Friday 30 May 2014

ROBERT JOHN KENNEDY: Clergy abuse victims split on pope's offer to meet...

ROBERT JOHN KENNEDY: Clergy abuse victims split on pope's offer to meet...: Clergy abuse victims split on pope's offer to meet Some welcome the invitation, others call it 'meaningless'. ...

Clergy abuse victims split on pope's offer to meet

Clergy abuse victims split on pope's offer to meet

Some welcome the invitation, others call it 'meaningless'.

 

Vatican City:  Pope Francis' announcement this week that he would meet with victims of sexual abuse by priests is dividing victim advocates, with some dismissing the move as "meaningless" and others endorsing it as a positive step, albeit taken belatedly and under pressure.

"A welcome and overdue change," said Anne Barrett Doyle of BishopAccountability.org, a prominent activist pushing the Catholic church to overhaul its policies and practices on clergy abuse.

"Good to hear Pope Francis speak out and meet survivors," tweeted Marie Collins, an abuse victim whom Francis named to a Vatican commission to promote reforms, on hearing that the pope compared clergy abuse to a priest celebrating a "black mass."

But others said Francis' first encounter with victims -- and his pledge for "zero tolerance" for abusive clerics of any rank -- was simply stagecraft aimed at distracting the public from what they say are the pope's larger failures to address the abuse crisis.

"His upcoming and self-serving meeting with victims is more of what we've seen for decades -- more gestures, promises, symbolism and public relations," Joelle Casteix of the Survivors Network of those Abused by Priests, or SNAP, said in a statement shortly after Francis announced the meeting during an in-flight press conference Monday night on his return from a visit to the Holy Land.

Francis initially said the meeting would take place in early June, but Vatican officials later said it's not clear when it will take place, though it is expected to happen in the next few months.

In an interview the day after Francis' announcement, SNAP's David Clohessy reiterated his view that the meeting will actually hurt efforts to force the church to reform because it will be all window dressing.

"I would challenge anyone to point to a single tangible sign of progress that has emerged from any of these meetings," Clohessy said, citing Pope Benedict XVI's various encounters with victims as well as other meetings between victims and church leaders.

Clohessy said he would not try to stop victims who might be invited by Rome from joining the meeting at the Vatican, but he said they should be prepared to feel betrayed by the church once again. Bernie McDaid, the founder of Survivors Voice, seemed to echo that view.

McDaid was one of four clergy abuse victims who met with Benedict in Washington in 2008; he called that meeting "weird" and this week told The Associated Press he thinks the meeting with Francis will be a "dog-and-pony show."

"I believe it's always going to be church first, children second," said McDaid, who has not been invited.

Are these contrasting responses simply differing tactics that can lead to the same end -- justice for victims and reforms in the church -- or do they represent deeper divisions that could undermine the cause just as it could be chalking up its biggest victories?

"We are not at all uncomfortable with being the voice that says, 'Slow down, think it through,' " Clohessy said.

"No, I don't think it's a problem." But Thomas Doyle, a priest and canon lawyer who has been one of the most outspoken critics of the church's record on abuse, said while he understands the hesitancy of SNAP and many victims, he is "somewhat hopeful" that things are changing under Francis, even though Doyle harbors no illusions about the institutional church.

"It's worth the risk" to meet church leaders such as the pope "because you never know when something is going to change," said Doyle, who has counseled many victims. "I've seen enough difference in the present pope to think that possibly he's thinking for himself and will get beyond the other input he's getting [from Vatican insiders] and will possibly do something constructive."

Source: Religion News Service

ROBERT JOHN KENNEDY: Church growing at faster rate than world populatio...

ROBERT JOHN KENNEDY: Church growing at faster rate than world populatio...: Church growing at faster rate than world population Africa shows fastest growth: Europe almost at standstill. ...

Church growing at faster rate than world population

Church growing at faster rate than world population

Africa shows fastest growth: Europe almost at standstill.

 
(Photo Courtesy: Vatican Insider)
Vatican City:  The Pontifical Yearbook has published all figures relating to Church life around the world. The volume is published annually and collects together data from the Holy See’s central offices.

This year’s figures are of particular interest because they refer to the first year of Francis’ pontificate. He was elected Pope on 13 March 2013. The figures relating to the “official” life of the Church – the legal-institutional aspect that is – include the period that runs from March last year to 22 February 2014.

Two new episcopal sees, an eparchy, an apostolic exarchate and an archiepiscopal exarchate were established in this period and a territorial prelature was elevated to the status of diocese.

The data regarding faithful and other members of the Church refer to 2012, so there is a two year gap between that date and the date of publication.

The Catholic Church is currently divided into 2,981 ecclesiastical districts, dioceses or other kinds of institutions.

The number of people who are being baptized is constantly growing. In the period between 2005 and 2012, the number of baptized people around the world rose from 1115 to 1229 million, an increase of 10.2 per cent . If we compare this to the world population’s rate of growth in the same period, we see that this has gone from 6, 46 to 7, 02 billion. So Catholic presence in the world has risen slightly, from 17.3 per cent to 17.5 per cent. But this growth varied greatly according to geographical area and so the total figure is different. Europe’s results are the worst.

Although it is home to 23 per cent of the world’s Catholic community (2012), it is by far the least dynamic area, with numbers of baptized rising at a meagre rate of just over 2 per cent. The presence of Catholics in the region amounts to about 40 per cent.

Africa is the continent that is witnessing the greatest growth; this probably helps explain the fresh outbreaks of violence against Christians and Catholics by Islamic extremist groups.

Globally, Africa is undoubtedly the continent where growth is most notable. The rate at which the number of Africa’s Catholics (almost 199 million in 2012) has risen, is almost double that of Asia (29%) and far higher than the population growth rate in that same period of time.

The balance between continents has changed hugely. The Catholic presence in Africa is stronger (the number of African Catholics has risen from 13.8 per cent in 2005 to 16.2 per cent of the total number of the world’s Catholics in 2012).

Europe’s Catholics, however, continue to drop in number: from 25.5 per cent in 2005 their number has fallen to 23.3 per cent in 2012. But Asia’s Catholics are also on the rise. Asia accounts for over 60 per cent of the world population and Asian Catholics account for about 11 per cent of the population. 49 per cent of the world’s baptized Catholic population is American, a relative majority. The number of Catholics per a hundred inhabitants in Oceania is stable, accounting for 0.8 per cent of the global catholic population.

Source: Vatican Insider

ROBERT JOHN KENNEDY: China sentences 55 people at Xinjiang show trial

ROBERT JOHN KENNEDY: China sentences 55 people at Xinjiang show trial: China sentences 55 people at Xinjiang show trial One receives death sentence: 7,000 watch trial in stadium.   ...

China sentences 55 people at Xinjiang show trial

China sentences 55 people at Xinjiang show trial

One receives death sentence: 7,000 watch trial in stadium.

 
(Picture courtesy: Al jazeera)
China:  At least one person has been sentenced to death and 54 others found guilty following a mass trial in China's restive Xinjiang province for a wide range of crimes including terrorism, separatism and murder, state media has reported.

The verdicts were delivered before a crowd of 7,000 at a sports stadium in Yining city in the northern prefecture of Yili.

The mass trial followed a similar event last week in the region where 39 people were sentenced to jail on "terrorism" charges.

China is waging a year-long "anti-terrorism" operation after a series of attacks, but has focused on Xinjiang, home to the Muslim Uighur minority.

Beijing blames the recent spate of attacks on separatists from the region. Those sentenced on Tuesday faced charges ranging from intentional murder, separatism, and leading or participating in "terrorism groups," People.cn, the website associated with the ruling Communist Party mouthpiece, the People's Daily, said.

The public sentencing highlighted the aim of the ruling Communist Party claim to strike down any "violent terrorism, separatism and religious extremism", according to the prefecture's deputy Party secretary Li Minghui.

Beijing says separatist groups in Xinjiang are seeking to form their own state called East Turkestan. Exiles and rights groups say the real cause of the unrest is China's repressive policies that put curbs on Islam and the culture of Uighurs, who are Muslims and speak a Turkic language.

Uighurs have long complained of official discrimination in favor of the Han, China's majority ethnic group.

Source: Al Jazeera

ROBERT JOHN KENNEDY: Catholics' protest against bishop turns violent

ROBERT JOHN KENNEDY: Catholics' protest against bishop turns violent: Catholics' protest against bishop turns violent Over 40 people and 15 policemen were injured in the commotion. ...

Catholics' protest against bishop turns violent

Catholics' protest against bishop turns violent

Over 40 people and 15 policemen were injured in the commotion.

 
(Picture courtesy: The Hindu)
Kollam:  The police fired teargas shells and used batons to disperse a group of Catholics who tried to break the police cordon and enter the Bishop’s House in the diocese of Quilon in Kerala on Sunday.

Over 40 people and 15 policemen, including Assistant Commissioner K. Lalji were injured in the commotion. Police arrested some 50 people and injured were admitted to the District Hospital in Kollam.

Some 500 people of Saint Joseph parish in Kureepuzha, including women and children, carrying black flags, marched to the Bishop’s House protesting Bishop Stanley Roman transferring their vicar Joseph Daniel.

The police said they resorted to the use of ‘mild force’ as the protestors tried to violently gatecrash into the Bishop’s House. They also threw stones, the police said. The police fired four rounds of teargas shells.

The parishioners said the police action was unprovoked.

The parishioners say the vicar should not be transferred till the construction of their new parish church was over. In November, following protests parishioners were assured that the vicar would not be transferred. The fresh transfer order, they say, violates that agreement.

The order was read out at the Sunday mass. Subsequently, the parishioners decided to take out a march to the Bishop’s House.

The police cordoned off the area anticipating tension. The parishioners made several attempts to breach the cordon and rush into the campus. The police resisted without using force. Then, the protesters squatted on the road and raised slogans against the Bishop and the transfer order.

As there was no initiative on part of the Bishop to initiate talks, even after 45 minutes of protest, the parishioners started venting their ire on the police. Mr. Lalji got in touch with the Bishop’s House authorities and urged them to hold talks.

Diocesan spokesperson George Rebeiro said transferring vicars and priests under the Catholic Church was the prerogative of the Bishop and Daniel was transferred as part of a general transfer procedure.

Daniel himself had explained it to the parishioners but they were not prepared to listen.

He said it was unfortunate that a group of parishioners resorted to violence after misreading a routine diocesan procedure.

Source: The Hindu

ROBERT JOHN KENNEDY: துன்பறுத்தியவரையும் குணப்படுத்தியவர் - புனித ஆக்னஸ...

ROBERT JOHN KENNEDY: துன்பறுத்தியவரையும் குணப்படுத்தியவர் - புனித ஆக்னஸ...: துன்பறுத்தியவரையும் குணப்படுத்தியவர் -   புனித ஆக்னஸ் 292 ம் ஆண்டு உரோமையப் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார் புனித ஆக்னஸ். ஒரு நல்...

துன்பறுத்தியவரையும் குணப்படுத்தியவர் - புனித ஆக்னஸ்

துன்பறுத்தியவரையும் குணப்படுத்தியவர் - புனித ஆக்னஸ்

292ம் ஆண்டு உரோமையப் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார் புனித ஆக்னஸ். ஒரு நல்ல கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட இவரது பெயருக்கு இலத்தீன் மொழியில்  "ஆட்டுக்குட்டி"  என்று பொருள். அவர் வயதில் வளர வளர அழகிலும்  வளர்ந்தார். பல இளைஞர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் அவர், இயேசுவே வேண்டும் என அறிவித்து, யாரையும் திருமணம் செய்ய இசைவு அளிக்கவில்லை.
புனித ஆக்னஸ் வாழ்ந்து வந்த நேரம் கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்ட காலமாகும். அவர் திருமணம் செய்யமாட்டேன் என்று மறுத்தவர்களில் உயர் அரசு அதிகாரி ஒருவரின் மகனும் உண்டு. புனித ஆக்னஸ் கிறிஸ்தவர் என்பதால் அவரை சித்திரவதை செய்து கொலை செய்யப் போவதாக மிரட்டினார் அந்த அதிகாரியின் மகன். அவர் எதற்கும் பணியவில்லை. உரோமையச் சட்டம் கன்னியை கொலை செய்வதற்கு அனுமதி அளிப்பதில்லை. அவரை ஒரு விலைமாதர் இல்லத்திற்கு அனுப்ப அதிகாரிக்கு ஆலோசனை கூறினர் அமைச்சர்கள். அதன்படி அவர் அங்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருடைய கற்பு அற்புதமான முறையில் பாதுகாக்கப்பட்டது.
புனித ஆக்னஸைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அதிக ஆசை கொண்ட அரசு அதிகாரியின் மகன், அதனால் தன் கண்ணையே குத்தி காயப்படுத்தினான். புனித ஆக்னஸ் அவரைக் குணப்படுத்தினார். தன் மகனுக்கு நடந்ததைக் கேள்வியுற்ற அரசு அதிகாரி, அதற்கு காரணம் புனித ஆக்னஸ்தான் என்று குற்றம் சாட்டினார். முதலில் அவரை நெருப்புக்குள் தள்ளிக் கொலை செய்ய முயன்றார். ஆனால் நெருப்பு அவரை ஒன்றும் செய்யவில்லை. பின் வாளினால் தலை வெட்டப்பட, புனித ஆக்னஸ் தனது 12ம் வயதில் மறைசாட்சி மரணம் அடைந்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி
 

செய்திகள் - 30.05.14

செய்திகள் - 30.05.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை

2. ஜூன் 8ம் தேதி, பாலஸ்தீனா அரசுத் தலைவரும், இஸ்ரேல் அரசுத் தலைவரும் வத்திக்கானுக்கு வருகை தர சம்மதித்துள்ளனர்

3. அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துகொள்வார்

4. ஜூன் 16, Canterbury பேராயரும், திருத்தந்தையும் வத்திக்கானில் சந்திப்பு

5. ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து, Belarus நாட்டில் நடத்தும் கருத்தரங்கு

6. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத் தாயை உடனடியாக விடுவிப்பது சூடான் நாட்டின் கடமை - கனடா நாட்டு ஆயர்கள்

7. உடல் எடை கூடுதல் உலகெங்கும் அதிகரித்துள்ளது - மருத்துவ ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை

மே,30,2014. கிறிஸ்தவ வாழ்வு ஒரு விழாக் கொண்டாட்டம் அல்ல, மாறாக, அது நம்பிக்கையில் எழும் மகிழ்வு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை ஆற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.
புனித பூமி பயணத்தையொட்டி, கடந்த சில நாட்களாகத் தடைபட்டிருந்த தன் காலைத் திருப்பலியை இவ்வெள்ளியன்று மீண்டும் தொடர்ந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை என்று கூறியத் திருத்தந்தை, இம்மகிழ்வு நம்பிக்கையிலிருந்து பிறக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தினார்.
திருத்தூதர் பவுல் அடியார், துணிவுடன் கிறிஸ்துவை அறிவித்தார் எனினும், அவர் மனதிலும் அச்சங்கள் சூழ்ந்தன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இருப்பினும், அவர் இவ்வுலக நியதிகளோடு சமரசம் செய்துகொள்ளாமல், தன் அறிவிப்புப்பணியைத் தொடர்ந்தார் என்று கூறினார்.
நோயுறுதல், போதிய ஊதியம் இல்லாமை, குடும்பத்தில் உருவாகும் உறவுப் பிரச்சனைகள் என்ற பல எடுத்துக்காட்டுகளைக் கூறியத் திருத்தந்தை, இத்துன்பங்களைக் கண்டு, நமக்கு எதிரானவர்கள் மகிழக்கூடும்; இருப்பினும், இத்துன்பங்கள் மத்தியில் இறைவன் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையே, நமது மகிழ்வுக்கு அடித்தளம் என்று எடுத்துரைத்தார்.
பேறுகால வேதனையில் உள்ள பெண்ணை இயேசு ஓர் எடுத்துக்காட்டாக சீடர்களுக்குக் கூறியதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தை பிறப்பின்போது, தாய் அடையும் வேதனை, மகிழ்வாக மாறுவதுபோல், நமது வேதனைகளையும் இறைவன் மகிழ்வாக மாற்றுவார் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
மேலும், "ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன் பணியிடங்களில், தன் வார்த்தைகள் வழியாக மட்டுமல்லாமல், தன் நேரிய வாழ்வினால் கடவுளின் சாட்சிகளாக வாழ முடியும்" என்ற வார்த்தைகளுடன் கூடிய Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஜூன் 8ம் தேதி, பாலஸ்தீனா அரசுத் தலைவரும், இஸ்ரேல் அரசுத் தலைவரும் வத்திக்கானுக்கு வருகை தர சம்மதித்துள்ளனர்

மே,30,2014. வருகிற ஜூன் 8ம் தேதி, ஞாயிறன்று, பாலஸ்தீனா அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்களும், இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களும் வத்திக்கானுக்கு வருகை தர சம்மதித்துள்ளனர் என்று திருப்பீடச் சேதித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர், Federico Lombardi அவர்கள் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட புனித பூமி பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, அவர், பாலஸ்தீனா, இஸ்ரேல் நாடுகளின் அரசுத் தலைவர்களை வத்திக்கானில் உள்ள தன் இல்லத்திற்கு வருகைதந்து தன்னோடு இணைந்து, அமைதிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, இரு அரசுத் தலைவர்களும் ஜூன் மாதம் 8ம் தேதியை ஒரு சேர தெரிவு செய்திருப்பது, இந்த சமாதான முயற்சியின் முதல் வெற்றி என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
திருத்தந்தையின் புனித பூமி திருப்பயணத்தில் அவருடன் பயணித்த சமூகத் தொடர்பு குழுவின் தலைவர், இயேசு சபை அருள் பணியாளர் David Neuhaus அவர்கள், ஜூன் 8ம் தேதி நிகழ்வைப் பற்றி பேசியபோது, இவ்விரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இதுவரை செபத்தின் வழியாக இந்த முயற்சியை யாரும் மேற்கொள்ளவில்லை என்றும், இந்த முயற்சியைத் துவக்கி வைக்க திருத்தந்தை முயன்றிருப்பது, அவர் ஓர் ஆன்மீகத் தலைவர் என்பதை இவ்வுலகிற்கு மீண்டும் எடுத்துரைக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
உலகின் பல மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்த 'பெந்தகோஸ்து' திருவிழா, அதாவது, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை, ஜூன் 8ம் தேதி, ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துகொள்வார்

மே,30,2014. உரோம் நகரில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் அகில உலக அருங்கொடை இயக்கத்தின் மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்கள் நடைபெறும் 37வது அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில், 50 நாடுகளிலிருந்து 50,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர்.
ஞாயிறு காலை, 10.30 மணியளவில் உரோம் நகரின் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் ஆரம்பமாகும் இந்த மாநாட்டில், மாலை 5 மணியளவில் திருத்தந்தை கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் தலைமை அருள் பணியாளர், கர்தினால் Angelo Comastri, மற்றும் பொதுநிலையினர் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Stanislaw Rylko ஆகியோர் உட்பட, பல ஆயர்கள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில் திருத்தந்தை ஒருவர் கலந்துகொள்வது இதுவே வரலாற்றில் முதல் முறை என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியது.

ஆதாரம் : Zenit

4. ஜூன் 16, Canterbury பேராயரும், திருத்தந்தையும் வத்திக்கானில் சந்திப்பு

மே,30,2014. ஜூன் 16, திங்களன்று ஆங்கிலிக்கன் சபையின் உயர் தலைவரும், Canterbury பேராயருமான Justin Welby அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்திக்க வருகிறார்.
உலகெங்கும் நடைபெற்றுவரும் மனித வர்த்தகம் மற்றும் இன்றைய அடிமைத்தனம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பேராயர் Welby அவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறுவிய Global Freedom Network என்ற அமைப்பின் செயல்பாடுகள் குறித்து இவ்விருவரும் இந்தச் சந்திப்பின்போது பேசுவர் என்று ஆங்கிலிக்கன் சபையின் அறிக்கை கூறுகிறது.
பேராயர் Welby அவர்கள், திருத்தந்தையைச் சந்திப்பது இது இரண்டாவது முறை என்றும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் இருவருக்கும் இடையே வத்திக்கானில் ஒரு சந்திப்பு நிகழ்ந்ததென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பேராயர் Welby அவர்கள் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் மேற்கொண்ட பயணத்தின்போது, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள தேவ நிந்தனைச் சட்டத்தை அரசு திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் என்றும் ஆங்கிலிக்கன் சபையின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Zenit / ICN  

5. ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து, Belarus நாட்டில் நடத்தும் கருத்தரங்கு

மே,30,2014. ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து, ஜூன் 2ம் தேதி, திங்கள் முதல், 6ம் தேதி, வெள்ளி முடிய Belarus நாட்டின் Minsk நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்துகின்றன.
"மதமும், கலாச்சார பன்முகமும்: ஐரோப்பாவின் கிறிஸ்தவ சபைகள் சந்திக்கும் சவால்கள்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில், பன்முகம் கொண்ட ஐரோப்பிய சமூகத்தில், மதச் சுதந்திரம், மதங்களுக்கிடையே உரையாடல் ஆகிய தலைப்புக்களில் விவாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்த்தடாக்ஸ் சபையினர் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், கர்தினால் Péter Erdő அவர்களின் தலைமையில், இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், போலந்து, ஜெர்மனி, பெலாருஸ் ஆகிய நாடுகளின் ஆயர்களில் பலர், கத்தோலிக்கத் திருஅவையின் சார்பில், கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத் தாயை உடனடியாக விடுவிப்பது சூடான் நாட்டின் கடமை - கனடா நாட்டு ஆயர்கள்

மே,30,2014. சூடான் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத் தாய் Meriam Yehya Ibrahim அவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிப்பது சூடான் நாட்டின் கடமை என்று கனடா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
Meriam என்ற இளம்பெண் மருத்துவர், ஒரு இஸ்லாம் தந்தைக்குப் பிறந்தவர் என்பதால், அவர் ஒரு கிறிஸ்தவரை மணந்தது சட்டப்படி செல்லாது என்றும், அவர் ஏற்கனவே ஒரு குழந்தைக்குத் தாயானதும், தற்போது மற்றொரு குழந்தையைப் பெறவிருப்பதும் சட்டப்படி குற்றம் என்றும் கூறி, சூடான் உச்ச நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட Meriam அவர்களுடன் அவரது இரண்டு வயது மகன் மார்ட்டினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், Meriam மற்றொரு பெண் குழந்தையை சிறையில் ஈன்றெடுத்தார் என்று செய்திகள் கூறுகின்றன.
இளம் மருத்துவர் Meriamன் தந்தை, சிறுவயதிலேயே தாயைவிட்டுப் பிரிந்ததால், Meriam குழந்தைப் பருவம் முதல் கிறிஸ்தவ வழியில் வளர்ந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய போதும், இஸ்லாமிய நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை எவ்வகையிலும் பொருளற்றது என்று சூடான் ஆயர்கள் அவை ஏற்கனவே தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தற்போது கனடா நாட்டு ஆயர்கள் சார்பில், ஆயர் François Lapierre அவர்கள் தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : Zenit

7. உடல் எடை கூடுதல் உலகெங்கும் அதிகரித்துள்ளது - மருத்துவ ஆய்வு

உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்றும், அதிகரித்துவரும் இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் வெற்றிபெறவில்லை என்றும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘Lancet’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் அதிக எடை உள்ளவர்கள் என்று கருதலாம் என்று கண்டறிப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, பெரியவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என எல்லா தரப்பு மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொதுவாக, வருமானங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, இந்த உடல் எடையும் அதிகரிப்பதாகவும், அமெரிக்காவில் முப்பது விழுக்காடு மக்கள் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : BBC

Thursday 22 May 2014

கைம்பெண் வாழ்வும் புனிதமும் (புனித ரீத்தா)

கைம்பெண் வாழ்வும் புனிதமும் (புனித ரீத்தா)

தனது விருப்பத்துக்கு மாறாக இளவயதில் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டு 12வது வயதில் முதல் குழந்தைக்குத் தாயானவர் ரீத்தா. இவருடைய கணவர் பவுலோ மன்சினி செல்வந்தர். முன்கோபக்காரர், ஒழுக்கமற்றவர், வன்முறையாளர். அவர்கள் வாழ்ந்த Cascia மாநிலத்தில் பல பகைவர்களைக் கொண்டிருந்தவர். இவர்களின் 18 வருட திருமண வாழ்க்கையில் இரு மகன்களுக்குத் தாயானார் ரீத்தா. ரீத்தாவை மிகவும் இழிவாக நடத்தினார் பவுலோ. தனது இரு மகன்களுக்கும் தனது தீய வழிகளைக் கற்றுக்கொடுத்தார். தனது பக்தி, பணிவு, பொறுமை, கனிவு போன்ற பண்புகளால் தனது கணவரை மனமாற்ற முயற்சித்தார் ரீத்தா. ஆனால் அவரால் இயலவில்லை. இறுதியில், மன்சினி குடும்பத்துக்கும், கிக்கி குடும்பத்துக்கும் இடையே இருந்த பகைமையில் ரீத்தாவின் கணவர் குத்திக் கொலைசெய்யப்பட்டார். ரீத்தாவின் செபத்தால் அவர் இறப்பதற்கு முன்னர் மனம் வருந்தினார் எனச் சொல்லப்படுகிறது. ரீத்தாவின் கணவரின் அடக்கச் சடங்கின்போது கொலைகாரர்களைப் பொதுப்படையாக மன்னித்தார் ரீத்தா. ஆயினும், பவுலோவின் சகோதரர் பெர்னார்தோ, கொலைகாரர்களைப் பழிவாங்கவேண்டுமென்று அவரது இரு மகன்களையும் தூண்டினார். தனது மகன்கள் இந்த வன்முறை எண்ணத்தைக் கைவிட வேண்டுமென்று ரீத்தா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இறுதியில் வயிற்றுப்போக்கால் இரு மகன்களும் இறந்தனர். இறுதியில் கைம்பெண் ரீத்தா தனது 36வது வயதில் Casciaவில் அகுஸ்தீன் துறவு சபையில் சேர்ந்தார். அவரின் குடும்பம் பிரச்சனை மிக்கது என்பதால் அருள்சகோதரிகள் அவரை சபையில் சேர்ப்பதற்கு அஞ்சினர். ரீத்தா குடும்பப் பிரச்சனையைத் தீர்த்துவைத்துவிட்டு சபையில் சேர்ந்தார். அவர் ஒருநாள் சிலுவையின் முன்னர் செபித்துக் கொண்டிருந்தபோது இயேசுவின் முள்முடியிலிருந்து ஒரு முள் ரீத்தாவின் நெற்றியில் குத்தி காயத்தை ஏற்படுத்தியது. இக்காயம் அவரது இறப்பு வரை இருந்தது. இத்தாலியின் Spoletoவில் 1381ம் ஆண்டு பிறந்த ரீத்தா, 1457ம் ஆண்டு மே 22ம் தேதி மரணமடைந்தார். புனித ரீத்தா, தீர்க்க முடியாத வழக்குகளுக்குப் பாதுகாவலர் எனப் போற்றப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

செய்திகள் - 21.05.14

செய்திகள் - 21.05.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் Twitter செய்தி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செபிக்கும்படி அழைப்பு

2. சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு அறிவியல், தொழில் நுட்பம் ஆகியத் துறைகளிலிருந்து மட்டும் பதில்கள் தேடுவது, சரியான அணுகுமுறை அல்ல - பேராயர் Zimowski

3. உலகக் கால்பந்து போட்டியின் போது, மனித வர்த்தகத்தைத் தடுக்க வத்திக்கானும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மேற்கொண்டுள்ள ஒரு முயற்சி

4. திருத்தந்தையின் புனித பூமித் திருப்பயணத்தின்போது கத்தோலிக்கர்களும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து நற்கருணை ஆராதனை

5. தென் கொரியாவைச் சேர்ந்த கர்தினால் ஒருவர், முதல் முறை வட கொரியாவுக்குப் பயணம்

6. ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் இல்லாதது வருத்தத்தைத் தருகிறது - பேராயர் Gänswein

7. அகில உலக இயேசு சபையின் தலைவர், அருள் பணியாளர் Nicolás அவர்கள், தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருப்பதாக அறிவிப்பு

8. இலங்கை மடுமாதா திருத்தலத்தில் நடைபெற்ற தியானம், மற்றும் திருப்பயணத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் Twitter செய்தி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செபிக்கும்படி அழைப்பு

மே,21,2014. மாசிதோனியா அரசுத் தலைவர், Gjorge Ivanov அவர்களையும், அவரது துணைவியாரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தையோடு மேற்கொள்ளப்பட்ட இச்சந்திப்பிற்குப் பின், மாசிதோனியா அரசுத் தலைவர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவு கொள்ளும் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.
மேலும், "போஸ்னியா-ஹெர்சகொவினா, செர்பியா ஆகிய நாடுகளிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உங்கள் அனைவரையும் செபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்ற செய்தியை, தன் Twitter பக்கத்தில், இப்புதன் காலை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதியில் ஏற்படாத அளவு, மழைப் பொழிவும், வெள்ளப்பெருக்கும் உருவாகியுள்ளது என்றும், 40 இலட்சம் மக்களைக் கொண்ட செர்பியாவில், 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
போஸ்னியாவில், 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என்று ஊடகங்கள் கணித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு அறிவியல், தொழில் நுட்பம் ஆகியத் துறைகளிலிருந்து மட்டும் பதில்கள் தேடுவது, சரியான அணுகுமுறை அல்ல - பேராயர் Zimowski

மே,21,2014. சுற்றுச்சூழலில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள், மனிதர்களால் உருவாக்கப்படும் மாற்றங்கள் என்றும், இந்த மாற்றங்களால் உடல்நலன் தொடர்பான விளைவுகளை நாம் அதிகம் சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 19, இத்திங்கள் முதல், 24, இச்சனிக்கிழமை முடிய ஜெனீவாவில் நடைபெறம் 67வது உலக நலவாழ்வு பேரவைக் கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றிய, நலவாழ்வுப் பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர், Zygmunt Zimowski அவர்கள், இவ்வாறு கூறினார்.
சுற்றுச்சூழல் மாற்றங்களால் தங்கள் பிறப்பிடங்களைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் மக்களைக் குறித்து முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளதை, தன் உரையில் சுட்டிக்காட்டியப் பேராயர் Zimowski அவர்கள், இப்பிரச்சனைக்கு, அறிவியல், தொழில் நுட்பம் ஆகியத் துறைகளிலிருந்து மட்டும் பதில்கள் தேடுவது, சரியான அணுகுமுறை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பிரச்சனையால் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்கள் என்பதை எடுத்துரைத்தப் பேராயர் Zimowski அவர்கள், Autism குறையுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்து, வருகிற நவம்பர் மாதம் வத்திக்கானில் ஒரு கருத்தரங்கு நடைபெறும் என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. உலகக் கால்பந்து போட்டியின் போது, மனித வர்த்தகத்தைத் தடுக்க வத்திக்கானும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மேற்கொண்டுள்ள ஒரு முயற்சி

மே,21,2014. 'மனித வர்த்தகம் உலகச் சமுதாயம் என்ற உடலில் ஏற்பட்டுள்ள ஒரு காயம்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் இச்செவ்வாய் காலை, செய்தியாளர்கள் கூட்டத்தில் மீண்டும் நினைவுகூர்ந்தார்.
பிரேசில் நாட்டில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியின் போது, மனித வர்த்தகம் முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், வத்திக்கானும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய, அர்ப்பண வாழ்வுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Joao Braz de Aviz அவர்கள், இவ்வாறு கூறினார்.
இறந்துபோனதாகக் கருதப்பட்ட தொழுகைக் கூடத்துத் தலைவரின் மகளை, 'தலித்தா கும்' (Talitha Kum) அதாவது, 'சிறுமியே எழுந்திடு' என்ற சொற்களுடன் (மாற்கு நற்செய்தி 5:41) இயேசு எழுப்பிய நிகழ்வினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'தலித்தா கும்' என்ற அமைப்பும், வத்திக்கானும் இணைந்து, பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியின் நேரத்தில் மனித வர்த்தகங்கள், குறிப்பாக இளம்பெண்களின் வர்த்தகத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கால்பந்துப் போட்டி போன்ற ஓர் அனைத்துலக நிகழ்வில், பல கோடி மக்கள் கலந்துகொள்ளும்போது, வர்த்தக உலகம் பல்வேறு எதிர்மறையான முயற்சிகளில் ஈடுபடுகின்றது என்று வத்திக்கானில் பணியாற்றும் அமெரிக்கத் தூதர் Ken Hackett அவர்கள், செய்தியாளர்களிடம் பேசினார்.
உலகக் கால்பந்துப் போட்டிக்கென பிரேசில் நாட்டுக்குச் செல்லும் அனைவரும் போட்டிகளை மட்டும் கண்டு களிக்கும் மனநிலையை அவர்களுக்குள் உருவாக்குவதும், போதைப் பொருள், தகாத உடலுறவு என்ற ஏனைய ஆபத்தான வழிகளில் தங்கள் கவனத்தைத் திருப்பாமல் இருக்கவும் 'தலித்தா கும்' அமைப்பு உதவும் என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள் சகோதரி, Estrella Castalone செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNA

4. திருத்தந்தையின் புனித பூமித் திருப்பயணத்தின்போது கத்தோலிக்கர்களும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து நற்கருணை ஆராதனை

மே,21,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமித் திருப்பயணத்தின்போது, பாலஸ்தீனாவின் பெத்லகேமில் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையைச் சந்திக்கும் அதே நேரத்தில், இங்கிலாந்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் கத்தோலிக்கர்களும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து நற்கருணை ஆராதனையில் ஈடுபட, Westminster பேராயர், கர்தினால் Vincent Nichols அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவைக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைகளுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கவும், புனித பூமியில் அமைதி நிலவவும் திருத்தந்தையோடு ஒன்றித்து, மக்கள் இந்த ஆராதனையை மேற்கொள்ளுமாறு கர்தினால் Nichols அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மே 25ம் தேதி, வருகிற ஞாயிறன்று, இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 முதல் 4 முடிய இந்த ஆராதனை நேரம் நடைபெறும் என்று கர்தினால் Nichols அவர்கள் அறிவித்தார்.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க புனித பூமித் திருப்பயணம் வெற்றிகரமாக அமைய, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 400க்கும் அதிகமான யூத மத ராபிகளும், மற்ற யூதத் தலைவர்களும் திருத்தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.
யூத மதத் தலைவர்களின் இச்செய்தி, இஸ்ரேல் நாட்டில் வெளியாகும் Ha'aretz என்ற செய்தித் தாளில், மே 25, ஞாயிறன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN

5. தென் கொரியாவைச் சேர்ந்த கர்தினால் ஒருவர், முதல் முறை வட கொரியாவுக்குப் பயணம்

மே,21,2014. தென் கொரியாவின் Seoul உயர்மறை மாவட்டத்தின் பேராயர் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், இப்புதன் காலையில் வட கொரியாவின் Kaesong என்ற வர்த்தக நகருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார்.
தென் கொரியாவைச் சேர்ந்த கர்தினால் ஒருவர், வட கொரியாவுக்குச் சென்றது இதுவே முதல் முறை என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 14 முதல் 18 முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியாவுக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின்போது அவர் ஒருவேளை, வடகொரியாவின் Pyongyang நகரில் திருப்பலி ஆற்றக்கூடும் என்ற கருத்தும் ஆசிய செய்திக் குறிப்பில் காணப்படுகிறது.
Pyongyang பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி என்ற பொறுப்பில், கர்தினால் Yeom Soo-jung அவர்கள் மேற்கொண்ட இப்பயணத்தில் வடகொரியாவின் அரசு அதிகாரிகளுடன் எவ்வித சந்திப்பையும் மேற்கொள்ள வில்லை என்று கூறப்பட்டுள்ளது.
"ஆசியாவின் எருசலேம்" என்ற புகழைப் பெற்றிருந்த Pyongyang பகுதியில், 1953ம் ஆண்டு முடிய, ஒரு இலட்சம் கத்தோலிக்கர்களும், 2இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களும் வாழ்ந்தனர் என்றும், தற்போது, அங்கு வெளிப்படையாக வாழமுடியாமல் தவிக்கும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 200 முதல் 2000 ஆக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews

6. ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் இல்லாதது வருத்தத்தைத் தருகிறது - பேராயர் Gänswein

மே,21,2014. மத சார்பற்ற நிலையை ஒரு போர்கால நடவடிக்கைபோல ஏற்று செயல்படுத்தும் ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் இல்லாதது வருத்தத்தைத் தருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தையின் இல்லப் பொறுப்பாளராகவும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்ட செயலராகவும் பணியாற்றும் பேராயர் Georg Gänswein அவர்கள், அண்மையில் சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணத்தின்போது இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், யூதர்கள், இஸ்லாமியர் ஆகியோருக்கு எதிராக பேசுவதையும், செயல்படுவதையும் வன்மையாகக் கண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், கிறிஸ்தவர்கள் பாகுபாடுடன் நடத்தப்படும்போது பேசாமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறது என்று பேராயர் Gänswein அவர்கள் கூறினார்.
இதற்கிடையே, மே 22, இவ்வியாழன் முதல், 24, இச்சனிக்கிழமை முடிய ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், இத்தேர்தலில் மக்கள் அனைவரும் ஆர்வமாகக் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற அழைப்பை மனித உரிமை அமைப்புக்கள் விடுத்துள்ளன.

ஆதாரம் : Zenit

7. அகில உலக இயேசு சபையின் தலைவர், அருள் பணியாளர் Nicolás அவர்கள், தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருப்பதாக அறிவிப்பு

மே,21,2014. கடந்த ஆறு ஆண்டுகள் அகில உலக இயேசு சபையின் தலைவராகப் பணியாற்றிய அருள் பணியாளர் Adolfo Nicolás அவர்கள், தன் தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருப்பதாகவும், அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம், இயேசு சபையின் பொது அவையை 2016ம் ஆண்டு இறுதியில் கூட்டவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். 
தான் 78 வயதை நிறைவு செய்திருப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடும், தன் ஆலோசகர்களோடும், மேற்கொண்ட கலந்துரையாடலின் இறுதியில், தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அருள் பணியாளர் Nicolás அவர்கள், இச்செவ்வாய் மதியம் அனைத்துலக இயேசு சபையினர் அனைவருக்கும் எழுதியுள்ள மடலில் கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு சனவரி 19ம் தேதி, உரோம் நகரில் நடைபெற்ற 35வது பொது அவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அருள் பணியாளர் Nicolás அவர்கள், இயேசு சபையின் அதிகாரக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொணரும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக இயேசு சபையை வழிநடத்தி வருகிறார்.
கூடவிருக்கும் 36வது பொது அவை, 2015ம் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்டு, ஓராண்டு தயாரிப்பு முயற்சிகளின் முடிவில், 2016ம் ஆண்டு இறுதியில் கூடும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN

8. இலங்கை மடுமாதா திருத்தலத்தில் நடைபெற்ற தியானம், மற்றும் திருப்பயணத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்

மே,21,2014. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மடுமாதா திருத்தலத்தில் அண்மையில் நடைபெற்ற நான்கு நாள் தியானம், மற்றும் திருப்பயணத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
2013ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கைக் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களால் அறிவிக்கப்பட்ட மரியன்னை ஆண்டு அறிக்கையையொட்டி நடைபெற்ற இந்தப் பக்தி முயற்சிகளில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தப் பக்தி முயற்சிகளின் துவக்கமாக, மரியன்னையின் செபமாலை, தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளில் சொல்லப்பட்டது என்றும், இதைத் தொடர்ந்து, கர்தினால் இரஞ்சித் அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மடுமாதா திருத்தலத்தில் ஆகஸ்ட் மாதம் 15ம் கொண்டாடப்படும் திருநாளின்போது, இலங்கை, இந்தியா, மற்றும் அண்மைய நாடுகளிலிருந்து அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது 6 இலட்சம் என்று ஆசியச் செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews