Thursday, 8 May 2025

267 -ஆவது புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார்

 

267 -ஆவது புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார்


சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைப்போக்கியிலிருந்து வெண்புகை வெளிவந்து, திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மே 8 வியாழன் உரோம் உள்ளூர் நேரம் மாலை  6.08 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 9.38 மணியளவில் முதல் வாக்குப்பதிவிற்கான முடிவுகளை தெரிவிக்கும் வண்ணம் சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைப்போக்கியிலிருந்து வெண்புகை வெளிவந்து, திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது.

மேலும் அடுத்த 3 நிமிடங்களில் 5 நிமிடங்களில் என தொடர்ந்து மீண்டும் வெண்புகை வெளியேறி திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது. மக்கள் அனைவரும் கரவொலி எழுப்ப, பெருங்கோவிலின் மணிகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன.

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் நாள் முதல் இன்று வரை ஒவ்வொருமுறையும் புகை வெளிவரும் நேரத்தை எதிர்பார்த்து மக்கள் வத்திக்கான் வளாகத்தில் காத்திருந்தனர். மே 7 புதன் மாலை 45,000 பேரும் மே8 வியாழன் காலை 15,000 பேரும் மாலையில் ஆயிரக் கணக்கான மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். உலகளாவிய கத்தோலிக்க திருஅவையின் தலைவரை இந்த உலக மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற செய்தித்தொடர்பாளர்கள் புகைப்படம் மற்றும் காணொளி வாயிலாக தங்களது நாடுகளில் கண்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வத்திக்கானில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்து ஒளிபரப்பி வந்தனர்.

No comments:

Post a Comment