Sunday 31 March 2013

ROBERT JOHN KENNEDY: தமிழர்கள் இலங்கையில் சிங்களர்கள் முன்பே வாழ்ந்திர...

ROBERT JOHN KENNEDY: தமிழர்கள் இலங்கையில் சிங்களர்கள் முன்பே வாழ்ந்திர...:   தமிழர்கள்  இலங்கையில் சிங்களர்கள் முன்பே வாழ்ந்திருக்கிறார்கள்   எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வ...

தமிழர்கள் இலங்கையில் சிங்களர்கள் முன்பே வாழ்ந்திருக்கிறார்கள்

 தமிழர்கள்  இலங்கையில் சிங்களர்கள் முன்பே வாழ்ந்திருக்கிறார்கள்
 
எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.
சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.''
சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.

அனுராதபுரம்

இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புகழ் பெற்ற தமிழ் மன்னன்

இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.
இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.

சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.

மகாவம்சம் கூறுவதாவது:-

"எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந் தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.

அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.

ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, "உன் குறை என்ன?'' என்று கேட்டான்.
"உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்'' என்று கூறினாள்.

அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)

புத்தர் கோவில்

ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.

உடனே மந்திரிகளை அழைத்து, "புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்'' என்றான்.

அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். "நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்'' என்று கூறினர். "நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்'' என்று தெரிவித்தார்கள்.

மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.

துட்ட காமினி


இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)

ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.

தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. "எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்'' என்று தகவல் அனுப்பினார்.

தந்தைக்கு அனுப்பிய "பரிசு''

இதனால் சீற்றம் அடைந்த துட்ட கா மினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.

இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.

இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.

சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.

பயங்கர போர்


பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
துட்டகாமினியை கோட் டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.

பட்டத்து யானை

இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.

"நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்'' என்றான்.
போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.

கோவில்

எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.

"இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.

அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.

ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

நன்றி:‍ தினத்தந்தி
நன்றி!!இலங்கைத்தமிழர்வரலாறு

Friday 29 March 2013

ROBERT JOHN KENNEDY: "Francis set a bad example by washing the feet of ...

ROBERT JOHN KENNEDY: "Francis set a bad example by washing the feet of ...: "Francis set a bad example by washing the feet of two women" ...

"Francis set a bad example by washing the feet of two women"

"Francis set a bad example by washing the feet of two women"

Rss Feed Twitter Facebook Print
Bergoglio washed the feet of a Muslim woman at the Casal del Marmo detention centre for young offenders
Bergoglio washed the feet of a Muslim woman at the Casal del Marmo detention centre for young offenders

Traditionalists are fuming at Francis' gesture during the Holy Thursday mass. He washed the feet of two women, one of whom was a Muslim

alessandro speciale vatican city Alarm bells rang straight after Pope Francis’ election when he presented himself to the world, from the Loggia of the Blessings, wearing a simple iron cross. No  red mozzetta and no stole. Eyebrows were raised among traditionalist Catholics who defend the pre-conciliar Latin Mass.
 

The Argentinean Pope’s CV attracted instant criticism from fans of the Tridentine Mass. In an analytical piece published by traditionalist website Rorate Coeli, one Latin American journalist  summed up his reaction to Bergoglio’s election as “The Horror”: “Of all the unthinkable candidates, Jorge Mario Bergoglio is perhaps the worst. Not because he openly professes doctrines against the faith and morals, but because, judging from his work as Archbishop of Buenos Aires, faith and moral seem to have been irrelevant to him.”

Above all, the new Pope was a “sworn enemy of the traditional mass,” the Latin Mass that is, and apparently forbid the implementation of the Motu Proprio Summorum Pontificum – with which Benedict XVI liberalised the Tridentine Mass as an “extraordinary form” of the Roman Rite - in his archdiocese.
 
 
Another example, was the piece by Catholic commentator Michael Brendan Dougherty published in the National Post, in which he rashly – just three days after the result of the Conclave was announced - defined Bergoglio’s election as “one more in the pile of recent Catholic novelties and mediocrities.”  This is because Pope Francis “falls in line with the larger era of the Church in the past 50 years, which has been defined by “ill-considered experimentation”: “a new synthetic vernacular liturgy…the dramatic gestures and “saint factory” of Pope John Paul II’s papacy, along with the surprise resignation of Benedict XVI.”
 
But hostilities exploded yesterday afternoon, after Pope Francis washed and kissed the feet of two girls – one of them Muslim – during the Holy Thursday Mass celebrated in the Casal del Marmo detention centre for young offenders, in Rome.
 

Pope Francis was accused of setting a bad example and violating Church law, to the extent that Rorate Coeli promptly declared the “reform of the reform” – that is, the return to the more traditional rites and celebrations after the drift, seen by some critics as a path of carelessness and unjustified innovation after the Second Vatican Council – which many expected Benedict XVI to carry through.
 

Ed Peters, an expert on Canon law and a blogger who is famous in the Vatican, naturally did not accuse the Pope of violating a divine directive, but by ignoring it, “what he does do, I fear, is set a questionable example at Supper time.”
 

In 1988 the Congregation for Divine Worship and the Discipline of the Sacraments published the Circular Letter Paschales Solemnitatis on the celebration of Easter rites. No. 51 of the circular letter states: "The washing of the feet” is a rite that is only performed on “chosen men”. The original Latin viri selecti is crystal clear on the fact that the chosen ones must be male.
 

A year earlier, the U.S. Episcopal Conference had decreed that although the practice of washing women’s feet was not mentioned in liturgical books, “the intention to emphasize service along with charity in the celebration of the rite is an understandable way of accentuating the evangelical command of the Lord "who came to serve and not to be served.”
 

The question came back into the limelight again in 2005 when the Archbishop of Boston, Cardinal Sean O’Malley sparked a controversy because he wanted to open up the rite to women. On that occasion, the Congregation for Divine Worship had explained that whilst the “liturgical obligation” of washing men’s feet alone, remained, local bishops were free to decide otherwise, according to the pastoral needs of his diocese.
 

Then Pope Francis made his humble gesture. Speaking to Associated Press, Vatican spokesman Fr. Federico Lombardi explained that “in a "grand solemn celebration" of the rite, it would make sense to only involve men because during the Last Supper, Christ washed the feet of the 12 apostles, all of whom were male. But in the case of Casal del Marmo “the rite was for a small, unique community made up also of women. It was a specific situation in which excluding the girls would have been inopportune in light of the simple aim of communicating a message of love to all in a group that certainly didn't include refined experts in liturgical rules."
Source: Vatican Insider.

ROBERT JOHN KENNEDY: Dear Friends, Good Friday alone bring Easter

ROBERT JOHN KENNEDY: Dear Friends, Good Friday alone bring Easter: Dear Friends, Good Frida y alone bring Easter

Dear Friends, Good Friday alone bring Easter

Dear Friends, Good Friday alone bring Easter

ROBERT JOHN KENNEDY: School denies admission to gang rape victim Social...

ROBERT JOHN KENNEDY: School denies admission to gang rape victim Social...: School denies admission to gang rape victim Social organisations have expressed concern over the threat to the girl’s life. ...

School denies admission to gang rape victim Social organisations have expressed concern over the threat to the girl’s life.

School denies admission to gang rape victim

Social organisations have expressed concern over the threat to the girl’s life.

 

Guwahati:  A school in Meghalaya has reportedly denied admission to a gang rape victim.

Harassed by people in her hometown Williamnagar following the incident in December last year, the victim relocated to Tura in the state’s Western Garo Hills to avoid humiliation and pursue studies.

“We are not aware of the denial of admission by the school to the girl. However, exemplary action will be taken against the school if it is found guilty,” Western Garo Hills deputy commissioner Prabin Bakshi said.

The victim, a 16-year-old student of class IX, has now been kept at an unspecified location by the authorities to protect her from public glare.

Her parents have been allegedly threatened by some people to withdraw the case.

Seventeen people, including eight juveniles, have been arrested in connection with the case. Two of the accused are relatives of a minister and a surrendered militant leader.

The incident took place when the girl was returning home along with a friend from a festival in Williamnagar.

Social organisations in the state have expressed concern over the threat to the girl’s life.

But Bakshi claimed she was in ‘safe hands’.

“She is safe. She is in a hostel and is being looked after by Meghalaya State Women Commission. They are now in the process of finding a school for her,” he said.

Asked about the alleged threats to the parents, Bakshi said, “We have come to know about the alleged threats. However, we are yet to receive any formal complaint.”

“Trial in the case is going on a very fast pace. All efforts are being made to ensure that it goes on in a free and fair manner,” he added.

Source: DNA

ROBERT JOHN KENNEDY: Inquest into Mangalore nurse’s death to begin in M...

ROBERT JOHN KENNEDY: Inquest into Mangalore nurse’s death to begin in M...: Inquest into Mangalore nurse’s death to begin in May The nurse died following a hoax call by two Australian RJs. ...

Inquest into Mangalore nurse’s death to begin in May

Inquest into Mangalore nurse’s death to begin in May

The nurse died following a hoax call by two Australian RJs.

 

London:  The inquest into the death of an Indian Catholic nurse, who allegedly committed suicide following a hoax call, would begin on May 2.

In a statement read by MP Keith Vaz on behalf of the nurse’s family in the Westminster Coroner’s Court, he said, “Today marks the beginning of the end as far the legal process is concerned but it does not take away the terrible grief the family is still suffering.”

The next few weeks are going to be very difficult for the family until May 2 when, of course, the inquest will begin, he added.

“These have been dreadful, dreadful weeks and months for the family. “They will never ever come to terms with the death of Jacintha, who they loved. so much, but they hope this process will begin the healing process,” he added.

Jacintha Saldanha’s husband Benedict Barboza and the couple’s children Lisha and Junal were also present in the court.

Saldanha, a nurse at King Edward VII Hospital, was found dead by colleagues after answering a hoax call from two Australian RJs while the Duchess of Cambridge was in the hospital’s care in December last year.

Saldanha left three notes before she died. Two were in the room where she was found hanging, while a third was found among her personal possessions, police said.

Source: this is bristol.co.uk

ROBERT JOHN KENNEDY: சர்க்கரை நோய் அல்லது, நீரழிவு நோய்

ROBERT JOHN KENNEDY: சர்க்கரை நோய் அல்லது, நீரழிவு நோய்: சர்க்கரை நோய் அல்லது , நீரழிவு நோய்  நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகின்ற...

சர்க்கரை நோய் அல்லது, நீரழிவு நோய்

சர்க்கரை நோய் அல்லது, நீரழிவு நோய்
 நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகின்றன. அதேசமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. குளுகோஸ் எனும் சர்க்கரைதான் நம் உடலுக்குக் கிடைக்கும் சக்தி. இது இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாகவே சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத்தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் இரத்தத்திலேயே தங்கி விடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால்தான் அது சர்க்கரை நோய் அல்லது, நீரழிவு நோய் என்று சொல்லப்படும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  பரம்பரை மரபணுக்களில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு.
மக்கள் தொகையில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளர்கள் இருக்கிறார்கள். சர்க்கரை நோயால் உலகம் முழுவதிலும் 28 கோடியே 50 இலட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 5 கோடியே 8 இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு ஆகும். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.


 

ROBERT JOHN KENNEDY: சூறாவளி

ROBERT JOHN KENNEDY: சூறாவளி: சூறாவளி  ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 1000 சூறாவளிகள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாகின்றன. உலகில் உருவாகும் சூறாவளிகளில் இது 75 விழுக்காடு...

சூறாவளி

சூறாவளி
 ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 1000 சூறாவளிகள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாகின்றன. உலகில் உருவாகும் சூறாவளிகளில் இது 75 விழுக்காடு ஆகும். மே, ஜூன் மாதங்களிலேயே இவை அதிகம் உருவாகின்றன. 1950ம் ஆண்டு முதல் சூறாவளிகளின் எண்ணிக்கை அமெரிக்க ஐக்கிய நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பதிவின்படி, 2003ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும், அந்நாட்டில் 543 சூறாவளிகள் பதிவாயின.
இந்நாட்டின் தென் எல்லையில் உள்ள Texas மாநிலத்திற்கும், வட எல்லையில் உள்ள வட Dakota மாநிலத்திற்கும் இடையே நேர்கோட்டில் அமைந்ததுபோல் உள்ள மாநிலங்கள் அதிகமான சூறாவளிகள் கடந்து செல்லும் பாதையாக அமைந்துள்ளன.
சூறாவளி நேரத்தில் வீசும் சுழல் காற்றின் வேகமும் சக்தியும் வியப்பூட்டுவன. ஒருமுறை Oklahoma மாநிலத்தில் இருந்த ஒரு சாலையோர உணவு விடுதி (Motel) அடியோடு  தூக்கிச் செல்லப்பட்டு, அதன் பகுதிகள் பல இடங்களில் வீசப்பட்டன. அவ்வுணவு விடுதியின் பெயர் பலகை அடுத்த மாநிலமான Arkansasல் கண்டுபிடிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு Mississippi மாநிலத்தில் வீசிய சூறாவளி, 83 டன் எடையுள்ள சரக்கு இரயில்பெட்டித் தொடர் ஒன்றை 80 அடி தூரத்திற்குத் தூக்கிச்சென்று வீசியது.
இதுவரை பதிவு செய்யப்பட்ட சூறாவளிகளில், 1989ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பங்களாதேஷின் Daulatpur, Saturia ஆகிய நகரங்களைத் தாக்கிய சூறாவளியில் 1300க்கும் அதிகமானோர் இறந்தனர் என்பதே அதிக உயிர்களைப் பலிவாங்கிய சூறாவளியென்று சொல்லப்படுகிறது. 1925ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் மூன்று மாநிலங்கள் வழியே கடந்துசென்ற ஒரு சூறாவளி 695 பேரின் உயிரைப் பறித்ததே அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான உயிர் பலியாகும்.

 

ROBERT JOHN KENNEDY: பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்

ROBERT JOHN KENNEDY: பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்: பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் .   அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத...

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்.
 
அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.


மருத்துவப் பயன்கள். . .

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது

ROBERT JOHN KENNEDY: மனித மூளையும் அதன் செயல்திறனும்

ROBERT JOHN KENNEDY: மனித மூளையும் அதன் செயல்திறனும்: மனித மூளையும் அதன் செயல்திறனும் 1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உ...

மனித மூளையும் அதன் செயல்திறனும்

மனித மூளையும் அதன் செயல்திறனும்

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

It would be wonderful if Wojtyla was canonised in the Year of Faith

It would be wonderful if Wojtyla was canonised in the Year of Faith

Rss Feed Twitter Facebook Print
Dziwisz with Wojtyla
Dziwisz with Wojtyla

Vatican Insider interviews the Archbishop of Cracow, Cardinal Stanislaw Dziwizs

Domenico Agasso Jr. vatican city The whole of Poland is anxious and calling for the canonization of John Paul II and “it would be wonderful if it took place in the Year of Faith, so by November.” These are the words of the Archbishop of Cracow, Cardinal Stanislaw Dziwisz, Karol Wojtyla’s historic personal secretary who denied speaking to Pope Francis about the Polish Pope’s elevation to sainthood but did not hide his hope that the rite would be celebrated soon, “possibly in October, 35 years after his election to the Throne of Peter.” The cardinal, who spent 27 years by John Paul II’s side, was explicit in expressing this wish. He said he was “happy Francis will be celebrating it,” because Jorge Mario Bergoglio “will do the same as John Paul II did: he will demolish walls, and open the doors of the Church to everyone, bringing the world closer to the Church.”

What is it about Francis that reminds you of John Paul II?
“I am pleased with our choice in the Conclave for many reasons. Firstly because Bergoglio speaks the language of poverty; the content of his speeches is fresh and the Church needs this charisma. I am also pleased because of his similarities with Karol Wojtyla: I would like to stress that it was John Paul II who appointed Bergoglio Archbishop in 1992 and Cardinal in 2001. I am certain that history will give them one thing in common: they will both have opened the doors of the Church to everybody, bringing it closer to people’s concrete everyday life; they will both have built bridges, even with distant and hostile “worlds”. Francis’ way of communicating is similar to Wojtyla’s: this was evident even in the first few days of his pontificate: he respects protocol but loves to speak off-the-cuff, using direct and clear language. This makes him even more likeable.”

Anything else about Francis that reminds you of Wojtyla?
“Wojtyla fought against the extremist aspects of communism and Bergoglio fought against the distortions of “Liberation Theology”: both found Marxism was not the solution to social problems. Then there are their first announcements to cardinal electors following their respective elections: Bergoglio said: “May God forgive you for what you have done,” Wojtyla said: “for what you got up to”. The meaning and irony of both statements were the same.
 
Was your statement on Wojtyla not coming down from the cross a comparison with Benedict XVI’s resignation?
“I am still hurt by this controversy; it torments me every day, because that’s not what I said. I did not draw a link or even worse, contrast Benedict XVI’s resignation with John Paul II’s behaviour. I love Joseph Ratzinger immensely.”
 
You voted for Francis quickly. What does this mean?
“It means the College of Cardinals worked seriously, in a mature, responsible and unified manner. It also means the Lord guided the Conclave.”

Did the poisonous climate that had settled in the Church over the past few years affect the Conclave?
“No. Putting cardinals into neat categories: Curia members and reformers, or into the older categories of conservatives and progressivists, serves no purpose whatsoever. Some changes are indeed needed in the Curia and the Pope’s name, which represents the Church’s “reformer”, St. Francis is a good omen. But the media has exaggerated certain points. Cardinals are good and experienced people.”

But can you confirm that there were tensions in the General Congregations that preceded the Conclave?
“There were differences in opinion: we are all mature and intelligent individuals and each of us has our own thoughts: discussing and debating these helps us move forward. It would be a big problem if we didn’t compare ideas.”

This seemed like a good time (35 years after the last one) for another Italian Pope, Cardinal Angelo Scola. Why was he not elected in your opinion?
“Bergoglio is of Italian origin. Will that answer suffice?”

Would you permit me to say no?
“Not everyone needs to become Pope in order to serve the Church. And, in any case, I don’t think the Pope’s nationality is an issue. The College of Cardinals is full of excellent figures. You know who I think has a very bright future ahead of them?”

Who?
“The Filippino cardinal Luis Antonio Tagle. He is a special and very likeable character with his “child-like” face; he cheers everyone up.”

Let’s return to the Pope: what did you think when you heard he had chosen the name Francis?
“His choice sums up the focal points of this pontificate: poverty, simplicity and humility. And he put all three into practice immediately.”

ROBERT JOHN KENNEDY: போஸ்பொரஸ் பாலம்

ROBERT JOHN KENNEDY: போஸ்பொரஸ் பாலம்: போஸ்பொரஸ் பாலம் போஸ்பொரஸ் பாலம் , முதல் போஸ்பொரஸ் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது 1973ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது , உலகிலே ந...

போஸ்பொரஸ் பாலம்

போஸ்பொரஸ் பாலம்

போஸ்பொரஸ் பாலம், முதல் போஸ்பொரஸ் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது 1973ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது, உலகிலே நான்காவது மிக நீளமான இரும்புத் தொங்குபாலமாகவும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு வெளியே முதல் நீளமான தொங்குபாலமாகவும் இருந்தது. ஆனால் தற்போது உலகின் 21வது நீளமான இரும்புத் தொங்குபாலமாக இருக்கின்றது. போஸ்பொரஸ் பாலம், துருக்கி நாட்டின் இஸ்தான்புலில், போஸ்பொரஸ் ஜலசந்தியை இணைக்கும் இரு தொங்குபாலங்களில் ஒன்றாகும். இரண்டாவது தொங்குபாலம் Fatih Sultan Mehmet பாலமாகும். இந்த முதல் போஸ்பொரஸ் பாலம், ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இஸ்தான்புலின் ஐரோப்பியப் பகுதியிலுள்ள Ortaköy என்ற இடத்தையும், ஆசியப் பகுதியிலுள்ள Beylerbeyi என்ற இடத்தையும் இப்பாலம் இணைக்கிறது. போஸ்பொரஸ் பாலத்தைத் தாங்கி நிற்கும் இரும்புக் கயிற்றின் நீளம் 1,560 மீட்டர் மற்றும் இதன் அகலம் 33.40 மீட்டர். இப்பாலம், கடல் மட்டத்திலிருந்து 64 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பாலத்தின் தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் 1,074 மீட்டர். இந்தத் தூண்களின் மொத்த உயரம் 165 மீட்டர். துருக்கி குடியரசானதன் 50ம் ஆண்டு நிறைவுக்கு வந்த அடுத்த நாளான அக்டோபர் 30ம் தேதி, 1973ம் ஆண்டில் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இது திறக்கப்பட்டபோது ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முதல் பாலம் என்ற பெயரைப் பெற்றது.


Thursday 28 March 2013

ROBERT JOHN KENNEDY: மிதிவண்டி (Cycle) தோன்றிய வரலாறு...

ROBERT JOHN KENNEDY: மிதிவண்டி (Cycle) தோன்றிய வரலாறு...: மிதிவண்டி (Cycle)  தோன்றிய வரலாறு... 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து...

மிதிவண்டி (Cycle) தோன்றிய வரலாறு...

மிதிவண்டி (Cycle)  தோன்றிய வரலாறு...

19ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த சைக்கிளைக் கண்டுபிடித்த பெருமை பலரைச் சாரும். பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸில் வாழ்ந்த Comte Mede De Sivrac, மரதுண்டுகளைக் கொண்டு வீட்டிற்குத் தேவையான அலங்காரப் பொருட்களைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம்தான் சைக்கிள் எனப்படும் மிதிவண்டி.
Sivracன் வடிவத்தையும் தொழில்நுட்பத்தையும் முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த Karl Von Drais என்பவர் 1817ம் ஆண்டு வடிவமைத்த சைக்கிளில் முதன் முதலாக Steering எனப்படும் திசைமாற்றி பொருத்தப்பட்டது.
அதுவரை மரத்தால் வடிவமைக்கப்பட்டு வந்த சைக்கிளை, 1818ம் ஆண்டு, டென்னிஸ் ஜான்சன் என்பவர் முதன் முதலாக உலோகப்பொருளைப் பயன்படுத்தி, வடிவமைத்தார். இந்த மூன்று வடிவங்களும் காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டிருந்தன.
உலகில் முதன் முதலில் Pedalஐ மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை Krikpatric Macmillan என்பவரையே சாரும். எனவேதான் சைக்கிளைக் கண்டறிந்தவராக Macmillan அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்தில் கொல்லராகப் பணியாற்றி வந்த இவர், திசைமாற்றி (steering), தடை (brake) மற்றும் மிதிஇயக்கி (pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839ம் ஆண்டு வடிவமைத்தார்.
சைக்கிளின் பரிணாம வளர்ச்சி இதற்குப் பின்னரும் பல ஆண்டுகள் நீடித்தது. 1885ம் ஆண்டு John Kemp Starley என்பவர், இரு சமமான அளவுடைய சக்கரங்களைக் கொண்டு வடிவமைத்த சைக்கிளைத்தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.

நன்றி: வரலாற்றுச் சுவடுகள்


 

ROBERT JOHN KENNEDY: வாழைப்பழம்

ROBERT JOHN KENNEDY: வாழைப்பழம்: வாழைப்பழம்   வாழை , அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக ...

வாழைப்பழம்

வாழைப்பழம்
 வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பாப்புவா நியூ கினியில் பயிரிடப்பட்டது. இந்நாள்களில் வெப்பமான பகுதிகளெங்கும் வாழை பயிரிடப்படுகிறது. வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600ம் ஆண்டு புத்தமத ஏடுகளில் காணப்படுகிறது. கி.பி 650ம் ஆண்டில் முகலாயர்கள் இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்கு கொண்டுவந்தனர். அரேபிய வணிகர்கள் வாழையை ஆப்ரிக்காவெங்கும் பரப்பினர். பின்னர் போர்த்துக்கீசிய வணிகர்கள் மூலமாக வாழை அமெரிக்காவிற்குச் சென்றது. உலகில், வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்குவதோர் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. பொதுவாக வாழைப்பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகின்றன. இப்பழம், நெப்ரைடிஸ்என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது. மூளையில் செரோடினின்உருவாக வாழைப்பழம் உதவுகிறது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தோல், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் சிறப்பாக செயல்படுவதாக, பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசையன்ஸ் நிறுவன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். காலை உணவு, மதிய உணவு, பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்கி, அதன் மூலம் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 27/03/13

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 27/03/13: 1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான் 2. திருத்தந்தை பிரான்சிஸ் வளர் இளம் கைதிகள் இல்லத்தி...

Catholic News in Tamil - 27/03/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான்

2. திருத்தந்தை பிரான்சிஸ் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் நிறைவேற்றும் திருப்பலி, தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும்

3. திருத்தந்தையர் தங்கிவந்த வத்திக்கான் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தங்கமாட்டார்

4. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழு வழங்கியுள்ள உயிர்ப்பு விழாச் செய்தி

5. எருசலேமில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி

6. புதியத் திருத்தந்தைக்குச் செபிக்குமாறு, காத்மண்டு ஆயர் அந்தனி ஷர்மா வேண்டுகோள்

7. அர்ஜென்டினா மக்கள் ஒன்றிணைந்து வருவதற்கு நல்லதொரு தருணம் - ஆயர் பேரவைத் தலைவர்

8. மும்பை நகரில் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு இயேசுவின் பாடுகளைக் குறிக்கும் ஊர்வலம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான்

மார்ச்,27,2013. ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான், ஆயினும் ஆண்டவருக்கு நம்பிக்கையுள்ள பணியாளராக இருக்க விரும்புகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
வத்திக்கானில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இப்புதன் காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கர்தினால் Angelo Comastri அவர்கள் ஆற்றிய சிறப்புத் திருப்பலிக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வூழியர்களைச் சந்தித்து உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார்.
ஒரு சில நிமிடங்களே நீடித்த இந்த சந்திப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 23ம் ஜான் குறித்த ஒரு நகைச்சுவை கூற்றுடன் துவக்கினார்.
ஒரு முறை திருத்தந்தை 23ம் ஜான் அவர்களைச் சந்தித்த ஒரு வெளிநாட்டுத் தூதர் வத்திக்கானில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்று கேட்டதற்கு, திருத்தந்தை 23ம் ஜான், "பாதி பேர்" என்று கூறியதை நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், அங்கு கூடியிருந்த ஊழியர்கள் அந்தப் பாதிப் பேரில் அடங்குவர் என்று குறிப்பிட்டார்.
இத்திருப்பலியின் இறுதியில் திருத்தந்தையைச் சந்தித்தது தங்கள் அனைவருக்கும் ஓர் ஆனந்த அதிர்ச்சியே என்று கர்தினால் Comastri திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் நிறைவேற்றும் திருப்பலி, தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும்

மார்ச்,27,2013. புனித வியாழன் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் இல்லத்தில் நிறைவேற்றும் திருப்பலி, திருத்தந்தையின் விருப்பத்திற்கிணங்க, ஊடகங்களின் தலியீடு இல்லாத தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் சார்பில், உரோம் நகர் ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini அவர்களும், வளர் இளம் கைதிகள் இல்லத்தில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்தந்தை Gaetano Greco அவர்களும் மட்டுமே திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்வர்.
11 இளம்பெண்கள் உட்பட 50 இளம் கைதிகள் கலந்து கொள்ளும் இத்திருப்பலியில், திருத்தந்தை ஆற்றும் பாதம் கழுவும் சடங்கில் பங்கேற்க, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 இளையோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பலிக்குப் பின் அவ்வில்லத்தில் உள்ள 150க்கும் அதிகமான இளையோரை, திருத்தந்தை சந்தித்துப் பேசுகிறார். இச்சந்திப்பின்போது, அவ்விளையோர் மரத்தால் உருவாக்கிய ஒரு சிலுவையையும், முழந்தாள்படியிடும் ஒரு மணையையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளிக்கின்றனர்.
திருத்தந்தையும் அங்குள்ள அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி, பாஸ்கா வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி


3. திருத்தந்தையர் தங்கிவந்த வத்திக்கான் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தங்கமாட்டார்

மார்ச்,27,2013. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தந்தையர் தங்கிவந்த வத்திக்கான் மாளிகையில் தங்காமல், கான்கிளேவ் கர்தினால்கள் அவை நடைபெற்றபோது தான் தங்கியிருந்த புனித மார்த்தா இல்லத்திலேயே தொடர்ந்து தங்குவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முடிவு செய்துள்ளார்.
இம்முடிவை இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு அறிவித்த திருப்பீடப் பேச்சாளர், இயேசுசபை அருள்தந்தை Federico Lombardi, திருத்தந்தையர் இல்லத்தில் உள்ள நூலகத்தையும், பார்வையாளர்கள் அரங்கத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் தேவைப்படும்போது பயன்படுத்துவார் என்றும் அறிவித்தார்.
அதேபோல், ஞாயிறு மூவேளை செபஉரை வழங்குவதற்கும், இதுவரை பயன்படுத்தப்பட்ட மேல்மாடி சன்னலையே திருத்தந்தை பிரான்சிஸ் பயன்படுத்துவார் என்றும் அருள்தந்தை Lombardi குறிப்பிட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோதும், அவருக்குரிய பேராயர் இல்லத்தில் தங்காமல், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மக்களுடன் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ அடையாளத்தில், அன்னை மரியாவைக் குறிக்கும் அடையாளமான ஐந்து முனைகள் கொண்டிருந்த விண்மீன், எட்டு முனைகள் கொண்ட விண்மீனாக மாற்றப்பட்டுள்ளது என்றும், இயேசு வழங்கிய மலைப் பொழிவில் கூறப்பட்டுள்ள பேறுபெற்றோர் என்ற 8 வாக்கியங்களை நினைவுறுத்தும் வகையில் 8 முனைகள் கொண்ட விண்மீன் அமைக்கப்பட்டுள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி


4. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழு வழங்கியுள்ள உயிர்ப்பு விழாச் செய்தி

மார்ச்,27,2013. மனிதர்கள் ஒவ்வொருவரும் முழுமையான வாழ்வில் மகிழும் வகையில், நீதியும் அமைதியும் நிலவும் புதிய சமுதாயம் என்ற பின்னணியில் மட்டுமே இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையும் நாம் புரிந்துகொள்ள முடியும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் உயிர்ப்பு விழாச் செய்தி கூறியுள்ளது.
இப்பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Yvon Ambroise, மற்றும் இப்பணிக்குழுவின் உறுப்பினர்களான ஆயர் Mathew Arackal, மற்றும் ஆயர் Gerald Almeida ஆகியோருடன், செயலரான அருள்தந்தை Charles Irudayam அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இச்செய்தியில், திருத்தூதர் பவுல் அடியார் எழுதிய திருமுகங்களின் வரிகள் மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குருத்து ஞாயிறன்று வழங்கிய மறையுரையின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள இச்செய்தி, இவ்வுலகில் நிலவும் பல்வேறு தீய சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டுமென்ற அழைப்பையும் விடுக்கிறது.
நமக்கு விடுதலை வழங்கும் கிறிஸ்துவுடன் இணைந்து, உலகை அடக்கி ஆளும் தீய சக்திகளுக்கு எதிராகப் போராடுவது ஒன்றே உண்மையான கிறிஸ்தவர்களின் அடையாளம் என்று மறைந்த பேராயர் Oscar Romero கூறியுள்ள வார்த்தைகளையும் தங்கள் செய்தியில் கூறியுள்ளனர் இந்திய ஆயர்கள்.

ஆதாரம் CBCI - நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழு

5. எருசலேமில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி

மார்ச்,27,2013. இறை நம்பிக்கையும், நல்மனதும் கொண்ட மக்கள் அனைவரும், சிறப்பாக, அதிகாரத்தில் உள்ள அனைவரும் நீதியையும் அமைதியையும் உலகில் நிலைநாட்ட உழைக்கவேண்டும் என்ற அழைப்புடன் எருசலேமில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் உயிர்ப்பு விழாச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
சிரியா, லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் அமைதியற்ற சூழல் முற்றிலும் நீங்க அனைத்துலகும் இணைந்து உழைக்கவேண்டும் என்று இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நமது விசுவாசத்தின் தாய் வீட்டைப்போல் விளங்கும் புனித பூமியில் திருப்பயணம் மேற்கொள்ள உலகின் அனைத்து நாட்டு மக்களையும் அழைக்கும் இச்செய்தியில், புனித பூமிக்கு வர முடியாதவர்கள் தங்கள் செபங்கள் மூலம் இங்குள்ள கிறிஸ்தவர்களுடன் இணையவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.
புனித பூமியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டும் இச்செய்தி, புனித பூமியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தோரின் எண்ணிக்கையும் உயரவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் செய்திப் பணி

6. புதியத் திருத்தந்தைக்குச் செபிக்குமாறு, காத்மண்டு ஆயர் அந்தனி ஷர்மா வேண்டுகோள்

மார்ச்,27,2013. நேபாளத்தில் ஜூன் மாதம் நிகழவிருக்கும் தேர்தல்கள் மூலம் நாடு நலமிக்க பாதையில் செல்வதற்கும், அகில உலகக் கத்தோலிக்கர்களின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் புதியத் திருத்தந்தைக்கும் செபிக்குமாறு, காத்மண்டு ஆயர் அந்தனி ஷர்மா மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டு நிகழ்ந்த குருத்து ஞாயிறுத் திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் ஷர்மா, நேபாளத்தில் மத சார்பற்ற நல்லதொரு அரசு அமைய செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள எடுத்துக்காட்டான வாழ்வு, கிறிஸ்துவை எடுத்துரைக்கும் பணியில் தங்களை உற்சாகப்படுத்துவதாக இத்திருப்பலியில் கலந்துகொண்ட இளையோர் கூறினார்.
குருத்து ஞாயிறு திருப்பலியில் கிறிஸ்தவர் அல்லாத ஏனைய மத இளையோர் பலர் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திருத்தந்தையின் சொற்களும் செயல்களும் தங்கள் உள்ளங்களை உயர்த்துகின்றன என்றும் அவர் விரைவில் பங்களாதேஷ் வருவதை எதிர்பார்த்திருப்பதாகவும் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவைச் சேர்ந்த இளையோர் கூறினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் AsiaNews

7. அர்ஜென்டினா மக்கள் ஒன்றிணைந்து வருவதற்கு நல்லதொரு தருணம் - ஆயர் பேரவைத் தலைவர்

மார்ச்,27,2013. திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நேரம், அர்ஜென்டினா மக்கள் பகைமை உணர்வுகளைக் களைந்து ஒன்றிணைந்து வருவதற்கு நல்லதொரு தருணம் என்று அர்ஜென்டினா ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
நம்மிடையே கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், திருத்தந்தையின் வழிகாட்டுதலுடன் வேற்றுமையில் நாம் ஒற்றுமை காண முடியும் என்று அர்ஜென்டினா ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் José Maria Arancedo, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்த அர்ஜென்டினா அரசுத் தலைவர் Cristina Fernandez அவர்கள், அச்சந்திப்பின் வழியாக புதிய எண்ணங்கள் எழுந்தன என்று தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக பேராயர் Arancedo தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
அர்ஜென்டினா அரசுக்கும் அந்நாட்டுத் திருஅவைக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன என்பதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இக்கருத்து வேறுபாடுகள் உச்சநிலையை அடைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் Fides

8. மும்பை நகரில் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு இயேசுவின் பாடுகளைக் குறிக்கும் ஊர்வலம்

மார்ச்,27,2013. புனித வெள்ளியன்று மும்பை நகரின் பல பகுதிகள் வழியே 7 கிலோமீட்டர் நீளத்திற்கு இயேசுவின் பாடுகளைக் குறிக்கும் ஓர் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CSF எனப்படும் கத்தோலிக்க மதசார்பற்ற அமைப்பின் தலைமைச் செயலர் ஜோசப் டயஸ் அவர்களால் துவக்கப்பட்ட இம்முயற்சி, 26வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மும்பை நகரின் மேற்கு Khar பகுதியில் உள்ள திரு இருதயக் கோவிலில் துவங்கும் இந்த பக்தி முயற்சி, Santacruz, Vakola, Kalina ஆகிய பகுதிகள் வழியேச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த ஊர்வலத்தில் ஆங்காங்கே கிறிஸ்துவின் பாடுகளில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகளை இளையோர் குழுவினர் அரங்கேற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் பல்வேறு அநீதிகளும், குறிப்பாக, கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் பல்வேறுதுயரங்களும் இந்த ஊர்வலத்தின்போது அரங்கேற்றப்படும் என்று CSF செயலர் ஜோசப் டயஸ் கூறியுள்ளார்.

ஆதாரம் CSFPost