பேர் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் தி இந்து

ROBERT JOHN KENNEDY: செய்திகள் - 28.10.13

ROBERT JOHN KENNEDY: செய்திகள் - 28.10.13: செய்திகள் - 28.10.13 ------------------------------ ------------------------------ ------------------------------ ------------ 1. ...

செய்திகள் - 28.10.13

செய்திகள் - 28.10.13
------------------------------------------------------------------------------------------------------

1. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயர் அருள்பணி பீட்டர் அபீர்

2. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டம்

3. திருத்தந்தையின் Twitter செய்தி : நம் அன்னைமரியா முழுமையும் அழகு, ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர்

4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவை, பல்சமயத் தலைவர்கள்

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழி

6. இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குக் கிறிஸ்மஸ்

7. மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டாம், முதுபெரும் தந்தை 3ம் கிரகரி வேண்டுகோள்

8. சீனாவில் ஒரு குழந்தைத் திட்டம் தளர்த்தப்படுகிறது

------------------------------------------------------------------------------------------------------
1. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயர் அருள்பணி பீட்டர் அபீர்

டிச.28,2013. இந்தியாவில் சுல்தான்பேட்டை என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி அதன் முதல் ஆயராக அருள்பணி பீட்டர் அபீர் அந்தோணிசாமி அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் சாத்திப்பட்டு என்ற ஊரில் 1951ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி பிறந்த புதிய ஆயர் பீட்டர் அபீர், பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்திற்கென 1979ம் ஆண்டு மே முதல் தேதியன்று குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
திருப்பதி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் வரலாற்றில் முதுகலைப்பட்டமும், உரோம் பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் முதுகலைப்பட்டமும், உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் விவிலியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளவர் புதிய ஆயர் அபீர்.
சென்னை பூவிருந்தவல்லி புனித பவுல் விவிலிய நிறுவனத்தின் இயக்குனர், தமிழக ஆயர் பேரவையின் உதவிச் செயலர், தென்கிழக்கு ஆசிய கத்தோலிக்க விவிலியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழக விவிலிய, மறைக்கல்வி மற்றும் திருவழிபாட்டு மைய இயக்குனர் என பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ள புதிய ஆயர் அபீர், 2004ம் ஆண்டில் இவர் தொடங்கிய எம்மாவுஸ் ஆன்மீக மையத்தின் இயக்குனராக 2010ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டம்

டிச.28,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இச்சனிக்கிழமையன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுல்தான்பேட்டை மறைமாவட்டம், கோயம்புத்தூர், கோழிக்கோடு ஆகிய இரு மறைமாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தென் மேற்கே அமைந்துள்ள சுல்தான்பேட்டை மறைமாவட்டம்,  கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை உள்ளடக்கி, கோயம்புத்தூர், கோழிக்கோடு ஆகிய இரு மறைமாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
4,466 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சுல்தான்பேட்டை மறைமாவட்டத்தில் 30,975 கத்தோலிக்கர் உள்ளனர். மேலும், 21 பங்குகளும், 14 மறைமாவட்ட அருள்பணியாளர்களும், 18 துறவற அருள்பணியாளர்களும், 9 அருள்சகோதரர்களும், 102 அருள்சகோதரிகளும், 21 பள்ளிகளும், 12 மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களும் இப்புதிய மறைமாவட்டத்தில் உள்ளன.   
பாலக்காடு நகரிலுள்ள புனித செபஸ்தியார் ஆலயம், சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் பேராலயமாக இருக்கும்.
சுல்தான்பேட்டை என்ற புதிய மறைமாவட்டத்துடன் தமிழ்நாட்டில் இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இன்னும் 2 சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களும், ஒரு சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டமும் தமிழ்நாட்டில் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் Twitter செய்தி : நம் அன்னைமரியா முழுமையும் அழகு, ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர்

டிச.28,2013. நம் அன்னைமரியா முழுமையும் அழகு; ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர் என்று, இச்சனிக்கிழமையன்று தனது Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் புதிய ஆண்டில் அவர் நிகழ்த்தும் காலைத் திருப்பலிகளில் உரோம் மறைமாவட்டத்தைச் சார்ந்த பங்கு மக்கள் கலந்துகொள்வார்கள் என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
உரோம் மறைமவாட்ட ஆயராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைமவாட்டத்திலுள்ள அனைத்துப் பங்குகளுக்கும் செல்ல முடியாது என்பதால், அம்மக்கள் தங்கள் ஆயரோடு தொடர்பு கொள்வதற்கு உதவியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அருள்பணி லொம்பார்தி கூறினார்.
வருகிற சனவரி 7ம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் காலைத் திருப்பலியில் ஏறக்குறைய 25 விசுவாசிகள் வீதம் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அருள்பணி லொம்பார்தி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவை, பல்சமயத் தலைவர்கள்

டிச.28,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் இனப் பாகுபாட்டுச் சண்டை ஏற்படும்  நிலை உருவாகியிருப்பதால் அந்நாட்டுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர் என்று அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga அவர்களும், அந்நாட்டின் இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் Oumar Kobine Layama அவர்களும் இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.
இந்நாட்டின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Nzapalainga, மத்திய ஆப்ரிக்கக் குடியரசை கிழித்தெறியும் வன்முறைகளும், கொலைகளும், காட்டுமிராண்டித்தனமான செயல்களும் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.
அந்நாட்டின் அரசுத்தலைவர் Francois Bozizé, கடந்த மார்ச் மாதத்தில் Seleka எனப்படும் புரட்சிக்குழுவால் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதற்குப் பின்னர், அந்நாட்டில் ஆயுதம் ஏந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையே, முன்னாள் ப்ரெஞ்ச் காலனி நாடாகிய மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உதவியாக, பிரான்ஸ் தனது படைகளை அனுப்பியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழி

டிச.28,2013. புதிய ஆண்டைக் காண்பதற்காக உலகில் தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், சுதந்திரம், சனநாயகம், நீதி, அமைதி, நம்பிக்கை, சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளால் அமையப்பெற்ற புதிய சகாப்தம் உருவாவதற்கு, மியான்மார் தயாரித்து வருகிறது என்று அந்நாட்டு பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று கத்தோலிக்கர் கடைப்பிடிக்கும் உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி, மியான்மார் கத்தோலிக்கருக்கு நம்பிக்கையையும் ஒன்றிப்பையும் ஊக்குவிக்கின்றது என்று கூறியுள்ளார் யாங்கூன் பேராயர் Charles Bo.
கடந்த ஈராண்டளவாக மியான்மாரில் இடம்பெற்றுவரும் சனநாயகச் சுதந்திரத்துக்கு ஆதரவான நடவடிக்கைகள், இன்னும், அந்நாட்டில் இடம்பெற்றுவரும் பெரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் மூலம் அந்நாடு உலகுக்குத் தனது கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் Bo.
மியான்மார் மக்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகவும், மலேசியாவிலும் தாய்லாந்திலும் வாழும் இலட்சக்கணக்கான மியான்மார் குடியேற்றதாரரின் நிலை கவலைதருவதாக உள்ளது எனவும் கூறிய பேராயர் Bo,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews                

6. இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குக் கிறிஸ்மஸ்

டிச.28,2013. கொண்டாட்டம் மற்றும் பகிர்வின் காலமாக இருக்கும் கிறிஸ்மஸ் காலத்தில், பிரிவினைகளையும் தடுப்புச்சுவர்களையும் கடந்து எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்வதென்று சிறாருக்கும் வயதுவந்தோருக்கும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் சமூக மற்றும் சமய நிறுவன இயக்குனர் அருள்பணி அசோக் ஸ்டீபன் கூறினார்.
நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்மஸ் விழாவைச் சிறப்பித்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் விளக்கிய அருள்பணி ஸ்டீபன், இவ்விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தவர்களில் பலர், சிறார் எனவும், இச்சிறாரில் ஏறக்குறைய எல்லாருமே இந்துக்கள் எனவும் கூறினார்.
இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சிறாரில் பலருக்குத் தந்தையில்லை மற்றும் அவர்களின் தாய்மார் தங்களின் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக எந்த வேலையையும் செய்யத் தயாராய் இருப்பவர்கள் என்றும் கூறிய அருள்பணி ஸ்டீபன்,  இனம், சாதி, மதம் என்ற பாகுபாடு பாராமல் அனைத்துக் குடிமக்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் பாதிப்பு இச்சிறாரில் இன்றும் தெரிவதாக அக்குரு மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews

7. மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டாம், முதுபெரும் தந்தை 3ம் கிரகரி வேண்டுகோள்

டிச.28,2013. ஆலயங்கள் அழிக்கப்பட்டு, பங்குத்தளங்கள் கைவிடப்பட்டு, சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட துன்பநிலையை எதிர்கொள்ளும் மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் தங்களின் பூர்வீக இடங்களிலே தொடர்ந்து தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அந்தியோக்கியாவின் கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் கிரகரி.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கென உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை 3ம் கிரகரி அவர்கள், தம் மக்கள் தாங்கள் வாழும் கிராமங்கள் அல்லது நகரங்களில் தொடர்ந்து வாழுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாம் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டாலும், இக்கிறிஸ்தவர்களின் இருப்பை முஸ்லிம் பிரதிநிதிகள் மிகவும் விரும்புகின்றனர் என்றும் முதுபெரும் தந்தையின் அறிக்கை கூறுகிறது.   
முஸ்லிம் அரபு உலகத்துக்கு கிறிஸ்தவர்கள் தேவைப்படுகின்றனர் என்று எழுதியுள்ள முதுபெரும் தந்தை 3ம் கிரகரி, மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் இன்றி அரபு உலகம் வாழ முடியாது என, தன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews

8. சீனாவில் ஒரு குழந்தைத் திட்டம் தளர்த்தப்படுகிறது

டிச.28,2013. சீனாவில்  அமலில் இருந்த ஒரு குழந்தைக் கொள்கை என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று இச்சனிக்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வெளியிட்டுள்ள Xinhua என்ற சீனாவின் அரசு செய்தி நிறுவனம், ஒரு குழந்தை உள்ள தம்பதியினர் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் தேசிய மக்கள் கட்சியின் நிலைக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள மக்கள்தொகை விகிதத்தைக் கருத்தில்கொண்டு குடும்பக் கட்டுப்பாடு விதிகளைத் தளர்த்த வேண்டும் அல்லது ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் மக்கள்தொகை வெகு வேகமாகப் பரவி வந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1970களின் இறுதியில் ஒரு குழந்தைக் கொள்கை என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவந்தது அந்நாட்டு அரசு.  
2050ம் ஆண்டுக்குள் சீனாவின் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்டவராய் இருப்பார்கள்.

ஆதாரம் : BBC
 

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...