Tuesday 15 October 2024

Pope: Respect UN peacekeepers in Lebanon

 

Pope: Respect UN peacekeepers in Lebanon


After the Israeli army fires at UN peacekeeping forces in southern Lebanon, the Pope calls for the troops to be respected.

By Joseph Tulloch

Following a series of recent incidents in which at least four UN peacekeepers were wounded after coming under fire from the Israeli army, Pope Francis has appealed for the troops to be "respected."

The appeal came as the Pope once again called for an immediate ceasefire in the Middle East, urging the parties to "pursue the paths of diplomacy and dialogue to achieve peace".

Pope Francis has been calling for a stop to hostilities in the region since October 2023, longer than almost any other world leader.

“War is an illusion,” the Pope continued, “It will never bring peace, it will never bring security. It is a defeat for everyone, especially for those who believe themselves invincible.”

“I pray for all the victims,” he added, “for the displaced, for the hostages - who I hope will be released immediately – and I pray that this great needless suffering, generated by hatred and revenge, will soon come to an end.”


Smoke rises following an Israeli airstrike on southern Lebanese village of Khiam on October 13, 2024

Ukraine, Haiti, and prayers for peace

Pope Francis then moved on to discuss the war in Ukraine, appealing that “Ukrainians not to be left to freeze to death” this coming winter.

He called emphatically for a stop to air strikes against the civilian population: “No more killing of innocents!”.

The Pope then turned to Haiti, where extreme gang violence and grinding poverty are continuing to claim many lives. Last week, around 70 people, including children, were killed after an armed gang attacked a small town there.

“Let us never forget our Haitian brothers and sisters”, the Pope urged. “I ask everyone to pray for an end to all forms of violence and, with the commitment of the international community, to continue working to build peace and reconciliation in the country”.

Finally, the Pope discussed the upcoming “One Million Children Praying the Rosary for Peace” event organised by Aid to the Church in Need.  

“We entrust to Our Lady’s intercession,” Pope Francis said, “tormented Ukraine, Myanmar, Sudan, and all other peoples suffering from war and all forms of violence and misery.”

Aftermath of a Russian air strike in Zaporizhzhia

Cardinal Hollerich: Church is rooted in places and cultures

 

Cardinal Hollerich: Church is rooted in places and cultures


The Synod’s General rapporteur, Cardinal Jean-Claude Hollerich, presents the third part of the Instrumentum laboris, “Places,” as participants begin their reflection on the final module of the General Assembly.

By Christopher Wells

With the General Assembly of the Synod entering its third week, Cardinal Jean-Claude Hollerich encouraged participants to not give in to fatigue.

The General rapporteur’s introduction to the fourth module – on the third and final part of the Instrumentum laboris – emphasized the need to engage the work “with the same decision and energy” that has characterized the Assembly so far.

A Church rooted in places and cultures

Cardinal Hollerich noted that this module is focused on “Places,” with the fundamental idea that “the Church cannot be understood without being rooted in a place and a culture (IL, 80).

Carefully explaining each section of this part of the IL, Cardinal Hollerich noted that now, more than in the past, the idea of place “has much less of a spatial and geographic connotation than in the past, not least due to globalism and the new digital reality. He asked synod participants to consider what this means for the Church’s mission, and how we should “rethink” the organizational forms of the Church.

The following paragraphs, Cardinal Hollerich said, deal with the relationships established between places and cultures, and especially among the various local Churches, including the Eastern Catholic Churches. Within the Church, these relationships have the character of a mutual exchange of gifts. He also noted the relationships that exist between the local Churches and the universal Church, and within each local Church.

The service of the Pope

Finally, he said, this final module is set to consider “the service of unity of the Bishop of Rome,” the Pope. Cardinal Hollerich said he interprets Pope Francis to be inviting the Synod participants to approach this exchange in the spirit of “parrhesia,” or frankness, with a view to offering advice on how to make the service of the Pope and the Roman Curia “more effective today.” The Pope, he said, “is entitled to what we truly think, beginning with the life and needs of the People of God in the places we come from.”

The lived experience of synod participants

While the topics of this module might seem technical or of interest only to insiders, the Cardinal said he hoped that Wednesday’s theological-pastoral fora, open to everyone, might help to dispel this impression.

In conclusion, Cardinal Hollerich expressed his opinion that this module, like those that have come before, engages “the lived experiences” of the participants in the General Assembly. “It seems to me,” he said, “that this is the most correct perspective in which to place ourselves to face the work ahead of us.”

மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதம்

 

மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதம்


நமது ஒருங்கிணைந்த பயணத்தின் நோக்கமான, “ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்பவை, இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பதை தங்களது முதல் பணியாகக் கொண்டுள்ளதை நினைவுபடுத்துகின்றன

மெரினா ராஜ் - வத்திக்கான்

மறைப்பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில் கிறிஸ்துவை நமது வாழ்வின் மூலைக்கல்லாக மாற்றுவதற்கு தூய ஆவியின் ஆற்றலை வேண்டுவோம் என்று குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 14 திங்கள்கிழமை தனது X  வலைதளப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் # மறைப்பணி மாதம் அக்டோபர் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில் கிறிஸ்துவை நமது வாழ்வின் மூலைக்கல்லாக மாற்றுவதற்கும், அவர் நமக்கு தரும் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு, மகிழ்வின் சான்றுகளாக நாம் திகழ்வதற்கும் தூய ஆவியின் அருளினை வேண்டுவோம் என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

அக்டோபர் மாதம் 20 ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட இருக்கின்ற உலக மறைப்பணி தினத்திற்கான செய்தியை, “எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” என்ற விவிலிய வார்த்தைகளுடன் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ‘போய் அழைத்துவாருங்கள்’,‘எல்லாரையும்’,‘திருமணவிருந்துக்கு’, என்ற மூன்று வார்த்தைகளுக்கும் தனித்தனியாக தனது மறைப்பணி ஞாயிறுக்கான செய்தியில் விளக்கமளித்துள்ளார்.

நம் ஒன்றிணைந்த பயணத்தின் நோக்கமான, “ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்பவை இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பதை தன் முதல் பணியாகக் கொண்டுள்ளதை நினைவுபடுத்தி நிற்கின்றன என்றும் தனது செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அணுசக்தி எதிர்ப்பு அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

 

அணுசக்தி எதிர்ப்பு அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு


ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை விளம்பரப்படுத்தவும், அணு ஆயுதங்களை ஒழிக்க வலியுறுத்தவும் ஜப்பானிலும் உலகெங்கிலும் பல ஹிபாகுஷா அமைப்புகள் அல்லது அமைதிவாத நடவடிக்கைகள் உள்ளன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதிக்கான நோபல் பரிசானது நிஹான் ஹிடாங்கியோ என்ற அணுசக்தி எதிர்ப்பு அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நாகசாகி உயர்மறைமாவட்ட பேராயர் ஜோசப் மிட்சுவாகி டகாமி.

அமைதிக்கான நோபல் பரிசு பற்றி வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின்போது இவ்வாறு வாழ்த்து தெரிவித்த பேராயர் ஜோசப் மிட்சுவாகி அவர்கள், அணு ஆயுந்தங்கள் இல்லாத உலகத்தை விரும்பும் மக்கள் அனைவருடனும், அதற்காக கவனம் செலுத்துவதில் முக்கியத்துவம் செலுத்துவதை அங்கீகரித்த நோபல் பரிசுக்குழுவினருக்கு தன் நன்றியினைத் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

மிகப்பெரிய ஹிபாகுஷா அமைப்பான நிஹான் ஹிடான்கியோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது, அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, அணுசக்தி தடுப்பு மற்றும் அமைதியின் அவசியத்தைக் கூறும் குடிமக்களின் மனநிலையை மாற்ற வலுவான உத்வேகத்தை அளிக்கும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.

ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் ஜோசப் மிட்சுவாகி அவர்கள், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை விளம்பரப்படுத்தவும், அணு ஆயுதங்களை ஒழிக்க வலியுறுத்தவும் ஜப்பானிலும் உலகெங்கிலும் பல ஹிபாகுஷா அமைப்புகள் மற்றும் அமைதிவாத நடவடிக்கைகள் உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

நியூ மெக்சிகோவின் தூய ஃபே உயர்மறைமாவட்ட பேராயர், ஜான் வெஸ்டரின் முயற்சியால், தூய ஃபே, சாட்டில், நாகசாகி, ஹிரோசிமா ஆகிய மறைமாவட்டங்கள் இணைந்து அணு ஆயுதம் இல்லாத சங்கத்தை உருவாக்கின என்றும், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று நாகசாகிய  தலத்திருஅவையில் இந்த இயக்கமானது தலத்திரு அவை மற்றும் சிவில் ஆகிய இரண்டிலும் திறக்கப்பட்டது என்றும் கூறினார் பேராயர் மிட்சுவாகி.


அக்.16. உலக உணவு தினம்

 

அக்.16. உலக உணவு தினம்


வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமன்றி, உணவு மீந்துவிட்டால் பசியால் வாடும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதியை உலக உணவு தினமாகச் சிறப்பிக்கின்றோம். இவ்வாண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு, ‘நல்லதொரு வாழ்வுக்கும் நல்லதொரு வருங்காலத்திற்கும் உணவுக்கான உரிமையைக் கொண்டிருத்தல்’ என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை  சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசி, பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. மேலும், பசியை எதிர்த்துப் போராடுவதும் இதன் நோக்கங்களுள் ஒன்று. இது தவிர, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவு ஏற்றுமதி, இறக்குமதி துறையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தொடங்கப்பட்ட நாளே, 1979லிருந்து உணவு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1981ஆம் ஆண்டு முதல், உலக உணவு தினம் ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார். 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர்.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான உணவை விவசாயிகள் தயாரித்து தந்தாலும், பசி என்பது இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் 73 கோடியே 30 இலட்சம் பேர் இன்னும் பசியால் வாடிக்கொண்டிருக்கின்றனர். கால நிலை மாற்றங்கள், மோதல்கள், பொருளாதார வீழ்ச்சி, சரிநிகரற்ற தன்மை, தொற்று நோய்கள் என காரணங்களை அடுக்கிக்கொண்டேச் சென்றாலும், உணவை உற்பத்திச் செய்யும் விவசாயியும் ஏழ்மையில் உழல்வதுதான் புரியாத புதிராக உள்ளது.

உலகில் மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர் என்பவைகளுக்கு அடுத்து உணவு வருகிறது. தேவையான அளவு உணவை கொள்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. உணவுக்கான உரிமை பன்னாட்டு அரசுகளால் மனித உரிமைகள் ஒப்பந்தத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பத்து விழுக்காட்டினர் இன்றும் பசியின் கோரப்பிடியிலேயே உள்ளனர். ஆம், ஒவ்வொரு நாளும் ஐந்துக்கு ஒருவர் பசியால் உறங்கச் செல்கின்றனர். இந்த உலகில் 35 விழுக்காட்டு மக்கள், அதாவது, 280 கோடி பேர் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கான வசதியற்றவர்களாக இருக்கின்றனர். குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71.5 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை பெறுவதற்கான வசதிகளின்றி உள்ளனர். அதேவேளை, வருமானம் நிரம்பிய நாடுகளிலோ 6.3 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்குவதற்கான வசதிகளின்றி உள்ளனர். உலகில் பசிக்கொடுமைகள் பற்றி இவ்வாண்டு வெளியிடப்பட்ட அறிக்கை, பசியால் அதிக அளவில் வாடும் நாடுகளாக 36 நாடுகளை குறிப்பிட்டுள்ளது. அதிலும் 6 நாடுகளை, அதாவது புருண்டி, சாடு, மடகாஸ்கர், சொமாலியா, தென்சூடான், மற்றும் ஏமனை மிகவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை உள்ள நாடுகளாக, அதாவது பசியால் மக்கள் துயருறும் நாடாக அறிவிக்கிறது.

2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் பசியால் துயருறும் மக்களின் எண்ணிக்கை 15 கோடியே 20 இலட்சம் அதிகரித்துள்ளது. உலகில் 13 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் பஞ்சத்தில் அல்லது பஞ்சத்தை ஒத்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இது மட்டுமா? உலகில் இறக்கும் குழந்தைகளுள் பாதிபேர் சத்துணவின்மையால் உயிரிழக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பசி தொடர்புடையவைகளால் உயிரிழக்கும் 90 இலட்சம் பேரில் பெரும்பான்மையினோர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள். ஏழ்மையும் பசியும் ஆப்பிரிக்காவில்தான் தங்கள் வசிப்பிடத்தை அதிக அளவில் கொண்டுள்ளன.

2030ஆம் ஆண்டுக்குள் எவரும் பசியால் வாடாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என ஐ.நா. நிறுவனம் திட்டமிட்டு செயலாற்றிவருவது நிறைவேறாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சஹாராவை அடுத்த ஆப்பிரிக்க நாடுகளைப் பார்க்கும்போதும், தெற்காசிய நாடுகளை நோக்கும்போதும் 2030ன் குறிக்கோளை எட்டுவது சிரமம் என்றுதான் தோன்றுகிறது. இங்கு சத்துணவின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, இன்னும் 130 ஆண்டுகள் தாண்டி கூட, அதாவது 2160ஆம் ஆண்டில்கூட பசியை எதிர்த்து வெற்றிபெறுவோம் என்பது சந்தேகத்திற்குரியதுதான். ஏனெனில் பசி என்பது அரசியல் மற்றும் காலநிலை மாற்றங்களோடு நெருங்கியத் தொடர்புடையதாக இருக்கின்றது. ஏனெனில், பசி என்பது மோதல்களாலும், கால நிலை மாற்றங்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் கீழ்நிலை அடைந்துள்ளது. உணவு பாதுகாப்பின்மையாலும் சத்துணவின்மையாலும் அதிகம் பாதிக்கப்படுள்ளவர்கள் பெண்களும் சிறுமிகளும்தான். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் ஓரளவு முன்னேற்றத்தை இவ்வுலகம் கண்டுவந்தாலும், இது எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இவ்வுலகில் பசி இன்னும் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் முக்கியக் காரணங்கள் என்னவென்று நாம் ஆராய்ந்து பார்த்தால் அனைத்திற்கும் மேலாக ஏழ்மை முதலில் வந்து நிற்கிறது. ஏழ்மையில் வாடும் குடும்பத்தால் போதிய உணவை, குறிப்பாக சத்துள்ள உணவைப் பெற முடியாது. போதிய உணவில்லையேல் அக்குடும்பத்தின் குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனால்தான் சத்துணவுத் திட்டத்தையேக் கொண்டுவந்தார் கர்மவீரர் காமராசர்.

உணவுப் பற்றாக்குறை பிறிதொரு காரணமாக உள்ளது. பல ஏழை நாடுகளில் முந்தைய ஆண்டின் சேமிப்பு பயன்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு அறுவடைக்கு இடைப்பட்ட காலத்தில் விலைவாசிகள் உயர்ந்து, மூன்றுவேளை உணவில் ஒருவேளையை சில குடும்பங்கள் தியாகம் செய்யும் நிலை உருவாகும். இது தவிர, கோவிட் பெருந்தொற்று காலத்தின்போதும், தற்போதைய உக்ரைன் போர்க்காலத்தின் துவக்கத்திலும் இதைத்தான் கண்டோம். போர் மற்றும் மோதல்களின்போதும் மக்கள் பசியால் வாடுவதும் தொடர்கின்றது. ஓர் உதாரணத்திற்கு இரஷ்யா-உக்ரைன் போரை எடுத்துக் கொள்வோம். போருக்கு முன்னர் உலகின் கோதுமை தேவையில் 25 விழுக்காட்டை இவ்விரு நாடுகளும் தான் நிறைவுச் செய்தன, அதாவது ஏற்றுமதிச் செய்தன. ஆனால், இன்றோ அந்த சங்கிலி அறுபட்டு, கோதுமை பற்றாக்குறையும், விலையேற்றமும் இடம்பெற்றுள்ளன. இதனால் ஏழை நாடுகளில் பசியின் பிடி இறுக்கமாகியுள்ளது.

காலநிலை மாற்றம், இன்னொரு காரணமாக உள்ளது. உலகம் வெப்பமாகி வருவதும், இயற்கை பேரிடர்களும் பசியின் கொடுமைக்கு இன்னும் வலுசேர்த்துள்ளன. இது தவிர திட்டமிடாத அரசின் செயல்கள், அரசியல் நிலையற்றதன்மை, மோசமான பொருளாதாரம், உணவை வீணாக்குதல், பாலின பாகுபாட்டு முறைகள், கட்டாயப்படுத்தப்படும் புலம்பெயர்வுகள் என பல காரணங்களால் உலகில் பசி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  

வட கொரியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, லைபீரியா, நிஜர், ஹெய்ட்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, மடகாஸ்கர், சாடு, ஏமன், சொமாலியா போன்ற நாடுகள் உலகில் பசியை அதிக அளவில் அனுபவித்துவரும் நாடுகள். நமது பூமி இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க போதுமான உணவை உருவாக்குகிறது. இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் 130 கோடி கிலோ உணவு இழக்கப்படுகிறது அல்லது வீணாகிறது. இது மொத்த உணவு உற்பத்தியில் ஏறக்குறைய 20%.

உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரே நாளில் மீட்டுவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும். முதலில் தாங்கள் உண்ணும் உணவை வீணாக்குவதைத் தவிர்க்கலாம். ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கலாம். வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்.  அதுமட்டுமன்றி, உணவு மீந்துவிட்டால் பசியால் தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம். தேவைக்கு மட்டும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினால், உணவை வீணாக்குவதையும், பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். உலக உணவு தினம் என்பது அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முடிவுகளை எடுக்கவும் நினைவூட்டுகிறது.

உலகில் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய நம்மால் இயன்றதை ஆற்றுவோம். பகிர்தலும், வீணாக்காத மனமும் இருந்தால் போதும், நாமும் இதில் பங்களிக்கலாம்.

Pope: Respect UN peacekeepers in Lebanon

  Pope: Respect UN peacekeepers in Lebanon After the Israeli army fires at UN peacekeeping forces in southern Lebanon, the Pope calls for th...