Monday 30 December 2013

ROBERT JOHN KENNEDY: வெ‌ள்‌ளி‌க்கோள்

ROBERT JOHN KENNEDY: வெ‌ள்‌ளி‌க்கோள்: வெ‌ள்‌ளி‌க்கோள் நமது பூமியின் இரு புற‌த்‌திலு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது செவ்வாய் , வெள்ளி கோள்களாகு‌ம். இ‌தி‌ல் பூமிக்கு ‌மிக அருகில் அமைந...

வெ‌ள்‌ளி‌க்கோள்

வெ‌ள்‌ளி‌க்கோள்

நமது பூமியின் இரு புற‌த்‌திலு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது செவ்வாய், வெள்ளி கோள்களாகு‌ம். இ‌தி‌ல் பூமிக்கு ‌மிக அருகில் அமைந்திருப்பது வெள்ளிக் கோள்தான். அன்பு மற்றும் அழகுக்கான உரோமானியக் கடவுளின் பெயரில் இக்கோளுக்கு `வீனஸ்' என்று பெயரிடப்பட்டது. சூரியன், நிலா‌ இவற்றுக்கு‌ப் பிறகு வெள்ளி மிகுந்த ஒளியுடன் சுடர்விடும் கோள் ஆகும். சூரிய உதயம்சூரியன் மறைவு ஆகிய இரண்டு வேளைகளிலும் வெள்ளி‌க் ‌ கோளை‌க் காண முடியு‌ம். விண்ணியல் ஆய்வாளர்கள் ஒரு காலத்தில் வெள்ளியு‌ம் பூமியு‌ம் இரட்டைப்பிறவி என்று கருதினார்கள். ஏனெ‌னி‌ல் வெள்ளியின் குறுக்களவு ஏறக்குறைய பூமியை ஒத்திருக்கிறது. அதாவது இதன் குறுக்களவு, பூமியைவிட 650 கிலோ மீட்டர்கள்தான் குறைவு. பூமியுடன் ஒப்பிடுகையில் வெ‌ள்‌ளி‌க் கோள் 81.5 விழுக்காடு நிறை கொண்டது. ஆனால், இதை‌த் தவிர பூமிக்கும், வெள்ளிக்கும் வேறு எ‌ந்த ஒற்றுமையு‌ம் இல்லை. வெ‌ள்‌ளிக் ‌கோளி‌ன் புறவெளி மிகவும் வேறுபாடானது. இது 95 விழுக்காடு கரியமில வாயுவால் சூழப்பட்டுள்ளது. அதுதவிர, அடர்த்தியான கந்தக அமில மேகங்களால் சூழப்பட்டுள்ளது. அதுவே வெள்ளியின் உட்பரப்பை‌க் காணத் தடையாக உள்ளது. இந்த மேகங்கள் சூரிய ஒளியின் 76 விழுக்காட்டைப் பிரதிபலிப்பதால் வெள்ளி மிகுந்த ஒளியுடன் விளங்கும் கோளாகத் தோன்றுகிறது. சூரியக் குடும்பத்திலேயே மிகவும் சூடான கோளாகும் இது. அதாவது இது, புதன் கோளைவிட இரு மடங்கு வெப்பமானது. இத்தனைக்கும் சூரியனிலிருந்து புதனைப்போல இருமடங்கு தொலைவில் வெள்ளி அமைந்துள்ளது. சூரியனின் வெப்பம், வெள்ளிக் கோளுக்குள் கரியமில வாயுவால் தக்க வைக்கப்படுவதுதா‌ன் அ‌திக வெ‌ப்ப‌த்‌தி‌ற்கு‌க் காரண‌ம். வெள்ளியில் சாதாரணமாக நிலவும் த‌ட்பவெ‌ப்ப ‌நிலையான 460 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் காரீயம்கூட உருகிவிடும். இக்கோளில் காண‌ப்படு‌ம் புறவெளி அழுத்தமும் மிக அதிகமானது. அதாவது கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் நீந்துவது போன்ற அழுத்தம் இங்கு ‌நில‌ப்பர‌ப்‌பி‌ல் காணப்படு‌கிறது. ‌‌மிகுந்த ஒளியுடனு‌ம் அழகாகவு‌ம் இரு‌க்கு‌ம் வெ‌ள்‌ளிக் கோள் பா‌ர்‌த்து இர‌சி‌க்க‌த்தா‌‌ன் உக‌ந்தது. அ‌ங்குச் செ‌ன்று ம‌னித‌ர்க‌ள் வா‌ழ்வதை‌ப் ப‌ற்‌றி ‌நினை‌த்து‌க்கூட பா‌ர்‌க்க இயலாது.

ஆதாரம் : webdunia.com

ROBERT JOHN KENNEDY: செய்திகள் - 30.12.13

ROBERT JOHN KENNEDY: செய்திகள் - 30.12.13: செய்திகள் - 30.12.13   ------------------------------ ------------------------------ ------------------------------ ------------ 1. ...

செய்திகள் - 30.12.13

செய்திகள் - 30.12.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல்

2. திருக்குடும்பத் திருநாளன்று திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம்

3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

4. அமெரிக்க மக்கள் கருத்துக் கணிப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக உயர்ந்த இடம்

5. இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளிட பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு

6. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான போரை அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்

7. எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல்

டிச.30,2013. ஒரு குடும்பத்தில் வயது முதிர்ந்தோரும், குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே, அக்குடும்பத்தில் உறவுகள் நலமாக உள்ளனவா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 29, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட திருக்குடும்பத் திருநாளையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த 60,000க்கும் அதிகமான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருக்குடும்பத் திருநாளன்று நற்செய்தியாக வழங்கப்பட்டிருந்த, இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரும் எகிப்திற்குத் தப்பித்துச்செல்லும் நிகழ்வைத் தன் உரையின் மையமாக்கியத் திருத்தந்தை அவர்கள், உலகெங்கும், புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் குடும்பங்களைச் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.
சொந்த நாட்டிலிருந்து வேற்று நாடுகளுக்கு அன்னியராக விரட்டப்படும் மக்களை நினைவுகூரும் வேளையில், குடும்பங்களுக்குள் அன்னியராக நடத்தப்படும் மக்களையும் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல் என்று கூறினார்.
பொறுத்துக்கொள்ளுங்கள், நன்றி, மன்னித்துக்கொள்ளுங்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் நலமாக, மகிழ்வாக இருக்கும் என்று கூறியத் திருத்தந்தை, அனைவரையும் அந்த வார்த்தைகளை தன்னோடு சேர்ந்து சொல்லவைத்ததை, கூடியிருந்தோர் அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
நற்செய்தியை அறிவிப்பது என்ற உயர்ந்த செயல்பாடு ஒவ்வொரு குடும்பத்திலுமிருந்து துவங்குகிறது என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு நாள் குடும்ப வாழ்வையும் நிறைவுடன் வாழ, அன்னை மரியா, யோசேப்பு, இயேசு ஆகியோரின் உதவியை நாடுவோம் என்று தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருக்குடும்பத் திருநாளன்று திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம்

டிச.30,2013. டிசம்பர் 29, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூவேளை செப உரையை வழங்கியபின், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த குடும்பங்களையும், இத்தாலியின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இளையோரையும் சிறப்பாக குறிப்பிட்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
விரைவில் கூடவிருக்கும் கர்தினால்கள் அவையும், அதைத் தொடர்ந்து நிகழவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றமும், குடும்பம் என்ற மையக்கருத்தில் விவாதங்களை மேற்கொள்ளவிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவை மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக அமைய ஒரு சிறு செபம் ஒன்றைக் கூறினார்.
திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம் பின்வருமாறு:

திருக்குடும்பத்திடம் செபம்

இயேசு, மரியா, யோசேப்பே,
உங்களுக்குள் இருக்கும்
உண்மையான அன்பின் மகிமையைத் தியானிக்கின்றோம்.
உங்களிடம் நம்பிக்கையோடு இறைஞ்சுகிறோம்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
எமது குடும்பங்களும்
ஒன்றிப்பின் இடங்களாக, செபத்திற்கென கூடிவரும் மேல்மாடி அறைகளாக,
நற்செய்தியின் உண்மையான பள்ளிகளாக
குட்டிக் குடும்பத் திருஅவைகளாக
அமையும் வரம் தாரும்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
வன்முறையின், பிரிவினைகளின்
அனுபவத்தை இனிமேல்
ஒருபோதும் குடும்பங்கள் எதிர்நோக்காதிருக்கட்டும்.
குடும்பங்கள் காயப்பட்டு அல்லது அவமானப்பட்டு இருந்தால்
அவை விரைவில் ஆறுதலையும் நற்சுகத்தையும் பெறட்டும். 
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
குடும்பத்தின் புனிதத்துவத்தை, அதன் மாறாத இயல்பை,
கடவுளின் திட்டத்திலுள்ள அதன் அழகை
நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றம்
அனைவரிலும் தட்டியெழுப்ப உதவி செய்யும்.
இயேசு, மரியா, யோசேப்பே,
எங்களின் இவ்வேண்டுதல்களைக் கேட்டு அவற்றை நிறைவேற்றும். ஆமென்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

டிச.30,2013. 'இயேசு பாலனின் முகத்தில் நாம் தந்தையாம் இறைவனின் முகத்தைக் கண்டு தியானிக்கிறோம். வாருங்கள் அவரை ஆராதிப்போம்' என தன் இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன், இத்தாலியம், ஆங்கிலம், அரபு, இஸ்பானியம், போலந்து, செர்மானியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் இக்கிறிஸ்துமஸ் காலத்தில் டுவிட்டர் வழி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. அமெரிக்க மக்கள் கருத்துக் கணிப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக உயர்ந்த இடம்

டிச.30,2013. அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்கர்களில் 88 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைவராகச் செயல்படும் முறையைப் பாராட்டியுள்ளனர் என்று CNN ஊடகத்தின் கருத்துக் கணிப்பு ஒன்று அண்மையில் தெரிவித்துள்ளது.
இணையத்தளம், முகநூல் என்ற இரு சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பேசப்படும் ஒரு தலைவராக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, Times வார இதழ் 2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளது, தகுதியானத் தேர்வு என்று CNN தன் கணிப்பில் கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளர் இளம் பருவத்தினர் வாழ்ந்த சிறைக்குச் சென்று அவர்கள் காலடிகளைக் கழுவியதையும், தன் பிறந்தநாளன்று வீடற்றோருடன் காலை உணவைப் பகிர்ந்துகொண்டதையும், அருவருக்கத்தக்க முகத் தோற்றம் கொண்ட ஒருவரை அணைத்ததையும் மக்கள் பெருமளவில் பாராட்டியுள்ளனர் என்று இக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 16ம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 1035 பேர் கலந்துகொண்டனர் என்று CNN அறிவித்துள்ளது.

ஆதாரம் : CNN

5. இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளிட பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு

டிச.30,2013. பிலிப்பீன்ஸ் மக்கள் தங்கள் பழைய தீய வழிகளைக் கைவிட்டு 2014ம் ஆண்டை விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர்பேரவைத் தலைவர்.
பிலிப்பீன்ஸ் சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் இலஞ்ச ஊழல் மற்றும் வன்முறைகளைப் புறந்தள்ளி, புத்தாண்டில் புதிய வாழ்வை மேற்கொள்ள விசுவாசிகள் முன்வரவேண்டும் என பிலிப்பீன்ஸ் ஆயர்கள் சார்பில் அழைப்புவிடுத்துள்ள ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Socrates Villegas, கடத்தல், வன்முறை, பயங்கரவாதம், இலஞ்ச ஊழல் போன்றவை நிறுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.
'மீண்டும் புதிதாகத் துவக்குவோம்' என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த புத்தாண்டு மேய்ப்புப்பணி சுற்றறிக்கை, சிரியா நாட்டின் அமைதிக்கான செபத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான போரை அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்

டிச.30,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியசிற்கான அனைத்துலக உதவிப்பணிகளின் ஓர் அங்கமாக 1,600 பிரான்ஸ் இராணுவ வீரர்கள் வந்துள்ளபோதிலும், வன்முறைகள் நிறுத்தப்பாடாத நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உதவிக்கு  அந்நாட்டுப் பேராயரும் இஸ்லாமிய தலைமைக்குருவும் இணைந்து அழைப்புவிடுத்துள்ளனர்.
ஐ.நா. அமைதி காப்புத் துருப்புகளின் உடனடித் தலையீடு தேவைப்படுகின்றது என அழைப்புவிடுத்த மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga, மற்றும் இஸ்லாமிய மத்த்தலைமைக் குரு Omar Kobine Layama, 'மத்திய ஆப்ரிக்கக் குடியரசு போரை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கு மதமும் காரணங்கள் எனச் சொல்லப்படும் நிலையில், அந்நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டியது அனைத்துலகச் சமுதாயத்தின் கடமை என மேலும் உரைத்துள்ளனர்.
கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தி நிறுவனங்கள் கூறும்வேளை, Bangui நகரில் மட்டும் ஏறத்தாழ 60 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui நகரில் இம்மாதத் துவக்கத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

ஆதாரம் : MISNA

7. எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

டிச.30,2013. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் எகிப்தில் அண்மைக் காலங்களில் பெருகிவருவதால், அரசியலைப்பு மாற்றங்கள் தொடர்புடைய மக்கள் கருத்து வாக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற கவலையை வெளியிட்டுள்ளனர் எகிப்து கிறிஸ்தவத் தலைவர்கள்.
அண்மைக் காலங்களில் எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருட்திரு Rafic Greiche, கிறிஸ்தவர்களின் மனங்களில் அச்சத்தை விதைப்பதன் மூலம் அரசியலமைப்பு திருத்தம் குறித்த கருத்து வாக்கெடுப்பில் அவர்களைப் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருக்க வைப்பதே இஸ்லாமிய தீவிரவாதிகளின் நோக்கம் என்றார்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ வழிபாட்டுமுறையினரின் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள் சனவரி மாதம் 7ம் தேதி இடம்பெற உள்ள நிலையில், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் இருக்கின்றபோதிலும், அச்சமின்றி கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறினார் அருட்திரு Greiche.
இஸ்லாமியக் குழு ஒன்றை தீவிரவாத அமைப்பு என அறிவித்து எகிப்து அரசு தடைசெய்துள்ளதை ஒட்டியும் அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 
எகிப்தில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற சனவரி மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் இடம்பெற உள்ளது

ஆதாரம் : AsiaNews 
 

ROBERT JOHN KENNEDY: India says welcome back to jingoism

ROBERT JOHN KENNEDY: India says welcome back to jingoism: India says welcome back to jingoism Reaction to diplomat's arrest in US is out of proportion. ...

India says welcome back to jingoism

India says welcome back to jingoism

Reaction to diplomat's arrest in US is out of proportion.


 

New Delhi:  There is an absurd drama being played out between India and the United States over an Indian domestic maid’s complaint against the Deputy Consular General in New York, Dr Devyani Khobragade.

More specifically it’s a row over her arrest ordered by Preet Bahara, US Attorney for the Southern District of New York and a fellow Indian.

It is quite normal for Indian diplomats, used to having servants back home, to take domestic assistants with them while on foreign postings. This is so they are not dependent on local help, which is likely to be more expensive.

It’s ironic that Indians in the US and back home had celebrated Bahara’s appointment as a measure of how high the Indian community has risen in their new country.

Trouble flared when Dr Khobragade was arrested on December 12 in New York, soon after dropping her daughter at school. She was accused of underpaying her Indian domestic help and giving false information for visa applications, charges that invite a prison term.

The arrest shocked Dr Khobragade, her family and the Indian government who presumed she had diplomatic immunity and would not be charged.

It turned out her diplomatic immunity as a consular officer is not in the same category as those enjoyed by ambassadors and other senior diplomats.

Her attorney alleges she was taken to a police station, body and cavity searched, and then put in a cell with criminals including sex workers and drug addicts. People back in India thought this was adding insult to injury.

US authorities are firm that the manner of her arrest, and her treatment in detention, are not the main issues. They insist the arrest procedures were according to American norms and those accused of crimes under the law must be prosecuted irrespective of their rank.

On top of all this, it also turns out Dr Khobragade is accused of giving false information while buying an apartment in a controversial Mumbai residential complex.

Dr Khobragade, daughter of a senior civil servant, and of Dalit origin, is patently well connected. That may have something to do with the overreaction by the government of India. This reaction is not normal when Indians are arrested in Pakistan or Sri Lanka, the Middle East or Africa. India’s jingoist TV news channels have jumped on the bandwagon, giving it blanket coverage.

The government has been possibly forced into a position of demanding not just a formal apology from the United States – and not just expressions of regret – but that the US drop all charges against the diplomat.

The government in fact posted Dr Khobragade to the United Nations presuming this would give her retroactive immunity from future arrest and persecution, but this has met with resistance from the Department of State which has to keep its own norms, according to its spokesperson.

It would seem the Indian government does not believe in rule of law.

India, with its trade, financial and defense ties with the US, and with a very large Indian diaspora enjoying what the land of opportunity has to offer cannot afford to annoy Washington beyond a point.

This has been made quite clear by pronouncements from senior ministers who have highlighted the “strategic partnership between the world’s two biggest democracies,” and commerce minister Anand Sharma’s declaration that nothing will be allowed to strain these ties.

But India’s political parties, specially the main opposition Bharatiya Janata Party, have gone overboard to a ridiculous extent.

The parties have held protests in Delhi, Mumbai and other cities, where American flags have been burned.

Commentators have suggested that same sex partners of American diplomats be arrested under India’s draconian anti-gay laws. Protesters have demanded that India arrest and strip search American diplomats.

Whipped by an angry media, the Foreign Ministry seems bent on doing just that.

Special privileges including police courtesy cards have been withdrawn from US diplomats, as have their privileges to import food items, alcohol and other goods, a benefit enjoyed by most embassies.

In a bizarre move, Delhi police also removed traffic barriers meant to prevent terrorist attacks from around the US embassy.

Foreign minister, Salman Khursheed, has even said he will not return to parliament until the matter is resolved to India’s satisfaction.

Among the more controversial demands is that the US disregard its legal processes, withdraw charges against the diplomat and arrest and repatriate the maid at the centre of the controversy.

But some sane voices are at last being heard in government circles and civil society, presenting an alternate way of solving this row.

Voices within the government are saying that a high level dialogue be initiated, an apology given for the diplomat's strip and cavity searches, and that the law be allowed to take its course without further arrest.

Civil society is also waking up to its duties as a voice of reason. And those who know the art are mediating between governments to give the unsavory incident a quiet burial.

Commercial and security interests are all too important, for both India and the US, to jeopardize them. And of course it would be wise that the Indian government warn its diplomats not to violate laws in countries where they have been posted, and if possible, to learn to live with the servants they brought from home in India.

John Dayal is the general secretary of the All India Christian Council and a member of the Indian government’s National Integration Council.

Source: ucanews.com

ROBERT JOHN KENNEDY: Scientific studies show that wealth reduces compas...

ROBERT JOHN KENNEDY: Scientific studies show that wealth reduces compas...: Scientific studies show that wealth reduces compassion Researchers say empathy for others declines as prosperity increases. ...

Scientific studies show that wealth reduces compassion

Scientific studies show that wealth reduces compassion

Researchers say empathy for others declines as prosperity increases.

 

United States:  Who is more likely to lie, cheat, and steal—the poor person or the rich one? It’s temping to think that the wealthier you are, the more likely you are to act fairly. After all, if you already have enough for yourself, it’s easier to think about what others may need. But research suggests the opposite is true: as people climb the social ladder, their compassionate feelings towards other people decline.

Berkeley psychologists Paul Piff and Dacher Keltner ran several studies looking at whether social class (as measured by wealth, occupational prestige, and education) influences how much we care about the feelings of others. In one study, Piff and his colleagues discreetly observed the behavior of drivers at a busy four-way intersection. They found that luxury car drivers were more likely to cut off other motorists instead of waiting for their turn at the intersection. This was true for both men and women upper-class drivers, regardless of the time of day or the amount of traffic at the intersection. In a different study they found that luxury car drivers were also more likely to speed past a pedestrian trying to use a crosswalk, even after making eye contact with the pedestrian.

In order to figure out whether selfishness leads to wealth (rather than vice versa), Piff and his colleagues ran a study where they manipulated people’s class feelings. The researchers asked participants to spend a few minutes comparing themselves either to people better off or worse off than themselves financially. Afterwards, participants were shown a jar of candy and told that they could take home as much as they wanted. They were also told that the leftover candy would be given to children in a nearby laboratory. Those participants who had spent time thinking about how much better off they were compared to others ended up taking significantly more candy for themselves--leaving less behind for the children.

A related set of studies published by Keltner and his colleagues last year looked at how social class influences feelings of compassion towards people who are suffering. In one study, they found that less affluent individuals are more likely to report feeling compassion towards others on a regular basis. For example, they are more likely to agree with statements such as, “I often notice people who need help,” and “It’s important to take care of people who are vulnerable.” This was true even after controlling for other factors that we know affect compassionate feelings, such as gender, ethnicity, and spiritual beliefs.

In a second study, participants were asked to watch two videos while having their heart rate monitored. One video showed somebody explaining how to build a patio. The other showed children who were suffering from cancer. After watching the videos, participants indicated how much compassion they felt while watching either video. Social class was measured by asking participants questions about their family’s level of income and education.

The results of the study showed that participants on the lower end of the spectrum, with less income and education, were more likely to report feeling compassion while watching the video of the cancer patients. In addition, their heart rates slowed down while watching the cancer video—a response that is associated with paying greater attention to the feelings and motivations of others.

Source: Scientific American

ROBERT JOHN KENNEDY: Pope delivers blunt Christmas message to Curia

ROBERT JOHN KENNEDY: Pope delivers blunt Christmas message to Curia: Pope delivers blunt Christmas message to Curia Avoid mediocrity, gossip and bureaucracy, he tells administrators. ...

Pope delivers blunt Christmas message to Curia

Pope delivers blunt Christmas message to Curia

Avoid mediocrity, gossip and bureaucracy, he tells administrators.

 

Vatican City:  Pope Francis warned Vatican administrators Saturday that their work can take a downward spiral into mediocrity, gossip and bureaucratic squabbling if they forget that theirs is a professional vocation of service to the church.

Francis made the comments in his Christmas address to the Vatican Curia, the bureaucracy that forms the central government of the 1.2-billion strong Catholic Church. The speech was eagerly anticipated given that Francis was elected in March on a mandate to overhaul the antiquated and oftentimes dysfunctional Vatican administration.

Already, heads have started to roll: Just last week, Francis reshuffled the advisory body of the powerful Congregation for Bishops, the office that vets all the world's bishop nominations. He removed the arch-conservative American Cardinal Raymond Burke, a key figure in the U.S. culture wars over abortion and gay marriage, and also nixed the head of Italy's bishops' conference and another hardline Italian, Cardinal Mauro Piacenza, earlier axed as head of the Vatican office responsible for priests.

Other changes are on the horizon: In the coming weeks Francis will name his first batch of cardinals and in February will preside over the third summit of his "Group of Eight" cardinal advisers, who are expected to put forward a first round of proposals for revamping the Holy See bureaucracy.

Francis has said he wants a Vatican Curia that is more responsive to the needs of local bishops, who have long complained of Rome's slow or unhelpful interventions in their work caring for souls. Francis has said he wants the church as a whole to be less consumed with moralizing than showing mercy to the needy, wherever they are.

Francis thanked the cardinals, bishops and priests gathered in the Clementine Hall for the Christmas address for their work, diligence and creativity. Deviating from his prepared text, he said "There are saints in the Curia!"

But he also reminded them that Vatican officials must display professionalism and competence as well as holiness in their lives.

"When professionalism is lacking, there is a slow drift downwards toward mediocrity. Dossiers become full of trite and lifeless information, and incapable of opening up lofty perspectives," he said. "Then too, when the attitude is no longer one of service to the particular churches and their bishops, the structure of the Curia turns into a ponderous, bureaucratic customs house, constantly inspecting and questioning, hindering the working of the Holy Spirit and the growth of God's people."

Source: Huffington Post Religion

ROBERT JOHN KENNEDY: A Christian who won't serve others "is a pagan"

ROBERT JOHN KENNEDY: A Christian who won't serve others "is a pagan": A Christian who won't serve others "is a pagan" Once again, Pope Francis stresses the need for humility. ...

A Christian who won't serve others "is a pagan"

A Christian who won't serve others "is a pagan"

Once again, Pope Francis stresses the need for humility.

 

Vatican City:  In his Wednesday general audience this morning, Pope Francis stressed the importance of humility and service in the Christian life.

“It is an ugly thing when one sees a Christian who does not want to lower himself, who does not want to serve, a Christian who parades around everywhere. It’s terrible, no? That person isn’t a Christian: he is a pagan! The Christian serves (and) lowers himself,” said the Pope on Dec. 18 in St. Peter’s Square.

With Christmas approaching, Pope Francis focused on the great ‘gift’ of God in sending his son, who came humbly as a baby in Bethlehem.

“In Christmas, God reveals himself not as one who stands above and who dominates the universe, but as He who lowers himself,” explained the Pontiff.

“God lowers himself, coming down to earth as little and poor, showing that in order to be similar to him we must not place ourselves above others, but rather lower ourselves, place ourselves in service, make ourselves small with the small, poor with the poor.”

The incarnation of God made man, encouraged Pope Francis, should be a model for every Christian.

“We must make it so that our brothers and sisters never feel alone. Our presence in solidarity to their side expresses not only with words but with the eloquence of gestures that God is close to all.”

Moreover, God did not expect or demand perfection. “The presence of God in the midst of humanity is not carried out in an ideal, idyllic world, but in this real world, marked by many good and bad things, marked by division, cruelty, poverty, abuse, and war,” noted the Pope.

Still, “he chose to live our history as it is, with all the weight of its limitations and dramas. In so doing, he demonstrated in an unparalleled way his merciful inclinations and overflowing love toward his human creatures.”

Source: Catholic News Agency

ROBERT JOHN KENNEDY: கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்

ROBERT JOHN KENNEDY: கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்: கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும் கரடி பொம்மை என்றாலே குழந்தைகளுக்குத் தனிப்பட்ட ஆர்வம்தான். கிறிஸ்மஸ் காலத்தில் இந்தப் பொம்மை பெரு...

கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்

கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்

கரடி பொம்மை என்றாலே குழந்தைகளுக்குத் தனிப்பட்ட ஆர்வம்தான். கிறிஸ்மஸ் காலத்தில் இந்தப் பொம்மை பெருமளவில் விற்பனையாகும். பெரியவர்கள்கூட ஆசையுடன் வாங்கி வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தும் கரடி பொம்மைக்கு, ‘டெடி பேர் (Teddy Bear) என்ற பெயர் அமைந்ததற்கு, சுவாரசியமான ஒரு பின்னணி உண்டு.
கரடி பொம்மை முதன் முதலில் அமெரிக்காவில்தான் அறிமுகமானது. அமெரிக்க அதிபராக இருந்த தியடோர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். 1902ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று மிசிசிபி பகுதியில் அவர் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது காயத்துடன் அப்பக்கம் உலவிய சின்னக் கரடிக்குட்டி ஒன்றைக் கண்டார். அதைக் கண்டதும், அவருடன் வந்தவர்கள் கரடியைச் சுடுவதற்கு வலியுறுத்தினர். ஆனால், தியடோர் ரூஸ்வெல்ட் அதைச் சுடாமல் விட்டுவிட்டார்.
இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. பத்திரிகையில் கரடிக்குட்டிப் படத்துடன் செய்திகள் வந்தன. தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கு டெடி என ஒரு செல்லப் பெயர் உண்டு. அந்த நேரத்தில் கரடியையும், தியடோர் ரூஸ்வெல்ட்டையும் சேர்த்து வரைந்த கார்ட்டூன் படத்துக்கு ரூஸ்வெல்ட்டும் கரடியும் என்ற பொருளில், ‘டெடி பேர் என்று  பெயர் சூட்டியிருந்தனர். பொம்மை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தப் பரபரப்பை பயன்படுத்திக் கொண்டன. அன்று முதல் டெடி பேர் என்பது கரடி பொம்மையின் பெயரானது. அது மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி டெடி பேர் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் தி இந்து

ROBERT JOHN KENNEDY: செய்திகள் - 28.10.13

ROBERT JOHN KENNEDY: செய்திகள் - 28.10.13: செய்திகள் - 28.10.13 ------------------------------ ------------------------------ ------------------------------ ------------ 1. ...

செய்திகள் - 28.10.13

செய்திகள் - 28.10.13
------------------------------------------------------------------------------------------------------

1. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயர் அருள்பணி பீட்டர் அபீர்

2. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டம்

3. திருத்தந்தையின் Twitter செய்தி : நம் அன்னைமரியா முழுமையும் அழகு, ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர்

4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவை, பல்சமயத் தலைவர்கள்

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழி

6. இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குக் கிறிஸ்மஸ்

7. மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டாம், முதுபெரும் தந்தை 3ம் கிரகரி வேண்டுகோள்

8. சீனாவில் ஒரு குழந்தைத் திட்டம் தளர்த்தப்படுகிறது

------------------------------------------------------------------------------------------------------
1. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயர் அருள்பணி பீட்டர் அபீர்

டிச.28,2013. இந்தியாவில் சுல்தான்பேட்டை என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி அதன் முதல் ஆயராக அருள்பணி பீட்டர் அபீர் அந்தோணிசாமி அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் சாத்திப்பட்டு என்ற ஊரில் 1951ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி பிறந்த புதிய ஆயர் பீட்டர் அபீர், பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்திற்கென 1979ம் ஆண்டு மே முதல் தேதியன்று குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
திருப்பதி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் வரலாற்றில் முதுகலைப்பட்டமும், உரோம் பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் முதுகலைப்பட்டமும், உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் விவிலியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளவர் புதிய ஆயர் அபீர்.
சென்னை பூவிருந்தவல்லி புனித பவுல் விவிலிய நிறுவனத்தின் இயக்குனர், தமிழக ஆயர் பேரவையின் உதவிச் செயலர், தென்கிழக்கு ஆசிய கத்தோலிக்க விவிலியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழக விவிலிய, மறைக்கல்வி மற்றும் திருவழிபாட்டு மைய இயக்குனர் என பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ள புதிய ஆயர் அபீர், 2004ம் ஆண்டில் இவர் தொடங்கிய எம்மாவுஸ் ஆன்மீக மையத்தின் இயக்குனராக 2010ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டம்

டிச.28,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இச்சனிக்கிழமையன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுல்தான்பேட்டை மறைமாவட்டம், கோயம்புத்தூர், கோழிக்கோடு ஆகிய இரு மறைமாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தென் மேற்கே அமைந்துள்ள சுல்தான்பேட்டை மறைமாவட்டம்,  கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை உள்ளடக்கி, கோயம்புத்தூர், கோழிக்கோடு ஆகிய இரு மறைமாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
4,466 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சுல்தான்பேட்டை மறைமாவட்டத்தில் 30,975 கத்தோலிக்கர் உள்ளனர். மேலும், 21 பங்குகளும், 14 மறைமாவட்ட அருள்பணியாளர்களும், 18 துறவற அருள்பணியாளர்களும், 9 அருள்சகோதரர்களும், 102 அருள்சகோதரிகளும், 21 பள்ளிகளும், 12 மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களும் இப்புதிய மறைமாவட்டத்தில் உள்ளன.   
பாலக்காடு நகரிலுள்ள புனித செபஸ்தியார் ஆலயம், சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் பேராலயமாக இருக்கும்.
சுல்தான்பேட்டை என்ற புதிய மறைமாவட்டத்துடன் தமிழ்நாட்டில் இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இன்னும் 2 சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களும், ஒரு சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டமும் தமிழ்நாட்டில் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் Twitter செய்தி : நம் அன்னைமரியா முழுமையும் அழகு, ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர்

டிச.28,2013. நம் அன்னைமரியா முழுமையும் அழகு; ஏனெனில் அவர் அருள் நிறைந்தவர் என்று, இச்சனிக்கிழமையன்று தனது Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் புதிய ஆண்டில் அவர் நிகழ்த்தும் காலைத் திருப்பலிகளில் உரோம் மறைமாவட்டத்தைச் சார்ந்த பங்கு மக்கள் கலந்துகொள்வார்கள் என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
உரோம் மறைமவாட்ட ஆயராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைமவாட்டத்திலுள்ள அனைத்துப் பங்குகளுக்கும் செல்ல முடியாது என்பதால், அம்மக்கள் தங்கள் ஆயரோடு தொடர்பு கொள்வதற்கு உதவியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அருள்பணி லொம்பார்தி கூறினார்.
வருகிற சனவரி 7ம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் காலைத் திருப்பலியில் ஏறக்குறைய 25 விசுவாசிகள் வீதம் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அருள்பணி லொம்பார்தி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவை, பல்சமயத் தலைவர்கள்

டிச.28,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் இனப் பாகுபாட்டுச் சண்டை ஏற்படும்  நிலை உருவாகியிருப்பதால் அந்நாட்டுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர் என்று அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga அவர்களும், அந்நாட்டின் இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் Oumar Kobine Layama அவர்களும் இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.
இந்நாட்டின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Nzapalainga, மத்திய ஆப்ரிக்கக் குடியரசை கிழித்தெறியும் வன்முறைகளும், கொலைகளும், காட்டுமிராண்டித்தனமான செயல்களும் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.
அந்நாட்டின் அரசுத்தலைவர் Francois Bozizé, கடந்த மார்ச் மாதத்தில் Seleka எனப்படும் புரட்சிக்குழுவால் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதற்குப் பின்னர், அந்நாட்டில் ஆயுதம் ஏந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையே, முன்னாள் ப்ரெஞ்ச் காலனி நாடாகிய மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உதவியாக, பிரான்ஸ் தனது படைகளை அனுப்பியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழி

டிச.28,2013. புதிய ஆண்டைக் காண்பதற்காக உலகில் தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், சுதந்திரம், சனநாயகம், நீதி, அமைதி, நம்பிக்கை, சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளால் அமையப்பெற்ற புதிய சகாப்தம் உருவாவதற்கு, மியான்மார் தயாரித்து வருகிறது என்று அந்நாட்டு பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று கத்தோலிக்கர் கடைப்பிடிக்கும் உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி, மியான்மார் கத்தோலிக்கருக்கு நம்பிக்கையையும் ஒன்றிப்பையும் ஊக்குவிக்கின்றது என்று கூறியுள்ளார் யாங்கூன் பேராயர் Charles Bo.
கடந்த ஈராண்டளவாக மியான்மாரில் இடம்பெற்றுவரும் சனநாயகச் சுதந்திரத்துக்கு ஆதரவான நடவடிக்கைகள், இன்னும், அந்நாட்டில் இடம்பெற்றுவரும் பெரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் மூலம் அந்நாடு உலகுக்குத் தனது கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் Bo.
மியான்மார் மக்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகவும், மலேசியாவிலும் தாய்லாந்திலும் வாழும் இலட்சக்கணக்கான மியான்மார் குடியேற்றதாரரின் நிலை கவலைதருவதாக உள்ளது எனவும் கூறிய பேராயர் Bo,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews                

6. இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குக் கிறிஸ்மஸ்

டிச.28,2013. கொண்டாட்டம் மற்றும் பகிர்வின் காலமாக இருக்கும் கிறிஸ்மஸ் காலத்தில், பிரிவினைகளையும் தடுப்புச்சுவர்களையும் கடந்து எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்வதென்று சிறாருக்கும் வயதுவந்தோருக்கும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் சமூக மற்றும் சமய நிறுவன இயக்குனர் அருள்பணி அசோக் ஸ்டீபன் கூறினார்.
நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்மஸ் விழாவைச் சிறப்பித்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் விளக்கிய அருள்பணி ஸ்டீபன், இவ்விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தவர்களில் பலர், சிறார் எனவும், இச்சிறாரில் ஏறக்குறைய எல்லாருமே இந்துக்கள் எனவும் கூறினார்.
இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சிறாரில் பலருக்குத் தந்தையில்லை மற்றும் அவர்களின் தாய்மார் தங்களின் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக எந்த வேலையையும் செய்யத் தயாராய் இருப்பவர்கள் என்றும் கூறிய அருள்பணி ஸ்டீபன்,  இனம், சாதி, மதம் என்ற பாகுபாடு பாராமல் அனைத்துக் குடிமக்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் பாதிப்பு இச்சிறாரில் இன்றும் தெரிவதாக அக்குரு மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews

7. மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டாம், முதுபெரும் தந்தை 3ம் கிரகரி வேண்டுகோள்

டிச.28,2013. ஆலயங்கள் அழிக்கப்பட்டு, பங்குத்தளங்கள் கைவிடப்பட்டு, சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட துன்பநிலையை எதிர்கொள்ளும் மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் தங்களின் பூர்வீக இடங்களிலே தொடர்ந்து தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அந்தியோக்கியாவின் கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் கிரகரி.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கென உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை 3ம் கிரகரி அவர்கள், தம் மக்கள் தாங்கள் வாழும் கிராமங்கள் அல்லது நகரங்களில் தொடர்ந்து வாழுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாம் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டாலும், இக்கிறிஸ்தவர்களின் இருப்பை முஸ்லிம் பிரதிநிதிகள் மிகவும் விரும்புகின்றனர் என்றும் முதுபெரும் தந்தையின் அறிக்கை கூறுகிறது.   
முஸ்லிம் அரபு உலகத்துக்கு கிறிஸ்தவர்கள் தேவைப்படுகின்றனர் என்று எழுதியுள்ள முதுபெரும் தந்தை 3ம் கிரகரி, மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் இன்றி அரபு உலகம் வாழ முடியாது என, தன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews

8. சீனாவில் ஒரு குழந்தைத் திட்டம் தளர்த்தப்படுகிறது

டிச.28,2013. சீனாவில்  அமலில் இருந்த ஒரு குழந்தைக் கொள்கை என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று இச்சனிக்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வெளியிட்டுள்ள Xinhua என்ற சீனாவின் அரசு செய்தி நிறுவனம், ஒரு குழந்தை உள்ள தம்பதியினர் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் தேசிய மக்கள் கட்சியின் நிலைக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள மக்கள்தொகை விகிதத்தைக் கருத்தில்கொண்டு குடும்பக் கட்டுப்பாடு விதிகளைத் தளர்த்த வேண்டும் அல்லது ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் மக்கள்தொகை வெகு வேகமாகப் பரவி வந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1970களின் இறுதியில் ஒரு குழந்தைக் கொள்கை என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவந்தது அந்நாட்டு அரசு.  
2050ம் ஆண்டுக்குள் சீனாவின் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்டவராய் இருப்பார்கள்.

ஆதாரம் : BBC