An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Sunday, 23 November 2025
கனடாவின் கீவாடின்-லெ பாஸின் பேராயராக ஒரு தமிழர்!
கனடாவின் கீவாடின்-லெ பாஸின் பேராயராக ஒரு தமிழர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கனடாவின் கீவாடின்-லெ பாஸ் பெருநகரத்தின் புதிய பேராயராக, அமலமரி சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் சூசை சேசு, OMI அவர்களை நியமனம் செய்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அருள்பணியாளர் சூசை சேசு அவர்கள், முன்பு எட்மண்டன் மறைமாவட்டத்தில் உள்ள பூர்வகுடி திருஇருதய பங்குத்தளத்தின் பங்குத் தந்தையாகவும் மாநிலத் தலைவரின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
தந்தை சூசை ஜேசு அவர்கள் 1971-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதியன்று, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள புஷ்பவனத்தில் பிறந்தார். இவர் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள ஏதெனியம் தர்மராம் வித்யா க்ஷேத்திர பாப்பிறைக் கல்லூரியில் (Pontifical Athenaeum Dharmaram Vidya Kshetram) தனது தத்துவயியல் படிப்பைத் தொடர்ந்தார்.
மேலும் மத்திய பிரதேசத்தின் அஷ்டாவில் உள்ள கிறிஸ்ட் பிரேமாலயா இறையியல் கல்லூரியில் (Khrist Premalaya Institute of Theology in Ashta) தனது இறையியல் படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து ஒட்டாவாவில் உள்ள புனித பவுல் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணிசார் ஆற்றுப்படுத்துதல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
2000 -மாம் ஆண்டு அமலமரி சபையில் இறுதி அர்ப்பணத்தை வழங்கிய பிறகு, அதே ஆண்டு ஜூலை 27-ஆம் தேதியன்று, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
பேராயராக நியமனம் பெற்றுள்ள அருள்பணியாளர் ஜேசு அவர்கள், இந்தியா மற்றும் கனடா நாடுகளின் பல்வேறு இடங்களில் பங்குப் பணியாளராகப் பணியாற்றியுள்ளார்.
கீவாடின்-லெ பாஸின் பேராயராக அவர் நியமிக்கப்பட்டது, திருஅவைக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்புள்ள பணிகளில், குறிப்பாக மேய்ப்புப்பணி மற்றும் மறைபரப்புப் பணிகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
கனடாவின் மிகப்பெரிய மறைமாவட்டங்களில் ஒன்றான கீவாடின்-லெ பாஸ் மறைமாவட்டம், பரந்த வடக்குப் பகுதிகளை உள்ளடக்கியது. மேலும் அருள்பணியாளர் சேசு அவர்களின் பரந்துபட்ட பங்குப் பணி மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணி அனுபவங்கள் யாவும், தலத்திருஅவைக்கு நிறைந்த பயனைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் வடக்கு மற்றும் பூர்வகுடி சமூகங்களில் திருஅவையின் இருப்பு மற்றும் வெளிப்பாட்டை வலுப்படுத்த திருத்தந்தையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நியமனம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, 19 November 2025
Sunday, 2 November 2025
Thursday, 23 October 2025
Monday, 20 October 2025
Sunday, 19 October 2025
Wednesday, 15 October 2025
Tuesday, 30 September 2025
Thursday, 25 September 2025
Tuesday, 23 September 2025
Wednesday, 10 September 2025
திருநெல்வேலி தூய அடைக்கல அன்னை ஆலயம்
திருநெல்வேலி தூய அடைக்கல அன்னை ஆலயம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்னை ஓர் அதிசயம் என்ற நமது நிகழ்வில் இன்று நாம் தென்தமிழகத்தின் திருநெல்வேலி டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தூய அடைக்கல அன்னை ஆலயம் பற்றிக் காணலாம்.
அடைக்கலமும் ஆறுதலுமான ஆண்டவரின் தாயாகத் திகழ்பவர் தூய அன்னை மரியா. இறைமகன் இயேசுவை தனது கண்ணின் கருமணியெனக் காத்து அடைக்கலம் கொடுத்தவர். உலகை ஆளும் பரமனின் மைந்தனுக்கே அடைக்கலமாக திகழ்ந்து இவ்வுலக மக்களை காக்கும் அடைக்கல அன்னையாக இன்று வரைத் திகழ்கின்றார். அந்த அன்னையின் அடைக்கலத்தில் அகமகிழ்ந்து வாழவும் அவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்து நிற்கவும் ஏராளமான ஆலயங்கள் அன்னை மரியா பெயரில் மக்களால் கட்டப்பட்டுள்ளன. அன்னைக்கு நவநாள்களும், திருப்பலியும் சிறப்பு செப வழிபாடுகளும் இன்று வரை எண்ணற்ற மக்களால் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அன்னை மரியா மேல் அளவற்ற அன்பும் பாசமும் கொண்ட தமிழ்ப்புலவர் வீரமாமுனிவரின் அருளாலும் அளப்பரிய செயலாலும் தமிழகத்தில் பல்வேறு அன்னை மரியா ஆலயங்கள் உருவாகின. அதிலும் குறிப்பாக அடைக்கல அன்னை மேல் அன்பு கொண்ட வீரமாமுனிவர் தான் பணியாற்றிய இடங்களிலெல்லாம் அடைக்கல அன்னைக்கென தனி சிற்றாலயங்களை தொடக்கத்தில் குடிசையாக அமைத்தார். ஆப்படி உருவானதுதான் இன்று நாம் காண இருக்கும் திருந்லெவேலி டவுணில் உள்ள தூய அடைக்கல அன்னை ஆலயம்.
ஆலய வரலாறு
கி.பி 1650-ஆம் ஆண்டுகளில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் மறைப்பணி வாயிலாக கிறிஸ்துவை திருநெல்வேலிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் உணர்ந்து கொண்டனர். இத்தாலியில் பிறந்த காண்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி என்னும் பெயர் கொண்ட வீரமாமுனிவர், கி.பி 1711 ஆம் ஆண்டு காமநாயக்கன்பட்டியில் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். அண்டிவருவோருக்கெல்லாம் அடைக்கல தாயாக அன்னை மரியாவை அவர் எடுத்துரைத்தார். அன்னை மரியா குறித்து அவர் எடுத்துரைத்தக் கருத்துக்களை உள்ளன்போடு ஏற்றுக்கொண்ட மக்கள் அன்னையின் திருக்காவலில் தாழ்பணிந்தனர். இதன் விளைவாக வீரமாமுனிவர் தான் கட்டிய குடிசை ஆலயங்களுக்கெல்லாம் அன்னை மரியாவின் பெயரையே சூட்டினார். இதில் ஏலாக்குறிச்சி, வடுகர்பேட்டை, பூண்டி, காமநாயக்கன்பட்டி, ஆலங்குளம் அருகில் உள்ள ஆண்டிப்பட்டி, தஞ்சையில் உள்ள அடைக்கல மாதா ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வீரமாமுனிவர் தனது பணிக்காலத்தில் நெல்லை டவுன் பகுதியிலும் பணிபுரிந்துள்ளார்.
இந்த வழித்தோன்றலில் நெல்லை மாநகரில் கி.பி 1787 ஆம் ஆண்டு தூய அடைக்கல அன்னைக்கென குடிசை ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. இந்த ஆலயத்தைச் சுற்றி குறைந்த அளவே கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்ததால் இதனை பராமரிக்க இயலாமல் போகவே, நாளடைவில் ஒரு தம்பதியர் கட்டுப்பாட்டில் தனியார் ஆலயமாக அது விளங்கியது.
கி.பி.1962 ஆம் ஆண்டு பேட்டை பங்குத்தந்தையாகப் பணியாற்றிய இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை ஜார்ஜ் ஜோசப் சே.ச அவர்கள் பணிக்காலத்திலும், 1971 ம் ஆண்டில் பொறுப்பேற்ற அருள்தந்தை மரிய மிக்கேல் பணிக்காலத்திலும் தூய அடைக்கல அன்னை ஆலயத்தை, மறைமாவட்டத்திற்குத் திரும்பப் பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. பின்னர் அருள்பணி. எம். அருள் அடிகளார் பணிக்காலத்தில், பல நல்லுள்ளங்களின் இடைவிடாத முயற்சியின் பலனாக கி.பி 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆலயம் மற்றும் நிலம் மறைமாவட்டத்திற்கு இலவசமாக எழுதிக் கொடுக்கப் பட்டது. ஆலயத்தை திறப்பதற்காக கிளைப்பங்குகளின் பெரியவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு, அருள்பணி. எம். அருள் அடிகளார் ஆலயத்தி திறந்து வைத்து செபித்தார்கள்.
ஆலயத்தின் சிறப்பு
ஆண்டுகள் பல கடந்த பின்னரும் அடைக்கல அன்னையின் திரு உருவமானது எவ்வித சேதமும் அடையாமல் புன்னகை பூத்த முகமாகவே இருந்தது. ஆலயத்தின் மேற்கு ஒளிவட்டப் பகுதி வழியாக, செப்டம்பர் மாதக் கடைசி சனிக்கிழமை மாதாவின் முகத்தில் ஒளி வந்து விழுமாறு இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. எனவே அந்நிகழ்வைச் சிறப்பிக்கும் பொருட்டு செப்டம்பர் மாதக் கடைசியில் ஆலயத் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. அருள்பணி. எம். அருள் அவர்களால் 1982 மார்ச் 28ஆம் நாணன்று ஆலய நிர்வாகம் ஏற்படுத்தப் பட்டது. 1982 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. லூர்துராஜ் பணிக்காலத்தில் ஆலய முன்புற வாசல்களை விரிவுபடுத்தி புதுப்பித்து திருப்பலி நடத்த வசதியாக மாற்றம் செய்யப்பட்டது. 1983 ஆம் ஆண்டு அடைக்கல அன்னை சிற்றாலயத்தில் பாலர்பள்ளி துவக்கப்பட்டு, 1984 ஆம் ஆண்டு மறைமாவட்ட ஆயர் இருதயராஜ் தலைமையில் முதன் முதலாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1985 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1986 ஆம் ஆண்டு ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 27.12.1987 அன்று மேதகு ஆயர் இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அதன்பின் 1987 ஆம் ஆண்டு (1787-1987) ஆலயத்தின் 200 -வது ஆண்டாக சிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 12.02.1989 அன்று பேட்டை பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. S. சந்தியாகு அவர்கள் ஊர்நல கமிட்டியை உருவாக்கி, ஊர் பெரியவர்கள் பங்குத்தந்தையோடு இணைந்து பணிசெய்யும் வாய்ப்பை உருவாக்கினார். இவரது பணிக்காலத்தில் முதன்முதலாக திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு, அசிசி சபை அருள்சகோதரிகளுடன் அடைக்கல அன்னை பாலர்பள்ளி தொடங்கப் பட்டது. 1992 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. வியானி அவர்களும், 1993 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. பீட்டர் அடிகளாரும் சிறப்புற பணியாற்றினர். 1999 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. V. K. S. அருள்ராஜ் அவர்கள் பணிபுரிந்தார்கள். 2002 ஆம் ஆண்டு முதல் பேட்டை பங்கின் முதல் உதவிப் பங்குத்தந்தையாக அருள்பணி. மை. பா. சேசுராஜ் அவர்கள் பொறுப்பேற்று அன்பியங்களை தொடங்கினார்.
2003 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக அருள்பணி. சூசை மரியான் அவர்களும், உதவிப் பங்குத்தந்தையாக அருள்பணி. வியாகப்ப ராஜூ அவர்களும் பணியாற்றினர். திருப்பலி பீடம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அருள்பணி. சகாயராஜன், அருள்பணி. செல்வராஜ் பொறுப்பேற்று, திருவிழாக் காலங்களில் நற்கருணை பவனி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பேட்டை பங்கிலிருந்து பிரித்து, நெல்லை டவுன் அடைக்கல மாதா ஆலயத்தை பங்கு ஆலயமாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 05.06.2005 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. கண்டியபேரி, டவுன் புனித செபஸ்தியார் ஆலயம், டவுன் புனித சவேரியார் ஆலயம், கருப்பன்துறை, லாலுகாபுரம், காந்திநகர், அபிஷேகப்பட்டி, வெள்ளாளன்குளம், சீதபற்றப்பநல்லூர், கருவநல்லூர், உகன்தான்பட்டி ஆகியன இதன் கிளைப்பங்குகளாயின. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. அந்தோணி சேவியர் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார். பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. திருவிழாவிற்கு முதன் முதலாக மாதாவிற்கு சப்பரம் எடுத்து வீதியுலா வரச் செய்தார். கிளைப்பங்குகளான டவுன் புனித செபஸ்தியார் ஆலயத்தையும், கருப்பந்துறை புனித வியாகப்பர் ஆலயத்தையும் நற்கருணைப்பேழை -யுடன் புதிதாகக் கட்டினார்.
இரண்டாவது பங்குத்தந்தையாக அருள்பணி. அருள் அம்புரோஸ் அவர்கள் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொறுப்பேற்று ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி, 2011 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் அரங்கம் கட்டினார். 2011 ஆம் ஆண்டு அருள்பணி. அந்தோணி குரூஸ் அவர்கள் பொறுப்பேற்று, இளையோரை ஒருங்கிணைத்து ஊக்குவித்தார். 2012 ஆம் ஆண்டு 74 அடி உயரம் கொண்ட ஒரு மணிக்கோபுரம் கட்டினார். சிற்றாலயம் கட்டப்பட்ட 225 -வது ஆண்டு நினைவாகவும், புதிய ஆலயம் கட்டப்பட்ட 25 -வது ஆண்டு நினைவாகவும் மரியன்னைக்கு முடிசூட்டுதல், அன்னை தெரசா ஆடை தயாரிப்பகம் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னையின் திருக்காட்சி எழில்மாட திறப்பு, அடைக்கலம் நீயே குறுந்தகடு வெளியீடு ஆகிய ஐம்பெரும் விழாவினை சிறப்பாக நடத்தினார். 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அருள்பணி. மை.பா. சேசுராஜ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று பங்கை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார். (இணையதள உதவி)
இன்று வரை அடைக்கல அன்ன்னையின் அருளால் மக்கள் வளமோடும் நலமோடும் வாழ்ந்து வருகின்றனர். நாமும் அடைக்கல அன்னையின் பாதுகாவலில் நம்மை அர்ப்பணித்து வாழ்வோம். நம்மை அணுகி வரும் துன்ப துயரங்களை எல்லாம் அன்னை மரியா ஏற்று தீர்த்து வழிநடத்த அருள்வேண்டுவோம்
கடவுளின் அருளைப் பெற்றுத் தரும் அன்னை மரியா
கடவுளின் அருளைப் பெற்றுத் தரும் அன்னை மரியா
மெரினா ராஜ் - வத்திக்கான்
பல நூற்றாண்டுகளாக மக்களால் வணங்கப்பட்டு வரும் அன்னை மரியா, கிறிஸ்துவின் உடலின் அனைத்து உறுப்பினர்களாம் மக்களை அரவணைத்துக் காக்கின்றார் என்றும், திருஅவையில் நீண்ட காலமாக கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் இருந்து கடவுளின் அருளை நமக்குப் பெற்றுத்தருபவராக இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜெர்மனியில் உள்ள Köln இல் உள்ள Kupfergasse கருப்பு நிற அன்னை மரியா ஆலயம் அர்ச்சிக்கப்பட்ட 350-ஆவது ஆண்டை சிறப்பிக்க திருத்தந்தையின் சார்பில் கர்தினால் கிறிஸ்டொஃப் கொன்போர்ன் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 9, செவ்வாயன்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி வியன்னா உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயரான கர்தினால் கிறிஸ்டொஃப் கொன்போர்ன் அவர்களை செப்டம்பர் 14, அன்று ஜெர்மனியில் நடைபெறும் 350 ஆவது ஆண்டு குஃபெர்காசே கருப்பு நிறை அன்னை மரியா ஆலயத்தின் விழாவில் பங்கேற்க நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
லோரெட்டோவின் புனித கன்னி மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது 1775 ஆம் ஆண்டு செப்டம்பர் 8, அன்று புனிதப்படுத்தப்பட்டு 350 ஆண்டுகள் கடந்த நிலையில், குப்பெர்காஸ் நகரம் மற்றும் கொலோன் மறைமாவட்டத்தின் இதயமாக விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டு மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
அன்னை மரியா நம் அனைவருக்கும் அவரது மகனாகிய கிறிஸ்துவின் மீது ஒரு உண்மையான, வலுவான மற்றும் மீற முடியாத நம்பிக்கையை இந்த யூபிலி ஆண்டில் பெற்றுத்தரட்டும் என்றும், விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்த தாயாம் மரியாவிடம் பிறந்தவரும், விண்ணையும் மண்ணையும் உருவாக்கிய தந்தையிடமிருந்து பிறந்தவருமான இயேசுவை நமக்கு தருகின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – புதிய மறைசாட்சியாளர்கள், நம்பிக்கையின் சான்றாளர்களுக்கான நினைவு நாள்
திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – புதிய மறைசாட்சியாளர்கள், நம்பிக்கையின் சான்றாளர்களுக்கான நினைவு நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 14, ஞாயிறன்று திருஅவையில் புதிய மறைசாட்சியாளர்கள், நம்பிக்கையின் சான்றாளர்களுக்கான நினைவு நாளானது சிறப்பிக்கப்படுகின்றது. எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் திருஅவையில் வாழ்ந்தௌ கிறிஸ்தவ நம்பிக்கைக்காக தங்களது உயிரைக் கையளித்த புதிய மறைசாட்சியாளர்கள் மற்றும் நம்பிக்கையின் சான்றுகளாகத் திகழ்ந்தவர்களை நினைவு கூரும் நாளானது கொண்டாடப்பட இருக்கின்றது.
21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைசாட்சிகளாகத் தங்களது உயிரைக் கையளித்த அனைவரையும் நினைவுகூர்து செபிக்கும் இந்நாளைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சிறப்பிக்க இருக்கின்றார். செப்டம்பர் 14, ஞாயிறு உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு சிறப்பு வழிபாட்டிற்குத் தலைமையேற்று சிறப்பு செய்ய இருக்கின்றார் திருத்தந்தை.
இந்நிகழ்வு குறித்த ஏற்பாடுகளை கிறிஸ்தவ ஒன்றிப்பு அலுவலகத்தின் பொறுப்பாளர் பேரருள்திரு மார்கோ ஞாவி, பல்சமய உரையாடல், உரோம் மறைமாவட்டத்தின் புதிய கலாச்சாரம், புதிய மறைசாட்சியாளர்களுக்கான கமிசனின் செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்த இருக்கின்றன. திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க எந்த விதமான நுழைவுச்சீட்டும் தேவையில்லை எனினும் நிகழ்வு துவங்க ஒருமணி நேரத்திற்கு முன்னதாக வருவது நலம் என்றும் இவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 14 அன்று நடைபெறும் கொண்டாட்டம், யூபிலி ஆண்டு முழுவதும் உரோமில் நடைபெறும் கிறிஸ்தவ கொண்டாட்டத்தின் இணைப்பாக இருக்கும் என்று ஆணையத்தின் தலைவர் பேரருள்திரு ஃபேபியோ ஃபேபீன் அவர்கள் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 14ம்,அன்று திருச்சிலுவை மகிமைக்கென குறிக்கப்பட்ட நாளாக கத்தோலிக்கத் திருஅவையில் மட்டுமல்லாது பிற தலத்திருஅவை ஆலயங்களிலும் சிறப்பாகக் கொண்டாட இருக்கும் நாளில் புதிய மறைசாட்சியாளர்களுக்கான நாளும் கொண்டாடப்பட இருப்பது மிகச்சிறப்பான ஒன்று என்றும் எடுத்துரைத்துள்ளார். மேலும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பிறந்த நாளன்று இந்த நாள் கொண்டாடப்படுவது மேலும் சிறப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவைப் பின்பற்றி, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதன் வழியாகவும், அவருடைய அன்பின் பரிசை வரவேற்பதன் வழியாகவும், நம் சிந்தனை முறையை மாற்றியமைப்பதன் வழியாகவும்,நாமும் கடவுளின் செயலைக் கற்றுக்கொள்ளலாம்: கடவுளின் செயல், பணியாற்றுவது. பணியாற்றுவதற்கான கடவுளின் செயல் மூன்று வார்த்தைகளை உள்ளடக்கியது. அவை நெருக்கம், இரக்கம் மற்றும் மென்மை. கடவுள் இறைப்பணியாற்ற நம்மை நெருங்கி வருகிறார்; இரக்கமுள்ளவராக நம்மை மாற்றுகிறார்; மென்மையான அன்பாக நம்மை மாற்றுகின்றார். நாம் பிறருக்காகப் பணியாற்றக் கற்றுக்கொண்டால், நமது ஒவ்வொரு கவனமும் அக்கறையும், மென்மையின் ஒவ்வொரு வெளிப்பாடும், கருணையின் ஒவ்வொரு செயலும் கடவுளின் அன்பின் பிரதிபலிப்பாக மாறும். என்பதை உணர்ந்து வாழ்வோம் இவ்வுலகில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் புனிதர்களாக வாழப் படைக்கப்பட்டவர்கள். சிலர் அப்புனித நிலையை இயல்பான தங்களது வாழ்வின் மூலம் பெறுகின்றனர். மற்றும் சிலர் மறைசாட்சியாக் கிறிஸ்துவிற்காக இரத்தம் சிந்தி தங்களை அர்ப்பணித்துப் பெற்றுக்கொள்கின்றனர். நாமும் புனிதர்களாக மாற முயல்வோம். மறைசாட்சிய வாழ்வினை மனதார ஏற்போம். மறைசாட்சிகளின் அருளினை நாடுவோம்.
Tuesday, 9 September 2025
Wednesday, 20 August 2025
Sunday, 17 August 2025
Saturday, 16 August 2025
Friday, 18 July 2025
Sunday, 13 July 2025
Saturday, 12 July 2025
Friday, 11 July 2025
Thursday, 10 July 2025
Monday, 7 July 2025
Sunday, 6 July 2025
Saturday, 5 July 2025
Friday, 4 July 2025
Thursday, 26 June 2025
Sunday, 22 June 2025
Friday, 20 June 2025
Thursday, 19 June 2025
Wednesday, 18 June 2025
Sunday, 15 June 2025
Wednesday, 11 June 2025
Thursday, 5 June 2025
Monday, 2 June 2025
Sunday, 1 June 2025
Saturday, 31 May 2025
Pope Leo XIV calls for missionary renewal in France
Pope Leo XIV calls for missionary renewal in France
By Jean-Benoît Harel
Three saints as role models for navigating the challenges faced by the modern French Church. That’s the idea at the heart of a new letter sent by Pope Leo XIV to the French Bishops' Conference, stressing the significance of the upcoming 100-year anniversary of the canonization of three French saints.
“The magnitude of the challenges facing the Church in France a century later, and the ever-relevant nature of these three models of holiness in confronting them, compel me to invite you to give this anniversary special prominence,” Pope Leo XIV writes.
Three French saints
First, Saint Thérèse of Lisieux, a 19th-century French Carmelite nun who died at age 24 and was declared a Doctor of the Church and Patroness of the Missions, was canonized on May 17, 1925.
Pope Leo XIV describes her as: “The great Doctor in scientia amoris [the science of love] whom our world needs—she who ‘breathed’ the Name of Jesus at every moment of her life, with spontaneity and freshness.”
Two weeks later, Pius XI canonized two priests. The first of these was Saint John Eudes (1601–1680), a French priest, founder of the Congregations of Jesus and Mary (Eudists) and of Our Lady of Charity. He dedicated his life to the formation of priests and to supporting women in financial or social difficulty, and promoted devotion to the Hearts of Jesus and Mary.
The second priest was Saint Jean-Marie Vianney (1786–1859), more commonly known as the Curé of Ars, a French priest celebrated for his pastoral zeal, confessional practice, and his intense prayer life. He famously said that “the priesthood is the love of the Heart of Jesus.”
'Models to imitate'
Saying he was “happy” to address a letter to the pastors of the Church in France, Pope Leo XIV highlighted Pope Pius XI’s intention in canonizing these three saints: he wanted to make them “Teachers to be listened to, models to be imitated, and powerful intercessors to pray to and invoke.”
“They,” the Pope wrote, “loved Jesus without reserve—in a simple, strong, and authentic way; they experienced His goodness and tenderness in a particular daily closeness, and they bore witness to it with admirable missionary fervour.”
Quoting Pope Francis’ most recent encyclical Dilexit nos (“He loved us”), dedicated to the Sacred Heart, the Holy Father proposed a missionary roadmap for France: “Help everyone discover the tender and preferential love Jesus has for them—so powerful it can transform their lives.”
France’s Christian heritage
Celebrating the centenary of the canonization of these three saints is “an invitation to give thanks to the Lord for the wonders He has accomplished in this land of France over many centuries of evangelization and Christian life,” writes the Holy Father, adding that “saints do not arise spontaneously, but by grace, emerge from living Christian communities that knew how to pass on the faith.”
“This Christian heritage still belongs to you,” Pope Leo said. “It still deeply permeates your culture and remains alive in many hearts. That is why I hope that these celebrations will not merely nostalgically recall a past that may seem gone, but will awaken hope and spark a new missionary momentum.”
'Renewing wonders'
After having given these three saints to France, God can again “renew the wonders He accomplished in the past,” writes Pope Leo XIV. “Could Saint Thérèse not be the Patroness of the Missions in the very lands where she was born?”
The two priestly figures can also give courage to young men to respond to God’s call, especially in a time of priest shortages and when “priests are increasingly burdened and tested.”
Finally, the Holy Father invoked the intercession of the three saints canonized in 1925 for France and for the country’s Catholics, who press on “amid contrary and sometimes hostile winds of indifference, materialism, and individualism.”
The Ascension of the Lord
The Ascension of the Lord
As the Church celebrates the Ascension of the Lord, Fr Edmund Power, OSB, reflects on how it reminds us that "...we too may rise up to the heavenly realms."
By Fr Edmund Power, OSB
In many countries of the world, the Ascension of the Lord is not celebrated on its traditional day, the Thursday of the Sixth week of Easter, but on the following Sunday. As we approach the end of the Easter Season, we remember liturgically this enigmatic moment in the earthly life of Jesus. Luke, this year’s evangelist, tells us that he parted from them, and was carried up into heaven. He tells us again in the first reading from the Acts: he was lifted up, and a cloud took him out of their sight.
Let us consider the verb “lifted up” and how it might give hope to our lives. While the first three Gospels all describe the Ascension, this event does not appear in John. In fact, the fourth evangelist offers us a radically different way of describing the moment. There are three references in John to Jesus being “lifted up from the earth”: all refer to the crucifixion which is somehow identified with the exaltation. Lifted up on the cross is at the same time lifted up in glory.
The Mass prayers of the Ascension remind us of a central fact: “the Ascension of Christ … is our exaltation” (Collect); “we pray … that we too may rise up to the heavenly realms” (Prayer over the Offerings); “that Christian hope may draw us onward to … you” (Prayer after Communion). This is our hope, our desire, our destiny. Meanwhile, however, we are left behind to shoulder our responsibility, but not before we have received the power of the Holy Spirit. The Ascension may be seen as the celebration of our coming of age, when, no longer accompanied by Jesus in the same way, we must dedicate ourselves with maturity and courage to the spreading of the Gospel.
People are sometimes discouraged by the fact that God does not magically intervene to put right the problems of the world. But has he not left us with the challenge to grow up and exercise the gifts he has given us, and supremely, that of the Holy Spirit whom we shall celebrate next Sunday at the culmination of the Easter season? For those who do not observe the Ascension this Sunday, the gospel of the seventh Sunday of Easter is taken from the priestly prayer of Jesus at the Last Supper. He implores the Father for those who believe in me through their (the apostles’) word. He expresses the profound and constant union between the Father, the Son and those who believe. He prays for the unity of believers among themselves, so that his message may touch the world. It is a message pertinent to every level of human life. As we await the Spirit of truth, we can remember the words of Pope Leo addressed to the diplomatic corps on May 16 this year: “truly peaceful relationships cannot be built, also within the international community, apart from truth”.
Friday, 30 May 2025
புதிய தோற்றத்தில் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்!
புதிய தோற்றத்தில் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்!
திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Vatican.va மாற்றியமைக்கப்பட்டு திருத்தந்தை மற்றும் திருஅவையின் படிப்பினைகளை எளிதில் அணுகக்கூடிய முறையில் புதிய மற்றும் நவீன வடிவமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
மே 29, வியாழக்கிழமையன்று, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Vatican.va மாற்றியமைக்கப்பட்டு திருத்தந்தை மற்றும் திருஅவையின் படிப்பினைகளை எளிதில் அணுகக்கூடிய முறையில் புதிய மற்றும் நவீன வடிவமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது எனத் திருப்பீடத் தகவல்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான படிப்பினைகள் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் உள்ளார்ந்த அமைப்புகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு மிக அருகில் கொண்டுவர முயல்வதே இந்த இணையதளத்தின் நோக்கம் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பீடத்தின் இந்தப் புதிய முகப்புப் பக்கம் தெளிவான மற்றும் பார்வையாளர்கள் எளிதாக அணுகக்கூடிய அனுபவத்தை வழங்கும் வகையிலும், திருத்தந்தை பதினான்காம் லியோ மற்றும் முந்தைய திருத்தந்தையர்களின் படிப்பினைகள் குறித்த ஆவணங்களை எளிதில் அணுகக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது திருப்பீடத் தகவல்தொடர்புத் துறை.
இந்தப் புதிய முகப்புப் பக்கம், 1995-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இணையவழியில் இயங்கிவரும் திருப்பீட இணையதளத்தின் பெரிய வரலாற்றுப் பாரம்பரியத்தை புதிய வடிவத்தில் மாற்றும் பல கட்டங்களால் ஆன வளர்ச்சி மற்றும் திருஅவை ஆசிரிய பணிகளின் ஒரு பகுதியாகும் என்றும் உரைத்துள்ளது.
இப்புதிய இணையதளக் கட்டமைப்பை உருவாக்க ஆவணக்குழு, தகவல் தொழில்நுட்ப குழு, எனப் பல்வேறு திறமைகளைக் கொண்ட குழுக்கள் இணைந்து பணியாற்றியுள்ளன என்றும் எடுத்துரைத்துள்ளது.
சிறப்பாக, பெரு நாட்டை சேர்ந்த வரைகலை வடிவமைப்பாளர் ஜுவான் கார்லோஸ் இடோ அவர்கள் இந்தத் திட்டத்திற்கு உயிரூட்டினார் என்றும், இவர் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையினால் நடத்தப்படும் "டிஜிட்டல் உலகில் நம்பிக்கை தொடர்பு" என்ற திட்டத்தின் முதல் குழுவைச் சேர்ந்த முன்னாள் மாணவர் என்றும் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
Thursday, 29 May 2025
Tuesday, 27 May 2025
Fake message to President of Burkina Faso attributed to Pope
Fake message to President of Burkina Faso attributed to Pope
A 36-minute speech in English, created with artificial intelligence, has been uploaded to YouTube, falsely attributing to Pope Leo XIV words for Ibrahim Traoré, President of Burkina Faso.
By Vatican News
“To His Excellency President Ibrahim Traoré, President of the Sovereign Nation of Burkina Faso, son of African soil, defender of his people, may grace and peace multiply for you through wisdom, courage and truth.”
This is how a supposed English-language message attributed to the Pope and created with artificial intelligence begins.
A video of about 36 minutes was uploaded to YouTube on the account “Pan African Dreams”, produced using footage from Pope Leo XIV’s audience with journalists on Monday, May 12.
A “morphing” technique was used—that is, transforming the image so that the movement of the lips matches the AI-generated words.
The fake video is titled “Pope Leo XIV responds to Captain Ibrahim Traoré – A Message of Truth, Justice & Reconciliation.”
Viewers are led to believe that the new Pope delivered an entire public address to Burkina Faso’s President Ibrahim Traoré in response to his letter, and in the video Pope Leo is made to say: “I have read your words not once, but many times, and each reading has been deeper than the last, because in your voice I have heard not only the anger of a president, but the righteous cry of a continent long wounded by the twin blades of abandonment and exploitation.”
This video is part of a series of fake messages covered by BBC News on May 15 (https://www.bbc.com/afrique/articles/c3rpw8n0zvxo), and was reposted in a slightly shorter, lower-quality version by the YouTube account “Nou se Legliz”.
It is noticeable that the image of the Pope is repeated, and Leo holds the same two sheets of paper throughout the entire message.
It is worth recalling—given the circulation on various social media of texts attributed to the new Pope without source indication—that all of Pope Leo XIV’s speeches, addresses, and texts can be consulted in full at vatican.va.
News of his activities and video messages are available in real time on the Vatican News portal at vaticannews.va, in multiple languages, as well as on the Vatican’s newspaper website L’Osservatore Romano at osservatoreromano.va.
Wednesday, 21 May 2025
Monday, 19 May 2025
Sunday, 11 May 2025
Friday, 9 May 2025
Thursday, 8 May 2025
267 -ஆவது புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார்
267 -ஆவது புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார்
சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைப்போக்கியிலிருந்து வெண்புகை வெளிவந்து, திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது.
மெரினா ராஜ் – வத்திக்கான்
மே 8 வியாழன் உரோம் உள்ளூர் நேரம் மாலை 6.08 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 9.38 மணியளவில் முதல் வாக்குப்பதிவிற்கான முடிவுகளை தெரிவிக்கும் வண்ணம் சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைப்போக்கியிலிருந்து வெண்புகை வெளிவந்து, திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது.
மேலும் அடுத்த 3 நிமிடங்களில் 5 நிமிடங்களில் என தொடர்ந்து மீண்டும் வெண்புகை வெளியேறி திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது. மக்கள் அனைவரும் கரவொலி எழுப்ப, பெருங்கோவிலின் மணிகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன.
வாக்குப்பதிவு தொடங்கிய முதல் நாள் முதல் இன்று வரை ஒவ்வொருமுறையும் புகை வெளிவரும் நேரத்தை எதிர்பார்த்து மக்கள் வத்திக்கான் வளாகத்தில் காத்திருந்தனர். மே 7 புதன் மாலை 45,000 பேரும் மே8 வியாழன் காலை 15,000 பேரும் மாலையில் ஆயிரக் கணக்கான மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். உலகளாவிய கத்தோலிக்க திருஅவையின் தலைவரை இந்த உலக மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற செய்தித்தொடர்பாளர்கள் புகைப்படம் மற்றும் காணொளி வாயிலாக தங்களது நாடுகளில் கண்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வத்திக்கானில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்து ஒளிபரப்பி வந்தனர்.
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Bombay archdiocese studies porn addiction among youth Study aims at understanding those who use it, and finding programmes to help...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...