Monday 27 February 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 26 பெப்ரவரி 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 26 பெப்ரவரி 2012: 1. திருத்தந்தை : குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்து சோர்வுற வேண்டாம் 2. திருப்பீட-வியட்னாம் பணி...

கத்தோலிக்க செய்திகள்: 26 பெப்ரவரி 2012


1. திருத்தந்தை : குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்து சோர்வுற வேண்டாம்

2. திருப்பீட-வியட்னாம் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும்

3. திருத்தந்தையின் Twitter பக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளில் 400 விழுக்காடு அதிகரிப்பு

4. தமாஸ்கஸ் ஆயர் : சிரியாவில் கலவரங்கள், கட்டுப்பாடின்றி நடந்து வருகின்றன

5. குவைத்தில் புதிய ஆலயங்கள் கட்டப்படுவதற்குத் தடை விதிக்க முயற்சி

6. கத்தோலிக்கப் புத்தகங்கள் விற்பனையில் இளையோர் மறைக்கல்வி ஏடு சாதனை

7. போலியோ பாதிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்

8. மியான்மார் உறுதியான தன்மையைக் கட்டி எழுப்ப முயற்சித்து வருகிறது, ஐ.நா. பிரதிநிதி

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்து சோர்வுற வேண்டாம்

பிப்.25,2012. குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்துச் சோர்வுற வேண்டாமெனவும், அவர்கள் தங்களது திருமுழுக்கு மற்றும் திருமண அழைப்பின் மூலம், புதிய மனித சமுதாயத்தை உருவாக்குவதில் கடவுளோடு ஒத்துழைக்க எப்பொழுதும் அழைப்புப் பெறுகிறார்கள் எனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
குழந்தைப்பேறின்மையால் துன்புறும் தம்பதியர் மீது திருஅவை மிகுந்த அக்கறை காட்டுகின்றது எனவும், இதனாலே இக்குறைபாட்டைக் களைவதற்கு மருத்துவ ஆய்வுகளைத் திருஅவை ஊக்கப்படுத்துகின்றது எனவும் திருத்தந்தை மேலும் கூறினார்.
திருப்பீட வாழ்வுக் கழகம் வத்திக்கானில் நடத்திய 18 வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 200 பேரை  இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
அறிவியல் ஆய்வானது எப்பொழுதும் மனிதரின் நன்மைக்காகச் செய்வதாக இருக்க வேண்டும் என்றும் உரைத்த அவர், குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டு விடயத்தில் நடத்தப்படும் ஆய்வுகள் அறிவியல் ரீதியாகச் சரியானதாக இருந்தாலும், அதோடு தொடர்புடையவர்களின் முழு மனிதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
திருமணத் தம்பதியரின் ஐக்கியம் உடல் சார்ந்தது  மட்டுமல்ல, ஆன்மீகம் சார்ந்ததும் ஆகும் என்று கூறிய திருத்தந்தை, குழந்தைப்பேறு இல்லாத தம்பதியரின் நியாயமான ஏக்கங்கள், அறிவியல்ரீதியாக நிறைவேற்றப்பட எடுக்கும் முயற்சியில் அவர்களின் மனித மாண்பும் முழுவதும்  மதிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இவ்வியாழனன்று தொடங்கிய இக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டு மருத்துவர் Thomas W. Hilgers, அந்நாட்டில் 95 இலட்சம் பெண்கள் கருவுறுதல் தொடர்புடைய பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர் என்று கூறினார்.
மேலும், வளர்ந்த நாடுகளில் 15 விழுக்காட்டுத் தம்பதியரும், வளரும் நாடுகளில் 30 விழுக்காட்டுத் தம்பதியரும் குழந்தைப் பேறின்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பீட வாழ்வுக் கழகத்தின் அருட்பணி Pegoraro தெரிவித்தார்.

2. திருப்பீட-வியட்னாம் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும்

பிப்.25,2012. திருப்பீடத்துக்கும் வியட்னாமுக்கும் இடையே அரசியல் உறவை உருவாக்குவதற்கு அடிப்படையான முயற்சிகளை எடுப்பதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்விரு நாடுகளும் இணைந்த பணிக்குழு, தனது மூன்றாவது கூட்டத்தை இம்மாத இறுதியில் ஹனோயில் நடத்தும் என வத்திக்கான் தகவல் மையம் அறிவித்தது.
2010ம் ஆண்டு ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் இவ்விரு தரப்பும் வத்திக்கானில் நடத்திய இரண்டாவது கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இம்மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் வியட்னாம் நாட்டின் ஹனோயில் இப்பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெறும் என அத்தகவல் மையம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.  
வியட்னாம் நாட்டுக்கான பாப்பிறைப் பிரதிநிதிகள் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, இவ்விரு நாடுகளின் உறவுகள் உறுதிப்படவும் மேம்படவும் இப்பணிக்குழுவின் கூட்டம் உதவும் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
வியட்னாமில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இடம் பெற்று வருகின்ற போதிலும், சமய சுதந்திரத்துக்கு உறுதி வழங்குவது குறித்த அரசியல் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தவிர்க்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.  

3. திருத்தந்தையின் Twitter பக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளில் 400 விழுக்காடு அதிகரிப்பு

பிப்.25,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் Twitter இணையதளப் பக்கத்தைப் பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை, 24 மணி நேரங்களுக்குள் 400 விழுக்காடு அதிகரித்திருப்பதாகத் திருப்பீட சமூகத் தொடர்பு அவை அறிவித்தது.
திருத்தந்தையின் Twitter பக்கத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இவ்வியாழனன்று 2,500 ஆக இருந்தது, ஆனால் இவ்வெள்ளியன்று இவ்வெண்ணிக்கை, 12,500க்கும் அதிகமாகி இருப்பதாக அவ்வவை கூறியது.
இது மிகவும் வியப்பாக இருக்கின்றது என்றுரைத்த திருப்பீட சமூகத் தொடர்பு அவையின் செயலர் பேரருட்திரு Paul Tighe, இவ்வெண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, இவர்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் எண்ணிக்கையும் கூடியிருப்பதாகக் கூறினார். 
இவ்வெண்ணிக்கை அதிகரிப்பு, தவக்காலத் தொடக்கத்தோடு சேர்ந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம், ஜெர்மானியம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் வெளிவரும் திருத்தந்தையின் செய்திகளை, via@Pope2YouVatican என்ற முகவரியில் பார்க்கலாம். இது போர்த்துக்கீசியத்தில் விரைவில் வெளிவர இருக்கின்றது.

4. தமாஸ்கஸ் ஆயர் : சிரியாவில் கலவரங்கள், கட்டுப்பாடின்றி நடந்து வருகின்றன

பிப்.25,2012. சிரியாவில் கலவரங்கள், கட்டுப்பாடின்றி நடந்து வருவதாகவும், ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்ற பயத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பிரியாவிடையைப் பரிமாறிக் கொள்கின்றனர் எனவும் அந்நாட்டு மூத்த ஆயர் ஒருவர் கூறினார்.
தமாஸ்கஸ் மாரனைட் ரீதிக் கத்தோலிக்கப் பேராயர் சமீர் நாசர், Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்துக்கு எழுதிய அறிக்கையில், மீண்டும் சந்திப்போம் என்பதில் நம்பிக்கையற்ற மக்கள், ஞாயிறு திருப்பலி முடிந்து ஒருவருக்கொருவர் பிரியாவிடை சொல்லிக் கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் 15ம்  தேதி சிரியாவின் தென் பகுதியில் தொடங்கிய ஒரு சிறிய எதிர்ப்பு ஊர்வலம், இவ்வளவு பெரிய கலவரமாகப் பரவியுள்ளது என்றும் பேராயர் நாசர் கவலை தெரிவித்தார்.
இக்கலவரத்தையொட்டி சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால், நாட்டின் பணவீக்கம் 60 விழுக்காடாக ஆகியுள்ளது, வேலைவாய்ப்பின்மை எகிறியுள்ளது. புலம் பெயர்வுகளும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும் ஆயிரக்கணக்காக உள்ளது எனவும் தமாஸ்கஸ் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, சிரிய மக்களின் நண்பர்கள், துனிசியாவில் இவ்வெள்ளியன்று நடத்திய அனைத்துலக கருத்தரங்கில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், சிரியாவின் தற்போதைய பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார்.

5. குவைத்தில் புதிய ஆலயங்கள் கட்டப்படுவதற்குத் தடை விதிக்க முயற்சி

பிப்.25,2012. குவைத் நாட்டில் புதிய ஆலயங்கள் கட்டுவதற்கும், இசுலாமுக்குத் தொடர்பில்லாத இடங்களில் வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் புதிய இசுலாமிய நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.
இதற்கிடையே, புதிய ஆலயங்களுக்கு எதிரான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Nabeel Al Fadhel, சமய சுதந்திரமும், மக்கள் தங்களது சமய நம்பிக்கைகளை வெளிப்படையாய் அறிவிக்கவும் கொண்டுள்ள உரிமைகளும், குவைத் அரசியல் அமைப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், இம்மசோதா குறித்துக் கருத்து தெரிவித்த, குவைத் தேசிய மனித உரிமைகள் கழகம், பொறுப்பற்றதனமான இந்நடவடிக்கை, குடிமக்களிடையே பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் என்று குறை கூறியது.
இன்னும், ஈரானின் தேசிய மொழியான பெர்சியத்தில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடத்தப்படுவதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.   

6. கத்தோலிக்கப் புத்தகங்கள் விற்பனையில் இளையோர் மறைக்கல்வி ஏடு சாதனை

பிப்.25,2012. உலக அளவில் கத்தோலிக்கப் புத்தகங்கள் விற்பனையில் இளையோர் மறைக்கல்வி ஏடு அதிக அளவில் விற்கப்படுவதாக இளையோர் மறைக்கல்வி ஏட்டின் இணைத் தயாரிப்பாளர் பெர்னார்டு மியுசெர் அறிவித்தார்.
இதுவரை 17 இலட்சம் இளையோர் மறைக்கல்வி ஏடுகள் விற்பனையாகியுள்ளன என்றும், ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பிரசுரமாகும் இவ்வேடு பெருமளவில் வெற்றியைத் தந்துள்ளது என்றும், இந்நூலின் ஜெர்மன் மொழி பெயர்ப்பு வெளியீட்டாளர் மியுசெர் கூறினார்.
திருத்தந்தையின் கடைசி புத்தகம் உட்பட இந்த இளையோர் மறைக்கல்வி ஏடு விற்பனையில், இஸ்பெயின்,. அமெரிக்கா மற்றும் ஜெர்மன் முதலிடம் வகிக்கின்றன எனவும் அவர் கூறினார்.
தற்போது 20 மொழிகளில் பிரசுரமாகும் இளையோர் மறைக்கல்வி ஏடு, அடுத்த ஆண்டில் சீனம், அராபியம் உட்பட 30 மொழிகளில் பிரசுரமாகும் என்றும் மியுசெர் அறிவித்தார். 

7. போலியோ பாதிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்!

பிப்.25,2012. 2011ம் ஆண்டு இந்தியாவில் போலியோ பாதிப்பு இல்லாத ஆண்டாக இருந்தவேளை, இந்தியாவை, போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இவ்வெள்ளியன்று நீக்கியது உலக நலவாழ்வு  நிறுவனம்.
டெல்லியில் இவ்வெள்ளியன்று தொடங்கிய 'போலியோ மாநாடு 2012'-ல், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், மத்திய நலவாழ்வு அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலை வெளியிட்டார்.
உலக நலவாழ்வு நிறுவனத்திடம் இருந்து இவ்வெள்ளி காலை கடிதம் ஒன்று வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "கடந்த ஒராண்டாக போலியோ பாதிப்பு இல்லாததால், போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.
இதற்கு முன்னர், போலியோ பாதிப்புள்ள 4 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போலியோ பாதிப்பு இல்லாத பட்சத்தில், 'இந்தியாவை போலியோ இல்லாத நாடு' என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவிக்கும் எனவும் குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு சனவரி 13ம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி பாதிக்கப்பட்டதுதான் கடைசியாகப் பதிவான போலியோ பாதிப்பு. அதற்குப் பிறகு இவ்வாண்டு சனவரி 13 வரை, நாட்டில் ஒரு குழந்தைகூட போலியோவால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

8. மியான்மார் நாடு உறுதியான தன்மையைக் கட்டி எழுப்ப முயற்சித்து வருகிறது, ஐ.நா. பிரதிநிதி.

பிப்.25,2012. மியான்மார் நாடு, மாற்றத்தின் பாதையில் துவக்க கட்டத்தில் மட்டுமே உள்ளது, அந்நாடு, நிலையான அமைதியையும் உறுதியான தன்மையையும் எட்டுவதற்கு அந்நாட்டின் நீண்ட காலச் சவால்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா.உயர் அதிகாரி கூறினார்.
மியான்மாரின் நீண்ட காலப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அந்நாடு எடுத்துள்ள முக்கியமான முயற்சிகளாக, இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கருதுவதாக ஐ.நா.பொதுச் செயலரின் மியான்மாருக்கானச் சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் கூறினார்.
கடந்த வாரத்தில் மியான்மார் சென்று திரும்பியுள்ள நம்பியார், சனநாயக வழிகளுக்கு அவ்வரசு எடுத்துள்ள முயற்சிகளில் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார்.


robert john kennedy: New Delhi: The Supreme Court has said that the c...

robert john kennedy: New Delhi: The Supreme Court has said that the c...: New Delhi: The Supreme Court has said that the citizen's right to sleep is a fundamental right. A bench of Justices B S Chauhan and ...

New Delhi: The Supreme Court has said that the citizen's right to sleep is a fundamental right.

New Delhi: 
The Supreme Court has said that the citizen's right to sleep is a fundamental right.

A bench of Justices B S Chauhan and Swatanter Kumar made the observation while hearing the case relating to the midnight crackdown on yoga guru Baba Ramdev and his supporters.

A citizen has a right to sound sleep because it is fundamental to life and falls within the purview of Article 21 of the Indian constitution, the Supreme Court said on Thursday.

Police cracked down on sleeping Ramdev supporters, who were assembled at Ramlila Maidan to protest corruption in the government in June last year.

"Sleep is essential for a human being to maintain the delicate balance of health necessary… . Sleep is, therefore, a fundamental and basic requirement…” the court said.

Terming it as a basic human right, the apex court ruled that police action on a sleeping crowd amounted to violation of their crucial right.

Though Justice Kumar wrote the lead judgment, Justice Chauhan elaborated on sleep as a fundamental right crucial to life and put it on the same plane as right to privacy and right to food.

"Right to privacy and the right to sleep have always been treated to be a fundamental right like a right to breathe, to eat, to drink etc," he said while slamming Delhi Police for using unwarranted force on the sleeping crowd, thereby breaching fundamental right to privacy.

Rejecting the police contention that the crowd was planning to disrupt peace, Justice Chauhan said, "To presume that a person was scheming to disrupt public peace while asleep would be unjust and would be entering into the dreams of that person."

Source: Times of India

கத்தோலிக்க செய்திகள்: 25 பெப்ரவரி 2012

5.     திருப்பீடப் பேச்சாளர் : சொமாலியாவை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் அனைவரும்
       பங்கு கொள்ள அழைப்பு

6.    தேவநிந்தனை சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கப் புதிய புத்தகம் உதவும் பாகிஸ்தான் உச்ச
       நீதிமன்ற வழக்கறிஞர்

7.     புதிய நற்செய்திப்பணித் திட்டத்தில் 12 ஐரோப்பிய மறைமாவட்டங்கள்

8.     போர் தொடர்புடைய கடும் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளில் முதன்முறையாக சிலர்
       தனிப்பட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர் 

9.     2010ம் ஆண்டில் 11 ஆயிரம் சிறார்ப் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

------------------------------------------------------------------------------------------------------

5. திருப்பீடப் பேச்சாளர் : சொமாலியாவை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் அனைவரும் பங்கு கொள்ள அழைப்பு

பிப்.24,2012. கடந்த பல ஆண்டுகளாக, போர், பஞ்சம் மற்றும் வறுமையினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியாவில், ஒப்புரவையும் அமைதியையும் கட்டி எழுப்புவதற்கான முயற்சியில், கிறிஸ்தவ அன்பின் அடிப்படையில், நாம் அனைவரும் பங்கு கொள்வோம் என்று திருப்பீடப் பேச்சாளர் அழைப்பு விடுத்தார்.
சொமாலியாவின் தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் இலண்டனில் நடைபெற்ற அனைத்துலகக் கூட்டம் குறித்து Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
1989ம் ஆண்டில் மொகதிஷ்சு ஆயர் கொலம்போ, 1995ம் ஆண்டில் தன்னார்வப் பணியாளரான மருத்துவர் கிராசியெல்லா ஃபூமாகாலி, 2003ம் ஆண்டில் தன்னார்வப் பணியாளரான மருத்துவர் அன்னலீனா தொனெல்லி, 2006ம் ஆண்டில் அருள்சகோதரி லியோனெல்லா ஸ்கோர்பாட்டி ஆகியோர் சொமாலியாவில் கொல்லப்பட்டது குறித்துப் பேசிய அவர், அன்பே அனைத்தையும் வெல்லும் என்று அன்னலீனா கூறியதையும் சுட்டிக் காட்டினார்.
இவ்வன்பின் அடிப்படையில் நாம் அந்நாட்டிற்கு உதவுவோம் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கேட்டுள்ளார்.
சொமாலியாவின் எதிர்காலத் தீர்வு குறித்து இடம் பெற்ற இந்த இலண்டன் கூட்டத்தில் 55 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சொமாலியக் கடல்கொள்ளையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியப்பெருங்கடலில், கண்காணிப்புக் கப்பலை, பிரிட்டனும், மற்ற நாடுகளும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. தேவநிந்தனை சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கப் புதிய புத்தகம் உதவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்

பிப்.24,2012. பல்சமய உரையாடலை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் பாகிஸ்தானில் வெளியாகியுள்ள புத்தகம், அந்நாட்டில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகள் குறைவதற்கு உதவும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் Abid Hassan Minto கூறினார்.
முஸ்லீம்கள் கேட்கிறார்கள், கிறிஸ்தவர்கள் பதில் சொல்கிறார்கள் என்ற தலைப்பில், ஜெர்மன் நாட்டு இயேசு சபை அருள்தந்தை Christian Troll எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசினார் Minto.
பாகிஸ்தானில் தேவநிந்தனை குறித்த குற்றச்சாட்டுக்களையொட்டி, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பதட்டநிலைகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Muslim Swalat, Masihi Jwabat என்ற இப்புத்தகமானது 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

7. புதிய நற்செய்திப்பணித் திட்டத்தில் 12 ஐரோப்பிய மறைமாவட்டங்கள்

பிப்.24,2012. ஒரு சிறப்பான புதிய நற்செய்திப்பணி திட்டத்தில் 12 ஐரோப்பிய மறைமாவட்டங்கள் இத்தவக்காலத்தில் ஈடுபட்டுள்ளன.
புதிய நற்செய்தி அறிவித்தல் என்ற தலைப்பில், வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக இத்திட்டம் அமைந்துள்ளது.
இத்திட்டம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, இங்கிலாந்தின் Liverpool பங்குத்தந்தை பேரருட்திரு Peter Fleetwood, திருஅவைக்கும், நற்செய்திக்கும், இயேசு என்ற மனிதருக்கும், மிகுந்த பிரமாணிக்கத்துடன் இருப்பது குறித்து இத்தவக்காலத்தில் அதிகம் வலியுறுத்தப்படுவதாகக் கூறினார்.
பார்செலோனா, புடாபெஸ்ட், டப்ளின், ஃபிராங்பெர்ட், லிஸ்பன், பாரிஸ், தூரின், வியன்னா, பிரசெல்ஸ், வார்சா, சாக்ரப் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் Mission Metropolis என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

8. போர் தொடர்புடைய கடும் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளில் முதன்முறையாக சிலர் தனிப்பட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர் 

பிப்.24,2012. போர் தொடர்புடைய கடும் பாலியல் வன்முறைக் குற்றங்களைச் செய்தவர்களில், சில இராணுவத்தினர், உப இராணுவத்தினர், இன்னும் பிற ஆயுதம் தாங்கிய குழுக்களைத் தனது சந்தேகப் பட்டியலில் முதன்முறையாகச் சேர்த்துள்ளது .நா. நிறுவனம்.
போர் தொடர்புடைய பாலியல் வன்முறை என்ற தலைப்பில், இவ்வியாழனன்று ஆண்டறிக்கை வெளியிட்ட .நா. நிறுவனம், போர் தொடர்புடைய பாலியல் வன்முறை, ஒரு நாட்டிலோ அல்லது ஒரு கண்டத்திலோ மட்டும் இடம் பெறுவதில்லை, மாறாக, இது உலக அளவில் இடம் பெறும் ஆபத்தான செயல் என்று குறை கூறியுள்ளது.
பெண்கள் வியாபாரம் செய்யும் சந்தைகளிலும், பள்ளிக்குச் செல்லும் சிறாரின் பாதையிலும், அரசியல் கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறைகளிலும், போர்கள் நுழைந்து விட்டன எனவும், பாலியல் வன்செயல் நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது எனவும் .நா. கூறியுள்ளது.
சாட், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, நேபாளம், இலங்கை, கிழக்குத் திமோர், லைபீரியா, சியெரா லியோன், போஸ்னியா-எர்செகொவினா போன்ற நாடுகளில், சண்டை முடிந்த பின்னரும் நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதியைக் கட்டி எழுப்புவதற்கும் பாலியல் வன்முறை எவ்வளவு தூரம் அச்சுறுத்தலாகவும் தடையாகவும் இருக்கின்றது என்பதையும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டுள்ளது.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் LRA புரட்சிக்குழு, தென் சூடானிலுள்ள ஆயுதம் தாங்கிய உப இராணுவக் குழுக்கள், ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் ஆயுதம் தாங்கிய குழுக்கள், காங்கோ சனநாயகக் குடியரசின் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகியவை அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
தேர்தல்கள், அரசியல் நெருக்கடி, உள்நாட்டுப் பதட்டநிலைகள் போன்ற சமயங்களில், எகிப்து, கினி, கென்யா, சிரியா போன்ற நாடுகளில் பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டதையும் இந்த .நா. அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
இவ்வறிக்கையை .நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Margot Wallström வெளியிட்டார்.

9. 2010ம் ஆண்டில் 11 ஆயிரம் சிறார்ப் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

பிப்.24,2012. உலகில் குறைந்தது 15 நாடுகளில், ஆயுதம் ஏந்திய கும்பல்கள் அல்லது இராணுவத்தினருக்கு ஆயிரக்கணக்கான சிறார் ஆபத்தான வேலை செய்வதற்குத் தினமும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
உளவாளிகள் அல்லது பாலியல் அடிமைகள் போன்ற ஆபத்தான வேலை செய்வதற்கு ஆயிரக்கணக்கான சிறார்க் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று கூறும் அச்செய்தி நிறுவனம், மியான்மார், ஆப்கானிஸ்தான், சாட், சொமாலியா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, கொலம்பியா உட்பட பல நாடுகளில் சுமார் 14 ஆயிரம் சிறார் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டு, அவர்கள் தப்பித்துச் செல்லாமல் இருப்பதற்காக நெருப்பால் சுடப்படுகின்றனர் என்றும் கூறியது.
மருந்துகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களால் இச்சிறார், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடுஞ்செயல்களைச் செய்கின்றனர் எனவும் பீதெஸ் அறிவித்தது.
2010ம் ஆண்டில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சமூகத்தில் இணைக்கப்பட்டனர் என்று .நா. அறிக்கையில் வெளியானதையும் இச்செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியது.