Wednesday 26 June 2013

ROBERT JOHN KENNEDY: Pope approves new change in Mass

ROBERT JOHN KENNEDY: Pope approves new change in Mass: Pope approves new change in Mass St Joseph is now to be included in prayers.   ...

Pope approves new change in Mass

Pope approves new change in Mass

St Joseph is now to be included in prayers.

 

Vatican City:  Pope Francis approved a change in the Catholic Mass to include prayers referencing St. Joseph, the Vatican announced Wednesday.

The additions, which in English amount to five words inserted after the Eucharistic prayer, were issued by the Vatican’s Congregation for Divine Worship and the Discipline of the Sacraments. The new words, "with blessed Joseph, her spouse," follow a mention of Mary and are included in three different versions of the prayer.

The change, in the works under former Pope Benedict XVI before his retirement, reflect the church's growing interest in "fatherly care," said the Rev. Dan Merz, associate director of the Secretariat of Divine Worship for the United States Conference of Catholic Bishops.

"It's emphasizing that St. Joseph was someone who protected the Blessed Virgin and who cared for Jesus. We call him the foster father of Jesus, but we have to think of that word in the sense that he fostered the humanity of Jesus," said Merz. "He nurtured and helped Christ grow into an adult."

Merz said priests can immediately start using the new prayer, which is said near the end of Mass before the Lord's Prayer and communion. In addition to English and Latin, the Vatican released text for the new prayers in Spanish, Italian, Portuguese, French, German and Polish.

Source: Huffington Post Religion

Laity Sunday to encourage faith formation

Laity Sunday to encourage faith formation

Cardinal Oswald Gracias extolled and acknowledged the apostolic mission of the laity in his circular letter dated June 10.

 

Mumbai:  Bombay archdiocese organized a seminar marking the laity Sunday to help Catholics commit to living a spirit of faith and renewal as part of their role in evangelization.

The event was to help lay people “intensify their apostolic activity” so that they may more fully exercise their mission in the Church and in the world, Fr. Hilary Fernandes, who organized the seminar last Sunday said.

Cardinal Oswald Gracias extolled and acknowledged the apostolic mission of the laity in his circular letter dated June 10.

He referenced Pope Benedict XVI’s Apostolic Letter for the Year of Faith, Porta Fidei, reiterating its call for believers not to grow “lazy in faith.”

Cardinal Gracias also called for Laity Sunday to be celebrated according to the guidelines issued by the Office for Lay Collaboration in Ministry, with prayer and participation in a diocesan rally.

Fr. Fernandes emphasized the Second Vatican Council’s Decree on the Apostolate of the Laity, which recognized lay people’s “indispensable role in the mission of the Church,” as well as the “apostolic duty” to prepare them.

In order to fill their role within the Church, members of the laity must not only be passively devoted, but active in shouldering their responsibility to evangelize, he said.

This requires an effort on behalf of all to “dialogue with culture, time and space,” he said, describing the calling of the laity an opportunity for “transformation and renewal” for all people, especially for young people to “discern” how their lifestyle and mindset can contribute to spreading the message of Christ.

Source: Catholic news agency

ROBERT JOHN KENNEDY: Tamil refugees in India deserve a return to dignit...

ROBERT JOHN KENNEDY: Tamil refugees in India deserve a return to dignit...: Tamil refugees in India deserve a return to dignity More must be done for these people left with nothing.   ...

Tamil refugees in India deserve a return to dignity

Tamil refugees in India deserve a return to dignity

More must be done for these people left with nothing.

 
Tamil refugees in Tamil Nadu state
By Louie Albert SJ
Chennai:  Three decades of civil war in Sri Lanka not only displaced a sizeable number of local Tamils, it also drove thousands to seek refuge in Tamil Nadu state, in southern India, where many still live in camps set up by the state government.

More than 67,000 Sri Lankan Tamil refugees live in 122 refugee camps in the state. At least 50,500 arrived between 1990 and 2000, while another 23,000 fled to India after a ceasefire agreement broke down between Colombo and Tamil rebels in 2006.

Though the conflict ended four years ago with the defeat of the Liberation Tigers of Tamil Elam, who sought a separate homeland for Tamils within Sri Lanka, the promise of resettlement and rehabilitation has not been carried out satisfactorily.

Different factions of the Sri Lankan army have appropriated the land, which belonged to ordinary people including the refugees in India. These refugees have now lost everything in Sri Lanka; there is nothing for them to go back to.

Friends and relatives still living in Sri Lanka discourage their return as the presence of the army generates fear and insecurity, and minorities are treated as second-class citizens.

The refugees’ prolonged stay in the camps have created untold miseries and social ills such as early marriage, divorce, elopement, gender-based violence, harassment, suicidal tendencies, frustration, alcohol and substance abuse, family breakdowns and separations.

Such problems have an irreversible effect on them. Long cherished cultural traditions are gradually destroyed due to the camp environment. Women and children are usually at the receiving end.

The younger generation, who have no memories of Sri Lanka nor the desire to go there, take the risk of trying to flee to Australia and other places in search of citizenship.

Even though some students are well qualified in different fields, they cannot get government jobs due to their refugee status. Some qualified students who get through interviews in IT firms are later denied a job when bosses learn that they are refugees.

The refugee community has been in India for more than two decades. As such, they are entitled to receive citizenship but the government has not made any effort in this regard.

Extreme frustration with camp life prompts many refugees to risk their lives by trying to migrate illegally in another country.

Australia seems to be the destination of choice. Many try to get there despite advice given by the Indian government warning them not to fall victim to human traffickers.

Church people working on the ground have taken a firm stand on matters of social justice. They have openly and roundly criticized the authorities, officials and organizations that have shown little concern for human rights violations and discrimination.

But the Church still needs to do more in terms of ensuring human dignity and human rights. With its influence and moral authority it could do more than what it has done so far. The Church as a social body is expected to move beyond prayers and petitions.

I am not belittling or undermining the power of prayer. But along with prayer, we need to give assurance of support for refugees.

Educational institutions run by Catholic and Christian groups can help refugee students with regard to admission, fee concessions, job opportunities and skills development.

Internationally the Church can champion the cause of refugees, post war resettlement, returning the land to their rightful owners and the process of reconciliation.

Jesuit Father Louie Albert is the director of Jesuit Refugee Service in Tamil Nadu and works closely with Tamil refugees in the state.

Source: ucanews.com

நேர் சிந்தனையும் உடல் நலமும்

நேர் சிந்தனையும் உடல் நலமும்

போதுமென்ற மனது பொன் போன்றது என்பார்கள். மாறாக எதிலும் திருப்திப்படாத மனது நரகமாகத்தான் இருக்கும்.
இவற்றைத்தான் நேர் சிந்தனை (Positive thinking) எதிர்மறை சிந்தனை (Negative thinking) என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்பிக்கையுள்ள மனது, அவநம்பிக்கையுள்ள மனது என்று புரியும்படி சொல்லலாம். இது வாழ்க்கை பற்றிய பார்வை மட்டுமல்ல, உடல் நலத்தோடும் தொடர்புடையது.
நேர் சிந்தனையுள்ள மனது, உடல் நலத்தோடு தொடர்புடையது.
எதிர்மறைச் சிந்தனையுள்ள மனது, நலக்கேட்டுடன் தொடர்புடையது எனலாம்.
நேர் சிந்தனையானது, உடல் நலம் பல வழிகளில் முன்னேற்றமடைய உதவுகிறது.
வாழ்நாள் அதிகரிக்கும். மனச் சோர்வு நோய்க்கான (Depression) வாய்ப்பு குறைவாகும்.
உடல் உள்ள நலன்கள் மேம்படும். மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறப்பதற்கான சாத்தியம் குறைவாகும்.  
நேர் சிந்தனையானது, வாழ்வின் நெருக்கீடு நிறைந்த தருணங்களில் மனம் தளரவிடாது நம்பிக்கையுடன் செயலாற்ற உதவும். இதனால் நெருக்கீட்டின் தீய விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என நம்பப்படுகிறது.
நேர் சிந்தனை உள்ளவர்களுக்கு பொதுவாக வாழ்க்கை பற்றிய நலமான நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்கள் பொதுவாக நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
உங்கள் வாழ்வைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக்கொண்டால் அதைவிட பெரிய பேறு எதுவும் இருக்கமுடியாது.
மனதோடு மகிழ்ச்சியாகப் பேசுங்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள்.
நேர்சிந்தனை கொண்ட மனது உங்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், உடல் நலத்தையும் கொண்டு வரும். நம்புங்கள்.!

ஆதாரம் சித்தார்கோட்டை

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 26/06/2013

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 26/06/2013: 1. தந்தையாக இருக்கும் ஆவல் , அருள் பணியாளர்கள் உட்பட , அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் - திருத்தந்தை பிரான்சிஸ் 2. ' பாலியம் '...

Catholic News in Tamil - 26/06/2013


1. தந்தையாக இருக்கும் ஆவல், அருள் பணியாளர்கள் உட்பட, அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் - திருத்தந்தை பிரான்சிஸ்

2. 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து 34 பேராயர்கள் பெறுவார்கள்

3. இத்தாலியின் முன்னாள் பிரதமர் Emilio Colombo அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை அனுப்பிய அனுதாபத் தந்தி

4. நடைபெறவிருக்கும் இளையோர் நாள், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவிற்குத் திரும்புவது அழகான ஒரு நிகழ்வு - கர்தினால் Stanislaw Rylko

5. வத்திக்கானில் நடைபெற்ற 13வது ஆயர்கள் மாமன்றத்தைப் பற்றிய ஆவணப்படம்

6. இயேசு சபையினர் மனதுக்கு நெருக்கமானது, கல்விப்பணி - அருள் பணியாளர் Ashley Evans

7. சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அரசுகளின் கடமை அல்ல - ஐ.நா. பொதுச் செயலர்

8. சட்டப்பூர்வ போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரிப்பு - ஐ.நா. அலுவலகம்

------------------------------------------------------------------------------------------------------

1. தந்தையாக இருக்கும் ஆவல், அருள் பணியாளர்கள் உட்பட, அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன்,26,2013. தந்தையாக இருக்கும் ஆவல், அருள் பணியாளர்கள் உட்பட, அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் என்றும், இந்த ஆவல் இல்லாதவர்கள் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதன் காலை, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தையாகச் செயலாற்றும் ஆவல் அனைவருக்கும் பொதுவானதென்றும், வாழ்வு அளிப்பதும், அதைப் பேணுவதும் அனைவரிடமும் உள்ள வேட்கை என்றும் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
தந்தையாகும் பேறு தனக்கில்லை என்று ஏங்கிய ஆபிராமுக்கு, வானில் உள்ள விண்மீன்களைப் போல அவர் மக்களைப் பெறுவார் என்று தொடக்க நூலில் இறைவன் அளித்த வாக்குறுதியை தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
அருள் பணியாளர்களை மக்கள் 'தந்தையே' என்று அழைக்கும்போது, தந்தைக்குரிய பாதுகாப்பை அருள் பணியாளர்கள் வழங்குவர் என்ற எதிர்பார்ப்பில் இந்த மரியாதை வழங்கப்படுகிறது என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
தன் குருத்துவப் பிணியின் 60 ஆண்டு வைர விழாவைக் கொண்டாடிய பலேர்மோவின் முன்னாள் பேராயர் கர்தினால் Salvatore De Giorgi அவர்கள், திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து 34 பேராயர்கள் பெறுவார்கள்

ஜூன்,26,2013. ஜூன் 29ம் தேதி வருகிற சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியில் 34 பேராயர்கள் 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெறுவார்கள்.
சென்னை மயிலைப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள், விசாகப்பட்டினம் பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள், மற்றும் டில்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் உட்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகை தரும் பேராயர்களுக்கு, சனிக்கிழமை காலை நடைபெறும் திருப்பலியின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'பாலியம்' வழங்குகிறார்.
புனித பேதுருவின் வழித் தோன்றலென அழைக்கப்படும் உரோமைய ஆயருக்கும், உலகின் பல்வேறு உயர் மறைமாவட்டங்களின் பேராயர்களுக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தும் வண்ணம் இந்த நிகழ்வு அமைந்துள்ளதால், புனித பேதுரு, பவுல் ஆகிய இரு பெரும் திருத்தூதர்களின் பெருவிழாவன்று 'பாலியம்' வழங்கப்பட்டு வருகிறது.
தனிப்பட்ட முறையில் வளர்க்கப்படும் செம்மறிகளின் உரோமத்திலிருந்து உருவாக்கப்படும் இந்தக் கழுத்துப்பட்டை, பேராயர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆடுகளைக் கண்காணிக்கும் ஆயர்கள் என்பதை உணர்த்துவதாகவும், இந்தக் கழுத்துப் பட்டையில் பொருத்தப்படும் ஊசிகள், கிறிஸ்துவைச் சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இத்தாலியின் முன்னாள் பிரதமர் Emilio Colombo அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை அனுப்பிய அனுதாபத் தந்தி

ஜூன்,26,2013. ஜூன் 24, இத்திங்களன்று இறையடி சேர்ந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் Emilio Colombo அவர்களின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில் அனுதாபத் தந்தியொன்றை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.
இத்தாலிய குடியரசில் முக்கியமான பங்கு வகித்துள்ள திருவாளர் Colombo அவர்கள், பக்தி மிகுந்த கத்தோலிக்கராக வாழ்ந்தார் என்றும், சமுதாயத்தின் பொதுநலனில் அதிக அக்கறை கொண்டவர் என்றும் திருத்தந்தையின் தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களும், செபங்களும், மறைந்த திருவாளர் Colombo அவர்களின் குடும்பத்திற்கு உறுதி செய்யப்படுவதாக இத்தந்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
1948ம் ஆண்டு முதல் இத்தாலியப் பாராளு மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றிய திருவாளர் Colombo அவர்கள், 1970 முதல் 72 முடிய அந்நாட்டின் பிரதமாராகவும் பணியாற்றினார். இவர் தனது 93வது வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நடைபெறவிருக்கும் இளையோர் நாள், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவிற்குத் திரும்புவது அழகான ஒரு நிகழ்வு - கர்தினால் Stanislaw Rylko

ஜூன்,26,2013. வருகிற ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் இவ்வேளையில், வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் இந்த இளையோர் நாளைக் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் இந்த 28வது இளையோர் நாள், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவிற்குத் திரும்புவது அழகான ஒரு நிகழ்வு என்று, இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வரும் பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த இளையோர் நாள் நிகழ்வுகள், 26 ஆண்டுகளுக்கு முன்னர் Argentina நாட்டின் Buenos Aires நகரில் நடைபெற்றது என்றும், அந்நகரில் பேராயராக பணியாற்றிய கர்தினால் பெர்கோலியோ அவர்கள் தற்போது திருத்தந்தை என்பதையும் கர்தினால் Rylko தன் செய்தியில் குறிப்பிட்டார்.
ஒவ்வவொரு முறையும் இளையோர் நாள் நிகழும்போது, உலகெங்கும் உள்ள கத்தோலிக்கத் திருஅவையில் நம்பிக்கை வளர்க்கப்படுகிறது என்று கூறிய கர்தினால் Rylko அவர்கள், நம்பிக்கை ஆண்டில் நடைபெறும் இந்த இளையோர் நாள் இன்னும் அதிகமான நம்பிக்கையை நம்மில் வளர்க்கும் என்ற தன் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. வத்திக்கானில் நடைபெற்ற 13வது ஆயர்கள் மாமன்றத்தைப் பற்றிய ஆவணப்படம்

ஜூன்,26,2013. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் 28ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெற்ற 13வது ஆயர்கள் மாமன்றத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று இப்புதனன்று வத்திக்கானில் திரையிடப்பட்டது.
கனடாவில் இயங்கிவரும் 'Salt and Light' எனப்படும் தொலைக்காட்சி நிறுவனம், "புதுவழி நற்செய்திப் பரப்புதல் ஆயர்கள் மாமன்றம்: செல்லுங்கள், கற்பியுங்கள்" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம் 55 நிமிடங்கள் நீளமானது என்று இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் அருள்தந்தை தாமஸ் ரோசிகா கூறினார்.
இந்த ஆவணப்படம் முதல் முறையாக திரையிடப்பட்ட இந்த நிகழ்வை, திருப்பீடத்தின் சமூகத் தொடர்பு அவையும், புதுவழி நற்செய்தி பரப்புதல் திருப்பீட அவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் வருகிற செப்டம்பர் மாதம் கனடாவின் கத்தோலிக்கத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும், இந்த ஆவணப்படம், பிரெஞ்ச் மொழியிலும் வெளியிடப்படும் என்றும் இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் அருள்தந்தை தாமஸ் ரோசிகா கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இயேசு சபையினர் மனதுக்கு நெருக்கமானது, கல்விப்பணி - அருள் பணியாளர் Ashley Evans

ஜூன்,26,2013. இயேசு சபையினருக்கு, கல்விப்பணி எப்போதும் முக்கியமான, மனதுக்கு நெருக்கமான பணி என்றும், குறிப்பாக, கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் கல்விப்பணி புரிவது இன்னும் அர்த்தமுள்ளது என்றும் இயேசு சபை அருள் பணியாளர் Ashley Evans கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக கம்போடியாவில் பணியாற்றிவரும் அயர்லாந்தைச் சேர்ந்த அருள்தந்தை Evans, அந்நாட்டில் இயேசு சபையினர் துவக்கும் புதிய கல்விப் பணி குறித்து Fides செய்திக்கு அளித்த குறிப்பொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
கம்போடியாவின் பட்டம்பங் (Battambang) என்ற இடத்தில் முதல் நிலைப் பள்ளியொன்றையும், இடைநிலை பள்ளியொன்றையும் இயேசு சபையினர் துவக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக கம்போடியாவில் புலம்பெயர்ந்தொரிடையில் பணியாற்றி வந்துள்ள இயேசு சபையினர், கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் கல்வித் துறையில் மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர் என்றும், குறிப்பாக, தொழில் கல்வி வழியாக பல இளையோருக்கு எதிர்காலத்தை உருவாக்கி வந்துள்ளனர் என்றும், Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides

7. சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அரசுகளின் கடமை அல்ல - ஐ.நா. பொதுச் செயலர்

ஜூன்,26,2013. சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அரசுகளின் கடமை அல்ல, மாறாக, சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்குத் தகுந்த ஈடு செய்வதும், அவர்களுக்கு மறுவாழ்வு தரும் முயற்சிகளில் ஈடுபடுவதும் அரசின் கடமை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஜூன் 26ம் தேதி, இப்புதனன்று கடைபிடிக்கப்படும், சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் உலக நாளையொட்டி (International Day in Support of Victims of Torture) செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், மனித மாண்பை அழிக்கும் ஒரு கருவியாக சித்ரவதைகள் இக்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்ற தன் கவலையை வெளியிட்டார்.
சமுதாயத்தில் குறிப்பிட்ட குழுவினரை அச்சத்தில் வாழவைப்பதற்காக, ஒரு சில நாடுகளில் அரசுகளே சித்ரவதைகளைப் பயன்படுத்துகின்றன என்ற தகவலையும் பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு கடைபிடிக்கப்படும், சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் உலக நாளுக்கு, 'மறுவாழ்வு அமைத்தல்' என்பது ஐ.நா.அவையால் மையப்பொருளாக வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN

8. சட்டப்பூர்வ போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரிப்பு - ஐ.நா. அலுவலகம்

ஜூன்,26,2013. சட்டப்பூர்வமான போதை மருந்துகளின் பயன்பாடு, அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதாக போதை மருந்து மற்றும் குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் அலுவலகம் - The United Nations Office on Drugs and Crime (UNODC) - எச்சரித்துள்ளது.
Heroin மற்றும் Cocaine போன்ற பாரம்பரிய போதை மருந்துகளின் பயன்பாடு உலக அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, புதிய போதைப் பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வழி அறியாது அதிகாரிகள் திகைத்திருப்பதாகவும் ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.
இந்தப் புதிய வகை போதை மருந்துகள் பாரம்பரிய போதைப் பொருட்களை விட பல மடங்கு ஆபத்தானவை என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வகையான புதிய போதை மருந்துகள் பெரும்பாலும் ஆசியாவிலேயே உற்பத்தியாவதாகவும், இணையதளத்தின் மூலம் அவை பரப்பப்படுவதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
இது ஓர் உலகளாவியப் பிரச்சனை என்றாலும், இந்தப் போதைப்பொருள் விற்பனைக்கு, வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் பெரிய சந்தைகளாகத் திகழ்கின்றன என்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஜூன் 26, இப்புதனன்று, போதைப்பொருள் வர்த்தகத்தையும், பயன்பாட்டையும் எதிர்க்கும் உலக நாள் (International Day against Drug Abuse and Illicit Trafficking) கடைபிடிக்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 25/06/2013

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 25/06/2013: 1. திருத்தந்தை பிரான்சிஸ் : எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை 2. சிரியாவில் அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து கீழ...

Catholic News in Tamil - 25/06/2013


1. திருத்தந்தை பிரான்சிஸ் : எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை

2. சிரியாவில் அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து கீழைரீதி பேராயம் ஆழ்ந்த அனுதாபம்

3. சிரியாவில் இடம்பெறும் வெட்கத்துக்குரிய சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு புனிதபூமிக் காவலர் அழைப்பு

4. கர்தினால் தாக்லே : திருத்தந்தை பிரான்சிஸ் ஆசியக் கத்தோலிக்கர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்

5. யாங்கூன் பேராயர் : சமய மோதல்களை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை உரையாடலின் கருவி

6. இமாலயச் சுனாமியில் பாதிக்கப்பட்டோருக்கு இந்தியத் திருஅவை உதவி

7. உலகளாவிய வணிகத்துக்கு உதவும் கடல்தொழிலாளருக்கு ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு

8. ஹிரோஷிமா அணுகுண்டு வெளியிட்ட வெப்பம்போல் நான்கு மடங்கு வெப்பம் புவியில் அதிகரிக்கும்

9. புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்ட ஜெர்மன் இளையோர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை

ஜூன்,25,2013. கிறிஸ்தவராய் இருப்பது அன்பின் குரலுக்குப் பதிலளிப்பதாய், இறைவனின் பிள்ளைகளாக மாறுவதற்கு அழைப்பு விடுப்பதாய் இருக்கின்றது என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை மற்றும் துன்பங்கள் மத்தியிலும் நம்மை முன்னோக்கி நடக்குமாறு அவர் சொல்கிறார் என்ற உறுதி கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறினார்.
இப்பூமியை ஆபிராமுக்கும் அவரது உறவினர் லோத்துக்கும் இடையே பிரிப்பது குறித்த கலந்துரையாடலை விளக்கும் இந்நாளைய முதல் வாசகத்தை(தொ.நூ.13:2,5-18)மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இப்பகுதியை வாசித்தபோது மத்திய கிழக்குப் பகுதி பற்றிய நினைவு தனக்கு வந்ததாகவும், போரை அல்ல, அமைதியின் ஞானத்தை நம் அனைவருக்கும் அருளுமாறு செபிப்போம் எனவும் கூறிய திருத்தந்தை,  இறைவன் ஆபிராமுக்கு வாக்குறுதி கொடுத்து அவர் தனது இடத்தைவிட்டு வெளியே வருமாறு அழைப்பு விடுத்தார் என்றும் கூறினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம், ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறோம் என்றும், எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை என்றும், நாம் பெயர் சொல்லி, வாக்குறுதியோடு முன்னோக்கிச் செல்ல அழைக்கப்படுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நான் உங்களோடு எப்போதும் இருக்கிறேன் என்று இறைவன் நம்மிடம் கூறுகிறார் என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சிரியாவில் அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து கீழைரீதி பேராயம் ஆழ்ந்த அனுதாபம்

ஜூன்,25,2013. சிரியாவில் கத்தோலிக்க அருள்பணியாளர் François Murad மிகக் கொடூரமாய்க் கொல்லப்பட்டுள்ளது குறித்து சிரியாவின் கத்தோலிக்கத் திருஅவைக்கும், அந்நாட்டினர் அனைவருக்கும், புனிதபூமிக் காவலருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் கீழைரீதி பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri.
கீழைரீதி பேராய அதிகாரிகள் மற்றும் உடன் உழைப்பாளர்களுடன் சேர்ந்து தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள கர்தினால் Sandri, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதுபோல், சிரியாவில் ஆயுதச் சப்தங்களை ஒழித்து எதிர்காலத்தில் அமைதியைக் கொண்டுவரும் நீதியுடன்கூடிய ஒப்புரவின் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு அனைத்துலகச் சமுதாயத்துக்கும், போரிடும் தரப்புகளுக்கும் அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அருள்பணியாளர் Murad கொல்லப்பட்டுள்ளது எந்தவிதத்திலும் நியாயம் சொல்லப்பட முடியாதது என்றும், இவர் அடிக்கடி சொல்லியதுபோல, மீட்பின் நற்செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும், சிரியாவிலும் கிறிஸ்தவர்கள் அமைதியுடன் வாழ்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டுமென்றும் கர்தினால் Sandri கேட்டுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. சிரியாவில் இடம்பெறும் வெட்கத்துக்குரிய சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு புனிதபூமிக் காவலர் அழைப்பு

ஜூன்,25,2013. அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள புனிதபூமிக் காவலர் பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் Pierbattista Pizzaballa, சிரியாவில் இடம்பெறும் அர்த்தமற்ற மற்றும் வெட்கத்துக்குரிய சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு அனைவரும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அருள்பணியாளர் Muradன் இறப்பு குறித்துப் பேசிய சிரியா பேராயர் Jacques Behnan Hindo, மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களின் வரலாறு முழுவதும் பல வன்முறைகளுக்கு உள்ளான மறைசாட்சிகளின் இரத்தத்தால் குறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வட சிரியாவின் Gassaniehவிலுள்ள புனித பதுவை அந்தோணியார் பிரான்சிஸ்கன் இல்லத்தில் அடைக்கலம் தேடியிருந்த 49 வயது அருள்பணியாளர் Murad இறந்ததற்கான சூழல் குறித்த முழுவிபரங்கள் இன்னும் தெரியாத நிலையில், புரட்சியாளர்கள் அந்த பிரான்சிஸ்கன் இல்லத்தைத் தாக்கினர் என உள்ளூர் வட்டாரங்கள் கூறுகின்றன.
அருள்பணியாளர் Murad, குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பின்னர்  Gassanieh என்ற கிராமத்தில் புனித Simon Stylites துறவு இல்லத்தைக் கட்டி வந்தார். ஆயினும் அந்த இடம் தாக்குதலுக்கு உள்ளானதால் இவர் அக்கிராமத்தின் புனித பதுவை அந்தோணியார் பிரான்சிஸ்கன் இல்லத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.
இஞ்ஞாயிறன்று இந்த இல்லம் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டபோது அங்கு அருள்பணியாளர் Murad மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Fides

4. கர்தினால் தாக்லே : திருத்தந்தை பிரான்சிஸ் ஆசியக் கத்தோலிக்கர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்

ஜூன்,25,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசிய மற்றும்  பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்று மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே தெரிவித்தார்.
அண்மையில் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த  கர்தினால் தாக்லே, நாம் விசுவாசத்தில் வளர்வது, அன்னைமரியாமீது உண்மையான பக்தி கொண்டிருப்பதுடன் தொடர்பு கொண்டது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கத் திருஅவைமீது உயர்வான நம்பிக்கை வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அனைத்து விசுவாசிகளும் தனக்காகச் செபிக்குமாறும், அன்னைமரியாமீது கொண்டிருக்கும் விசுவாசத்தை அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டதாக கர்தினால் தாக்லே கூறினார்.
ஆசியாவில் பிலிப்பீன்சும், கிழக்குத் திமோரும் கத்தோலிக்க நாடுகளாகும்.

ஆதாரம் : AsiaNews

5. யாங்கூன் பேராயர் : சமய மோதல்களை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை உரையாடலின் கருவி

ஜூன்,25,2013. பதட்டநிலைகளும் பயமும் நிலவும் மியான்மாரில் மதங்களுக்கு இடையே இடம்பெறும் மோதல்களை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை உரையாடலை ஊக்குவித்து வருகின்றது என்று யாங்கூன் பேராயர் Charles Maung Bo கூறினார்.
மியான்மாரில் புத்தமதத் தீவிரவாதக் குழுக்கள் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் வகுப்புவாத வன்முறையையும் தூண்டிவரும்வேளை, சில புத்தமத பிக்குகள், வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் புகலிடம் அளித்து வருவதோடு அமைதி மற்றும் ஒப்புரவுக்கு அழைப்புவிடுக்கும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர் என்று கூறினார் பேராயர் Bo
மியான்மாரின் தற்போதைய நிலைமை குறித்து Fides செய்தி நிறுவனத்துக்கு இவ்வாறு தகவல் தெரிவித்துள்ள பேராயர் Bo, அந்நாட்டின் சமயத் தலைவர்களையும் பொது மக்கள் சமுதாயத்தையும் கவலைப்பட வைத்துள்ள வகுப்புவாத வன்முறைகளை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மியான்மாரில் 75 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். ஏறக்குறைய 4 விழுக்காட்டினர் முஸ்லீம்கள் மற்றும் 8 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இயற்கையை வழிபடுவோரும் அந்நாட்டில் உள்ளனர்.

ஆதாரம் : Fides                         

6. இமாலயச் சுனாமியில் பாதிக்கப்பட்டோருக்கு இந்தியத் திருஅவை உதவி

ஜூன்,25,2013. வட இந்தியாவின் உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அரசு மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியக் கத்தோலிக்கத் திருஅவையும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகிறது.
இமாலயாவின் சுனாமி எனச் சொல்லப்படும் இந்த இயற்கைப் பேரிடருக்கு இந்திய ஆயர் பேரவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் அமைப்பு உதவி வருவது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய அவ்வமைப்பின் இயக்குனர் அருள்பணி ஃப்ரெட்ரிக் டி சூசா, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்திய காரித்தாஸ் அமைப்பு தனது பணியாளர்களை அனுப்பி அவ்விடங்களில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையான உடனடி உதவிகளைச் செய்து வருகின்றது என்று கூறினார்.
இந்தியாவில் பருவமழை முன்கூட்டியே வந்து இமாலயா மலைக்குக் அடிவாரத்திலுள்ள பல மாநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அருள்பணி டி சூசா தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதங்கள் குறித்த தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
இதற்கிடையே, உத்தர்கண்டில் மீட்புப் பணிகளை மேலும் விரைவுபடுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரில் 80 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரக்கணக்கானோர் மீட்புக்காகக் காத்திருக்கின்றனர்.

ஆதாரம் : Fides

7. உலகளாவிய வணிகத்துக்கு உதவும் கடல்தொழிலாளருக்கு ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு

ஜூன்,25,2013. உலகில் கடலில் வேலைசெய்யும் 15 இலட்சம் தொழிலாளர்களின் உதவியின்றி அனைத்துலக வணிகம் இடம்பெறாது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூன் 25, இச்செவ்வாயன்று அனைத்துலக கடல்போக்குவரத்துப் பணியாளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், உலக அளவில் கடல் வழியாகப் போக்குவரத்துப் பணி செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.
மேலும், இத்தினத்தைச் சிறப்பிக்கும் IMO என்ற அனைத்துலக கடல்போக்குவரத்துப் நிறுவனம், அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் பல்வேறு பொருள்களைக் கடல்வழிப் போக்குவரத்து வழியாக விநியோகிக்கும் மக்களின் பணிகள் ஊடகங்கள் வழியாக மேலும் விளக்கப்பட வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.

ஆதாரம் : UN                             

8. ஹிரோஷிமா அணுகுண்டு வெளியிட்ட வெப்பம்போல் நான்கு மடங்கு வெப்பம் புவியில் அதிகரிக்கும்

ஜூன்,25,2013. ஒவ்வொரு வினாடியும், இப்புவிமீது அதிகப்படியான வெப்பம் திணிக்கப்பட்டு வருவதால் இப்பூமியின் வெப்பம் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வெளியிட்ட வெப்பத்தைப் போல நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தட்பவெப்ப தகவல் துறையைச் சேர்ந்த அறிவியலாளர் ஜான் குக், புவிமீது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அதிகப்படியான கரியமில வாயுவின் அடர்த்தி அதிகரித்து உள்ளதால், புவியில் அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது என்றும், இவ்வெப்பம், ஜப்பானின், ஷிரோஷிமாவில், அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய அணுகுண்டுத் தாக்குதலில் வெளியான வெப்பத்தைவிட நான்கு மடங்கு அதிகம் என்றும் கூறினார்.
இந்தப் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்களே முக்கிய காரணம் என்றும், கடந்த, 20 ஆண்டுகளாக, இது குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகளில், மனிதர்களின் தவறுகளால், புவி வெப்பமடைதல் வேகமாக நடைபெறுவதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும்  ஜான் குக் கூறினார்.

ஆதாரம் : ANI

9. புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்ட ஜெர்மன் இளையோர்

ஜூன்,25,2013.ஜெர்மனியில் கடந்த பத்தாண்டுகளில் புகைப்பிடிக்கும் பழக்கம் இளையோரிடையே பாதியாகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2001ம் ஆண்டில் 12 மற்றும் 17 வயதுடைய ஜெர்மனியர்களில் 27.5 விழுக்காட்டினர் புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர். இவ்வெண்ணிக்கை 2012ம் ஆண்டில் 12 விழுக்காடு குறைந்துவிட்டது என்று நலவாழ்வு கல்வி கூட்டமைப்பு மையத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
இப்புதனன்று அனைத்துலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இளையோரின் சராசரி புகைப்பிடிக்கும் வயது 13.6லிருந்து 14.4ஆக உயர்ந்துள்ளது. 25 வயதுக்குட்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கினர் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக உள்ளனர்.
விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டது இந்த மாற்றத்திற்கு ஒரு காரணம் என்று நலவாழ்வு கல்விக் கூட்டமைப்பு மையத்தின் தலைவர் எலிசபெத் பாட் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : தமிழ்வின்