Monday 31 December 2012

robert john kennedy: More than 100 Keyboard Shortcuts:

robert john kennedy: More than 100 Keyboard Shortcuts:: More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. C...

More than 100 Keyboard Shortcuts:

More than 100 Keyboard Shortcuts:
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
...... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
25. NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)
26. LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)
27. RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)
Shortcut Keys for Character Map
After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:
1. RIGHT ARROW (Move to the rightor to the beginning of the next line)
2. LEFT ARROW (Move to the left orto the end of the previous line)
3. UP ARROW (Move up one row)
4. DOWN ARROW (Move down one row)
5. PAGE UP (Move up one screen at a time)
6. PAGE DOWN (Move down one screen at a time)
7. HOME (Move to the beginning of the line)
8. END (Move to the end of the line)
9. CTRL+HOME (Move to the first character)
10. CTRL+END (Move to the last character)
11. SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected)
Microsoft Management Console (MMC)
Main Window Keyboard Shortcuts
1. CTRL+O (Open a saved console)
2. CTRL+N (Open a new console)
3. CTRL+S (Save the open console)
4. CTRL+M (Add or remove a console item)
5. CTRL+W (Open a new window)
6. F5 key (Update the content of all console windows)
7. ALT+SPACEBAR (Display the MMC window menu)
8. ALT+F4 (Close the console)
9. ALT+A (Display the Action menu)
10. ALT+V (Display the View menu)
11. ALT+F (Display the File menu)
12. ALT+O (Display the Favorites menu)

MMC Console Window Keyboard Shortcuts
1. CTRL+P (Print the current page or active pane)
2. ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)
3. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
4. F1 key (Open the Help topic, if any, for the selected item)
5. F5 key (Update the content of all console windows)
6. CTRL+F10 (Maximize the active console window)
7. CTRL+F5 (Restore the active console window)
8. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )

robert john kennedy: மீனாட்சி அம்மன் கோவில்

robert john kennedy: மீனாட்சி அம்மன் கோவில்:   மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது. மீனா...

மீனாட்சி அம்மன் கோவில்








 
மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.
இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.
 

robert john kennedy: பாகற்காயின் மருத்துவ குணங்கள்:

robert john kennedy: பாகற்காயின் மருத்துவ குணங்கள்:: பாகற்காயின் மருத்துவ குணங்கள்: உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற...

பாகற்காயின் மருத்துவ குணங்கள்:

பாகற்காயின் மருத்துவ குணங்கள்:
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.



8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
Ref : http://www.pathivu.com/news/22837/57//d,article_full.aspx

robert john kennedy: புத்தாண்டு விழா வாழ்த்துக்கள்

robert john kennedy: புத்தாண்டு விழா வாழ்த்துக்கள்

புத்தாண்டு விழா வாழ்த்துக்கள்

Descrizione: 2013

robert john kennedy: Catholic News in Tamil - 29/12/12

robert john kennedy: Catholic News in Tamil - 29/12/12: 1. அந்தியோக்கிய புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து 2. கர்தினால் கிரேசியஸ் :  இளம்பெண்ணின் மரணம் ...

Catholic News in Tamil - 29/12/12


1. அந்தியோக்கிய புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து

2. கர்தினால் கிரேசியஸ் இளம்பெண்ணின் மரணம் இந்தியச் சமுதாயத்தில் தீவிர மாற்றம் இடம்பெறுவதற்கான அறைகூவல்

3. பிரதமர் மன்மோகன் சிங் : வன்முறை வேண்டாம்

4. சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு அலெப்போ ஆயர் அழைப்பு

5. திருமணம் குறித்துப் பேசுமாறு Westminster பேராயர் வலியுறுத்தல்

6. இங்கிலாந்து ஆயர் Conry : குடும்பத்தில் குழந்தையின் முக்கியத்துவத்தைச் சிந்திக்க அழைப்பு

7. அருள்தந்தை லொம்பார்தியின் ஆசிரியர் பகுதி

8. உதவி கேட்டு ஆலயக் கதவுகளைத் தட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

9. சிரியாவில் இடைக்கால அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஐ.நா.பிரதிநிதி

------------------------------------------------------------------------------------------------------

1. அந்தியோக்கிய புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து

டிச.29,2012. மத்திய கிழக்குப்பகுதி, உறுதியற்ற நிலையிலும் எளிதில் வன்முறை இடம்பெறும் இடமாகவும் இருக்கும் இக்காலத்தில், கிறிஸ்துவின் சீடர்கள் தங்களுக்கிடையே நிலவும் ஒன்றிப்புக்கு உண்மையான சாட்சி பகர வேண்டியதன் உடனடித் தேவை அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வாறு சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலம், அன்பு, அமைதி, ஒப்புரவு ஆகிய நற்செய்தி அறிவிக்கும் செய்தியை உலகம் நம்பும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அந்தியோக்கியா மற்றும் அனைத்துக் கிழக்குப் பகுதிக்குமான புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் John X Yazigiக்கு கிறிஸ்துவின் அன்பில் சகோதரத்துவ வாழ்த்துச் சொல்லி அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
உரோமன் கத்தோலிக்கத் திருஅவைக்கும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே இருக்கும் ஒன்றிப்பு முழுமையடையாத நிலையில், இவ்விரு சபைகளும் தங்களுக்கு இடையேயான ஆன்மீக ஒன்றிப்பை மேலும் காணக்கூடிய விதத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கானப் பொறுப்புணர்வை இவ்விரு சபைகளும் கொண்டுள்ளன என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறைக்குப் பலியாகுவோரைக் கிறிஸ்து குணப்படுத்தவும், அமைதிக்கான செயல்கள் அப்பகுதியில் தூண்டப்படவும் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
92 வயதான கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Ignatius IV Hazim இம்மாதம் 5ம் தேதி இறந்ததையொட்டி அவ்விடம் தலைவரின்றி காலியாக இருந்தது. பெய்ரூட்டின் வடக்கேயுள்ள Balamand  நமதன்னை துறவு இல்லத்தில் இம்மாதம் 17ம் தேதி கூடிய பேரவையில் அச்சபையின் புதிய முதுபெரும் தலைவர் John X Yazigi தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2. கர்தினால் கிரேசியஸ் இளம்பெண்ணின் மரணம் இந்தியச் சமுதாயத்தில் தீவிர மாற்றம் இடம்பெறுவதற்கான அறைகூவல்

டிச.29,2012. இம்மாதம் 16ம் தேதி புதுடெல்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஆறு ஆண்களினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்ததற்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அம்மாணவியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
சிங்கப்பூரில் புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி இச்சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ், முழு இந்தியத் திருஅவையும் அந்த இளம் பெண்ணுக்காகச் செபிக்கின்றது மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்வு, இந்தியாவுக்கு வருத்தமான தருணம் எனவும், ஒரு சமுதாயம் தனது பெண்களை எவ்வாறு நடத்துகிறதோ அதுவே அதன் அறநெறி முன்னேற்றத்தின் அடையாளம் எனவும், இந்த இளம்பெண்ணின் மரணம் இந்தியச் சமுதாயத்தில் தீவிர மாற்றம் இடம்பெறுவதற்கான அழுகுரல் என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்.
இந்தப் பெண்ணின் இறப்புக்காக அழுவது, சமுதாயத்தில் மனித வாழ்வின் மதிப்புக்கு உறுதியான சான்றுகளாக வாழ்வதற்கு அனைத்துக் கத்தோலிக்கரையும் தூண்ட வேண்டுமெனவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

3. பிரதமர் மன்மோகன் சிங் : வன்முறை வேண்டாம்

டிச.29,2012. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம் மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணத்தையொட்டி தலைநகர் புதுடெல்லியில் ஆயிரக்கணக்கானோர் அமைதியான போராட்டத்தை மேற்கொண்டனர்.
இவ்விறப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இம்மாணவி உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது; அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகமும் ஒன்றுபட்டு இது போன்ற சம்பவங்களுக்கு எதிராகக் கைகோர்க்க வேண்டும்; இந்தியா பாதுகாப்பான வாழ்விற்கு ஏற்ற இடம் என்பதை நிலைநாட்ட வேண்டும்; அதேசமயம் வன்முறை வேண்டாம்; இளைஞர்கள் அமைதியான முறையில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார். 
அப்பெண்ணின் மரணம் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு; இது தொடர்பாக ஏற்கனவே அனைவரும் தங்களின் எதிர்ப்புக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருக்கிறோம்; அப்பெண்ணின் மரணத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; இச்சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்; நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அனைவரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்துங்கள் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவக் கல்லூரி மாணவியின் இறப்பினால், இந்தியா முழுவதிலும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்செயலைச் செய்த ஆறுபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் மீது கொலைக் குற்றமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

4. சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு அலெப்போ ஆயர் அழைப்பு

டிச.29,2012. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையினால் சின்னாபின்னமாக ஆக்கப்பட்டிருக்கும் சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அலெப்போ நகர் கல்தேயரீதி ஆயர் Antoine Audo.
வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கேட்டுள்ள ஆயர் Audo, ஏழைகளுக்காகச் செபித்து அவர்களுக்குச் சேவை செய்யும்போது, கிறிஸ்தவர்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியிலும் மகிழ்ச்சியிலும் வாழ முடியும் என்று கூறினார்.
கஷ்டமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் அலெப்போ தலத்திருஅவை, ஏழைகளுக்கும் தேவையில் இருப்போருக்கும் காரித்தாஸ் மற்றும்பிற பிறரன்பு நிறுவனங்கள் மூலம் உதவி செய்து வருகிறது என்றும் ஆயர் கூறினார்.
தற்போது அலெப்போ கடும் குளிராக இருப்பதால் எரிபொருள் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்றும், சுமார் இரண்டாயிரம் கிறிஸ்தவக் குடும்பங்கள் அலெப்போவிலிருந்து லெபனன் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

5. திருமணம் குறித்துப் பேசுமாறு Westminster பேராயர் வலியுறுத்தல்

டிச.29,2012. ஒரு குடும்பத்தின் இதயமாக இருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள திருமணம் குறித்து பேசுவதற்கு உண்மையிலேயே இதுவே தக்க தருணம் என்று இங்கிலாந்தின் Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.
டிசம்பர் 30, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப விழாவையொட்டி Westminster உயர்மறைமாநிலத்தின் 214 கத்தோலிக்க ஆலயங்களிலும் வாசிப்பதற்கென பேராயர் வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குடும்பம் குறித்த இந்தக் கண்ணோட்டமானது, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கும் விசுவாசமான அன்பில் வேரூன்றப்பட்டது, இது திருமணத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் பேராயரின் அறிக்கை கூறுகின்றது.
மேலும், அடுத்த தலைமுறையைப் பொறுப்புள்ள விதத்தில் பெற்றெடுத்து அன்பினால் அவர்களை வளர்ப்பதையும் இது உள்ளடக்கியுள்ளது எனவும் கூறியுள்ளார் பேராயர் நிக்கோல்ஸ்.

6. இங்கிலாந்து ஆயர் Conry : குடும்பத்தில் குழந்தையின் முக்கியத்துவத்தைச் சிந்திக்க அழைப்பு

டிச.29,2012. இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப விழாவையொட்டி மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் Arundel மற்றும் Brighton மறைமாநில் ஆயர் Kieran Conry, குடும்பம் மனித வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அங்கம் என்பதால் எந்த விலை கொடுத்தும் அதனைக் கட்டிக் காக்குமாறு கேட்டுள்ளார்.
ஒரு குழந்தைக்கு யாராவது ஒருவரது ஆதரவு தேவைப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் Conry, குடும்பத்தில் குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். 
குழந்தைகளுக்குத் தேவை என உணரும் மற்ற காரியங்களோடு கிறிஸ்தவ விசுவாசத்தையும் நாம் எவ்வாறு அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திப்பதற்கு திருக்குடும்ப விழா நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றும் ஆயரின் செய்தி கூறுகின்றது.

7. அருள்தந்தை லொம்பார்தியின் ஆசிரியர் பகுதி

டிச.29,2012. கிறிஸ்மஸ் பெருவிழாவன்று முடிவின்றி இரத்தம் சிந்துதல் இடம்பெறும் சிரியா உட்பட உலக நாடுகளின் அமைதிக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சீனாவின் புதிய தலைவர்களுக்கும் வெளிப்படையாகத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பது திருஅவை மனுக்குலத்தின் பாதையை எவ்வாறு கவனித்து வருகிறது என்பதைக் காட்டுகின்றது என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கிய வாரச் செய்தியில், திருத்தந்தை தனது ஊர்பி எத் ஓர்பி செய்தியில் சீனாவுக்கு வழங்கிய நல்வாழ்த்துக்கள் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி.
மனித சமுதாயத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் தொகையைக் கொண்டுள்ள சீனா உலகின் அதிகாரச் சக்தியில் வளர்ந்து வருகின்றது என்றும், அந்நாட்டின் புதிய தலைமை, வழக்கமான அதிகாரக் கண்ணோட்டத்தோடு செயல்படாமல் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுணர்வில் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார் அருள்தந்தை லொம்பார்தி.


8. உதவி கேட்டு ஆலயக் கதவுகளைத் தட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிச.29,2012. திருத்தந்தையின் பிறரன்பு அலுவலகத்துக்கு 2011ம் ஆண்டில் நிதி உதவி கேட்டு ஏழாயிரம் விண்ணப்பங்கள் வந்ததாகவும், ஏறக்குறைய ஒன்பது இலட்சம் யூரோக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சூழலில் திருத்தந்தையின் பிறரன்பு அலுவலகத்துக்கு உதவி கேட்டு விண்ணப்பிக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, இந்த அலுவலகத்துக்குப் பொறுப்பான பேராயர் Guido Pozzo கூறினார்.
பொதுவாக இந்த அலுவலகம், உரோம் மறைமாநிலத்துக்கு மட்டுமே உதவும், ஆயினும், தற்போது பிற நாடுகளுக்கும், குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உதவி வருகின்றது என்றும் பேராயர் Pozzo கூறினார்

9. சிரியாவில் இடைக்கால அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஐ.நா.பிரதிநிதி

டிச.29,2012. ஏறக்குறைய 21 மாதங்களாக இடம்பெற்று வரும் ஆயுதத் தாக்குதல்களால் சிதைவடைந்துள்ள சிரியாவில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும்வரை உருவாக்கப்படும் இடைக்கால அரசு முழு அதிகாரங்களுடன் செயல்படுவதற்கு வழிசெய்யப்படுமாறு ஐ.நா மற்றும் அரபு கூட்டமைப்பின் பிரதிநிதி Lakhdar Brahimi அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து தமஸ்குவில் நிருபர் கூட்டத்தில் பேசிய Brahimi, அனைத்துலக அமைதிகாப்புப் படையினரை அமர்த்துவது குறித்து சிந்திக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புரட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அந்நாட்டு அரசை இரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மாக்தாத்திடம் வலியுறுத்தியாக இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரெவ் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 30ம் தேதி ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, சிரியாவில் இடைக்கால அரசை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது.
ஆனால், அரசுத்தலைவர் பஷார் அல்-அசாத்தும், புரட்சியாளர்களும் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை.
இந்த நிலையில், அடுத்த மாதம் மாஸ்கோவில் அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின்போதுபுதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்று தெரிகிறது.


robert john kennedy: Catholic News in Tamil - 28/12/12

robert john kennedy: Catholic News in Tamil - 28/12/12: 1. 2013ம் ஆண்டில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் 2. கர்தினால் கிரேசியஸ் :  இந்தியச் சமூகத்தில் பெண்கள் புறக்கணி...

Catholic News in Tamil - 28/12/12

1. 2013ம் ஆண்டில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கும் முக்கிய நிகழ்வுகள்

2. கர்தினால் கிரேசியஸ் :  இந்தியச் சமூகத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது பரவலாகக் காணப்படுகின்றது

3. இந்தியாவில் பாலியல் வன்கொடுமைச் சட்டம் மறுபரிசீலனை

4. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

5. மாஸ்கோ பேராயர் : கடவுள் நம் வாழ்வைப் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்

6. 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

7. நாற்பதாயிரம் ஐரோப்பிய இளையோர் திருத்தந்தையுடன் செபம்

8. பெண் உறுப்புகள் முடமாக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஐ.நா.பொது அவை தீர்மானம்

9. சீனாவில் உலகின் அதிவேக இரயில் சேவை ஆரம்பம்


------------------------------------------------------------------------------------------------------

1. 2013ம் ஆண்டில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கும் முக்கிய நிகழ்வுகள்

டிச.28,2012. பிறக்கவிருக்கும் 2013ம் ஆண்டில் அனைத்துலக இளையோர் தினம் உட்பட பத்து முக்கிய நிகழ்வுகளில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அனைத்துலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் அவ்வாண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று எனக் கூறும் திருப்பீடம், இந்த இளையோர் தினக் கொண்டாட்டங்களில் ஏறக்குறைய இருபது இலட்சம் இளையோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
நம்பிக்கை குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புதிய அப்போஸ்தலிக்கத் திருமடல் வருகிற சனவரியில் வெளியிடப்படும் எனவும், இது அவரின் நான்காவது அப்போஸ்தலிக்கத் திருமடலாக அமையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடும் விதமாக, 2013ம் ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் எனவும், இதன் ஒரு கட்டமாக, பல்வேறு கத்தோலிக்கப் பொதுநிலை இயக்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களை, வருகிற மே 18ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை சந்திப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் 2ம் தேதியன்று இடம்பெறும் திருநற்கருணை ஆராதனை திருவழிபாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வார் என்றும், அச்சமயம் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் திருவழிபாடு இடம்பெறும் என்றும், இத்தகைய நிகழ்வு வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறவுள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மனித வாழ்வை, தாயின் கருவறை முதல் அது இயல்பான மரணம் அடையும்வரைப் பாதுகாக்கும் நோக்கத்தில், வாழ்வதற்கான உரிமை குறித்த உலக மாநாடு வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி வத்திக்கானில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 26, 27 தேதிகளில் அனைத்துலக குடும்ப மாநாடு உரோமையில் இடம்பெறும் என்றும், அன்றாட வாழ்வின் சவால்களைச் சந்திப்பதற்கு விசுவாசம் எந்த அளவுக்கு உதவும் என்பது பற்றிச் சிந்திக்கவும் இம்மாநாட்டில் திருத்தந்தை குடும்பங்களை அழைப்பார் என்றும் திருப்பீடம் கூறியுள்ளது.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று தொடங்கிய நம்பிக்கை ஆண்டு 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.

2. கர்தினால் கிரேசியஸ் :  இந்தியச் சமூகத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது பரவலாகக் காணப்படுகின்றது

டிச.28,2012. மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புதுடெல்லியில் கொடூரக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது, இந்தியாவின் நலமற்ற நிலைக்குப் பயங்கரமான எடுத்துக்காட்டாய் இருக்கின்றது என்று மும்பை கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறினார்.
இந்தியச் சமுதாயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்தப் பாலியல் வன்கொடுமை, மனிதர் தங்கள் வாழ்விலிருந்து கடவுளை ஓரங்கட்டியுள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாயும் இருக்கின்றது என்று ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.
இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து கிறிஸ்மஸ் திருப்பலியிலும் வன்மையாய்க் கண்டித்த கர்தினால் கிரேசியஸ், இந்தியச் சமூகத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது பரவலாகக் காணப்படுவதை இந்நிகழ்வு காட்டுகின்றது என்று கூறினார்.
தங்கள் வாழ்விலிருந்து கடவுளை ஓரங்கட்டுவோர் அமைதியின் எதிரிகள் என்றும், பிறருக்கென வாழ்வது குறித்து நோக்கும்போது கிறிஸ்தவர்கள்கூட தங்கள் இதயங்களைப் அடைத்துக் கொள்கிறார்கள் என்றும், இந்த நம்பிக்கை ஆண்டில் பிறருக்கென நம் இதயங்களைத் திறப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.  
இம்மாதம் 16ம் தேதி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயதாகும் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

3. இந்தியாவில் பாலியல் வன்கொடுமைச் சட்டம் மறுபரிசீலனை

டிச.28,2012. புதுடெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், கொடூரக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதை முன்னிட்டு இடம்பெற்ற நாடு தழுவிய கடும் போராட்டங்களினால், பாலியல் வன்கொடுமைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கு மூன்று பேர் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
இந்தப் பரிசீலனை குழு வருகிற சனவரியில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்போது இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தது ஏழாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில்  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக 1971ம் ஆண்டில் 2,487 பேர் வழக்குப் பதிவு செய்தனர், அவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டில் 24,206 ஆக உயர்ந்துள்ளது என தேசியக் குற்றப்பதிவு அலுவலகம் கூறியுள்ளது.

4. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

டிச.28,2012. திருமுழுக்கு என்ற திருவருட்சாதனத்தைப் பெற்றுள்ளவர்கள் என்பதாலேயே கிறிஸ்தவர்கள் நேபாளம் முழுவதும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்கு உரிமையையும் கடமையையும் கொண்டுள்ளார்கள் என்று காட்மண்டு ஆயர் அந்தோணி ஷர்மா கூறினார்.
காட்மண்டு விண்ணேற்பு அன்னைப் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவுத் திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் ஷர்மா, நேபாளக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து இவ்வுலகில் பிறந்ததற்குச் சாட்சிகளாக வாழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
நேபாள அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் இன, வகுப்பு வேறுபாடுகளைக் களைந்து, நாட்டின் நலனுக்காக ஒன்றுசேர்ந்து உழைப்பதற்கு நல்ல வாய்ப்பாக, இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை நோக்குமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.
இக்கிறிஸ்மஸ் பெருவிழாத் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் கலந்து கொண்டனர். 
நேபாளம் 2008ம் ஆண்டுமுதல் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 2006ம் ஆண்டில் முடியாட்சி வீழ்ந்த பின்னர் இவ்வாண்டில் முதன்முறையாக கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் விழாக் கோலத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

5. மாஸ்கோ பேராயர் : கடவுள் நம் வாழ்வைப் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்

டிச.28,2012. நமது வாழ்வில் கடவுள் நுழைவதற்கு அனுமதிப்பதன் மூலம் நாம் ஒரு புதிய தொடக்கத்திற்கு வித்திடுகிறோம் என்று மாஸ்கோ கத்தோலிக்கச் சமுதாயத்திடம் கூறினார் மாஸ்கோ பேராயர் Paolo Pezzi.
வானதூதர் கபிரியேல் அன்னைமரியாவுக்கு மங்களச் செய்தி சொன்னது போல, கடவுளால் எல்லாம் இயலும் என்று கிறிஸ்மஸ் செய்தியில் கூறிய பேராயர் Pezzi, நாம் அவருக்கு விசுவாசமாக இல்லாவிடினும், அவர் நமது சுதந்திரத்தை மதித்து நமக்காகக் காத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
நூற்றுக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்ட கிறிஸ்மஸ் திருப்பலியில் இவ்வாறு கூறிய மாஸ்கோ பேராயர் Pezzi, கிறிஸ்மஸ் நள்ளிரவின் அமைதியும் மகிழ்ச்சியும் நமது வீடுகளை நிரப்பட்டும் என்றும் தெரிவித்தார்.

6. 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

டிச.28,2012. 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டுள்ளனர், அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர் என்று சமய சுதந்திரத்தைக் கண்காணிக்கும் இத்தாலிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்   Massimo Introvigne கூறினார்.
இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்கள் தீவிரமாகச் செயல்படும் இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர் என்றுரைத்த Introvigne, இதற்கு எடுத்துக்காட்டாக, நைஜீரியா, பாகிஸ்தான், எகிப்து, மாலி, சொமாலியா போன்ற நாடுகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோ ஹாராம் என்ற இசுலாமியத் தீவிர அமைப்பின் வன்முறையால் திருப்பலிக்குக்கூடச் செல்ல முடியாத அளவுக்குக் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதையும் அவர் விளக்கினார்.
கம்யூனிச சர்வாதிகாரம் இன்னும் இடம்பெறும் வட கொரியா போன்ற நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் அதிகமாகத் துன்புறுகின்றனர் என்றும் Introvigne தெரிவித்தார்.
2012ம் ஆண்டில் தங்களது விசுவாசத்திற்காகக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த Introvigne, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் பகுதியையும் குறிப்பிட்டார்.

7. நாற்பதாயிரம் ஐரோப்பிய இளையோர் திருத்தந்தையுடன் செபம்

டிச.28,2012. பிரான்ஸ் நாட்டின் டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புத் துறவு சபையினர் நடத்தும் ஐரோப்பிய இளையோர் மாநாடு இவ்வெள்ளிக்கிழமையன்று உரோமையில் தொடங்கியுள்ளது.
ஏறக்குறைய நாற்பதாயிரம் இளையோர் கலந்து கொள்ளும் இம்மாநாட்டின் ஒரு நிகழ்வாக, இவ்விளையோர் இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தையைச் சந்தித்து அவருடன் சேர்ந்து செபம் செய்வார்கள்.
வருகிற சனவரி 2ம் தேதிவரை நடைபெறவிருக்கும் இந்த 35வது டேஜே இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ளும் இவ்விளையோருக்கு உரோம் பங்குத்தளங்களும் குடும்பங்களும் வரவேற்பு கொடுத்துள்ளன.
பிரிந்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த அருள்சகோதரர் Roger Schutz என்பவரால் 1940ம் ஆண்டு Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு துறவு சபை உருவாக்கப்பட்டது. இதில்  கத்தோலிக்கர் உட்பட பல கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஏறக்குறைய நூறு பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

8. பெண் உறுப்புகள் முடமாக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஐ.நா.பொது அவை தீர்மானம்

டிச.28,2012. பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் நடவடிக்கையை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா.பொது அவை முதன்முறையாக விடுத்துள்ள அழைப்பு வரலாற்று சிறப்புமிக்கது, இது, உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்படுவதை நிறுத்தவதற்கான முக்கியமான முயற்சியாகும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் வன்செயல், உலகில் இலட்சக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலவாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது மற்றும் இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கின்றது என்றும் கூறினார் பான் கி மூன்.
பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் வன்செயலால் உலகில் 14 கோடிப் பெண்களும் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.

9. சீனாவில் உலகின் அதிவேக இரயில் சேவை ஆரம்பம்

டிச.28,2012. உலகிலேயே அதிவேக இரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது.
எட்டு மணி நேரத்தில் 2,298 கி.மீ. தூரம் செல்லும் இந்த இரயில் சேவையினால் அந்நாட்டின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்ஸு வர்த்தக நகரத்திற்கும் பீஜிங்கிக்கும் இடையேயுள்ள 2,298 கி.மீ. தூரத்தை 20 மணி நேரம் இரயிலில் பயணம் செய்த மக்கள், தற்போது 8 மணிநேரத்தில் பயணம் செய்வதற்கு இந்த அதிவேக இரயில் சேவை உதவியுள்ளது.
இந்த இரயில் 2,298 கி.மீ தூரத்தை 300 கி.மீ. வேகத்தில் 8 மணி நேரத்தில் சென்றடையும். மேலும், வழியில் 20 முக்கிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Friday 28 December 2012

Leonardo DaVinci The Mona Lisa - Documentary

Leonardo da Vinci Biography

Leonardo da Vinci: "The Man Who Wanted to Know Everything"

robert john kennedy: An Additional 4th Monkey which forget to mention b...

robert john kennedy: An Additional 4th Monkey which forget to mention b...

robert john kennedy: Creativity: Sand ARt

robert john kennedy: Creativity: Sand ARt

Creativity: Sand ARt

An Additional 4th Monkey which forget to mention by Gandhiji..... "Stop Rape"

robert john kennedy: Ctholic News in Tamil -27/12/12

robert john kennedy: Ctholic News in Tamil -27/12/12: 1. வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள்  2. ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க அர்ப்பணிப...

Ctholic News in Tamil -27/12/12

1. வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள் 

2. ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க அர்ப்பணிப்போம்

3. வெறுங்கைகளுடன் தோன்றிய கிறிஸ்து மக்கள் மனங்களில் இன்னும் வாழ்கிறார் - மியான்மார் பேராயர் Charles Bo

4. பாரம்பரியங்களின் சங்கமமாக விளங்குவது கிறிஸ்துபிறப்புப் பெருவிழா - ஆயர் Mikael Mouradian

5. பெத்லகேமில் ஒலித்த செய்தியை இவ்வுலகம் இன்னும் மறுத்து வருகிறது - முதுபெரும் தலைவர் Bartholomew

6. சீனப் பேரரசரின் அரண்மனையில் ஓவியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்சகோதரரைப் பற்றிய ஆவணப் படம்

7. சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ்: வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்

------------------------------------------------------------------------------------------------------

1. வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள் 

டிச.27,2012. முத்திபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் கூறிவந்துள்ள புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் விளங்கும் உண்மையான கிறிஸ்துவ வாழ்வு என்ற அடித்தளத்தில் எழுப்பப்படவேண்டும் என்று ஆசிய ஆயர்கள் கூறினர்.
டிசம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி முடிய வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர் பேரவைக் கூட்டத்தில் ஆயர்கள் நிறைவேற்றியத் தீர்மானங்களின் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு, ஆசிய ஆயர்கள் பேரவை துவக்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவு, கத்தோலிக்க மறைகல்வி வெளியிடப்பட்ட 20ம் ஆண்டு நிறைவு ஆகிய முப்பெரும்  நிறைவுகளைக் கொண்டாடும் இவ்வாண்டில், பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டம் நடைபெறுவது சிறப்பான ஒரு நிகழ்வு என்று ஆயர்களின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.
பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டம் வியட்நாமில் நடைபெற்றதால், அங்குள்ள கத்தோலிக்கத் திருஅவை வெளிப்படுத்திவரும் விசுவாசம் தங்களுக்கு ஒரு பெரும் உந்துசக்தியாக உள்ளதென்று ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வறிக்கையில் காணப்படும் பத்து அம்சங்களில், இயேசு கிறிஸ்துவுடன் கொள்ளவேண்டிய தனிப்பட்ட உறவு, மறைபரப்புப் பணியில் காட்டும் ஆழ்ந்த ஆர்வம், ஏனைய மதங்களுடன் உரையாடல், தாழ்ச்சியில் ஆற்றப்படும் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களுடன் கொள்ளும் ஒற்றுமை, கடவுளின் படைப்பைப் பேணுதல் என்ற பல்வேறு கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.
உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினரை உள்ளடக்கிய ஆசிய நாடுகளில், கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் கொண்டு செல்வதற்குத் தேவையான எண்ணிக்கையில் நாம் இருப்பது இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடை என்று ஆயர்களின் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.

2. ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க அர்ப்பணிப்போம்

டிச.27,2012. பல்வேறு பிறரன்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி உழைத்துவரும் இலங்கை திருஅவை அதையும் தாண்டிச் சென்று, எழைகளை இன்னும் ஏழைகளாக வைத்திருக்கும் காரணகாரியங்கள் குறித்து ஆராய வேண்டும் என்ற அழைப்பை, கிறிஸ்துபிறப்புப் பெருவிழா நமக்கு விடுக்கின்றது என தங்கள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளனர் இலங்கை ஆயர்கள்.
கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கென சிறப்புச்செய்தி வெளியிட்டுள்ள இலங்கை ஆயர்கள், எழைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தவும், நமது சமூகங்களைச் சூழ்ந்துள்ள துன்ப நிலைகள் குறித்து உணர்ந்துச் செயல்படுபவர்களாக வாழவும், கிறிஸ்துபிறப்புப் பெருவிழா அழைப்பு விடுக்கின்றது என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மனித மாண்பு மதிக்கப்படா நிலைகளும், குற்றங்கள் தண்டனையின்றி தப்பும் கலாச்சாரமும் பெருகிவருவது குறித்த கவலையையும் அச்செய்தியில் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.
இறைவிருப்பத்திற்கு எதிராகச் செல்லும் அனைத்தையும் மாற்றியமைக்க நம்மை அர்ப்பணித்து, நம்மிடையே அமைதியையும் ஒப்புரவையும் கொண்டுவருபவர்களாக ஒவ்வொருவரும் உழைப்போம் என்ற அழைப்பையும் விசுவாசிகளுக்கு விடுத்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம் எனவும் தங்கள் செய்தியின் இறுதியில் விண்ணப்பித்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.

3. வெறுங்கைகளுடன் தோன்றிய கிறிஸ்து மக்கள் மனங்களில் இன்னும் வாழ்கிறார் - மியான்மார் பேராயர் Charles Bo

டிச.27,2012. அதிகாரம், செல்வம், படைபலம் என்று தங்கள் கைகளை நிறைத்து வாழ்ந்த உலகத் தலைவர்கள் இன்று மக்கள் நினைவுகளில் வாழ்வதில்லை, மாறாக, வெறுங்கைகளுடன் குழந்தையாய்த் தோன்றிய கிறிஸ்துவோ மக்கள் மனங்களில் இன்னும் வாழ்கிறார் என்று மியான்மார் பேராயர் ஒருவர் கூறினார்.
Yangon உயர் மறைமாவட்டத்தின் பேராயரான Charles Bo, கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியை, தூய மரியா பேராலயத்தில் நிறைவேற்றியபோது, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
பல ஆண்டுகளாக இராணுவ அடக்கு முறைகளைச் சந்தித்து வந்துள்ள மியான்மார் நாட்டு மக்களுக்கு, அண்மையில் உருவாகியுள்ள மதச் சுதந்திரம் இறைவன் வழங்கியுள்ள பெரும் கொடை என்று பேராயர் தன் மறையுரையில் மகிழ்வுடன் கூறினார்.
பேராலயத்தில் நிகழ்ந்தத் திருவிழிப்புத் திருப்பலியில் கலந்து கொள்ள அரசு அதிகாரிகளுக்கும், எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiக்கும் பேராயர் Charles Bo அழைப்பு விடுத்திருந்தார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

4. பாரம்பரியங்களின் சங்கமமாக விளங்குவது கிறிஸ்துபிறப்புப் பெருவிழா - ஆயர் Mikael Mouradian

டிச.27,2012. கிறிஸ்துபிறப்புப் பெருவிழா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமமாக விளங்கும் ஒரு விழா என்று அமெரிக்க, கனடா நாடுகளின் கத்தோலிக்க ஆர்மீனியத் திருஅவையின் தலைவரான ஆயர் Mikael Mouradian கூறினார்.
இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவையொட்டி செய்தி வெளியிட்ட ஆயர் Mouradian, நம்பிக்கை ஆண்டைத் துவக்கிவைத்த வேளையில், வானதூதரின் வார்த்தைகளைக் கேட்ட மரியா நமக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியதைத் தன் செய்தியில் சுட்டிக் காட்டினார்.
மகிழ்வையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் இத்திருநாளின்போது, அமெரிக்காவில் அண்மையில் குழந்தைகள் கொல்லப்பட்டது, சிரியா நாட்டில் தொடர்ந்துவரும் வன்முறைகள் ஆகியவை இத்திருநாளின் மகிழ்வைக் குறைக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார் ஆயர் Mouradian.
அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நம்பிக்கையில் நம் வாழ்வைத் தொடர்ந்தால், நம் வாழ்வு குழந்தையாய்ப் பிறந்துள்ள இறைவனின் அழகை வெளிப்படுத்தும் என்று ஆர்மீனிய கத்தோலிக்கத் தலைவரான ஆயர் Mouradian கூறினார்.

5. பெத்லகேமில் ஒலித்த செய்தியை இவ்வுலகம் இன்னும் மறுத்து வருகிறது - முதுபெரும் தலைவர் Bartholomew

டிச.27,2012. "இறைவனுக்கு மகிமையும், நல்மனத்தோருக்கு அமைதியும்" என்று பெத்லகேமில் ஒலித்த செய்தியை இவ்வுலகம் இன்னும் மறுத்து வருகிறது என்று Constantinople Ecumenical சபையின் முதுபெரும் தலைவர் Bartholomew கூறினார்.
உலகப் பொருட்களின் மீது மனித சமுதாயம் வளர்த்துள்ள கட்டுக்கடங்காத பேராசையின் ஒரு வெளிப்பாடே நமது வன்முறைகள் என்று முதுபெரும் தலைவர் Bartholomew, கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவன்று வழங்கிய செய்தியில் குறிப்பிட்டார்.
மதம், அரசியல், பொருளாதாரம் என்ற பல நிலைகளிலும் வலுவானவர்களே ஆதிக்கம் செலுத்துவதும், வலுவற்றோர் பாதிக்கப்படுவதும் இன்றையச் சூழல் என்பதைச் சுட்டிகாட்டிய முதுபெரும் தலைவர் Bartholomew, இந்நிலை மாறவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
313ம் ஆண்டிலேயே பேரரசர் Constantine கிறிஸ்துவ வழிபாட்டிற்கு முழு சுதந்திரம் அளித்த போதிலும், 21ம் நூற்றாண்டிலும் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் இன்னும் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருவது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது என்று முதுபெரும் தலைவரின் செய்தி எடுத்துரைக்கிறது.

6. சீனப் பேரரசரின் அரண்மனையில் ஓவியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்சகோதரரைப் பற்றிய ஆவணப் படம்

டிச.27,2012. Qianlong என்ற சீனப் பேரரசரின் அரண்மனையில் ஓவியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்சகோதரர் Giuseppe Castiglioneயின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு தொலைக்காட்சி ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது.
Taiwan நாட்டின் தலைநகரான Taipeiயில் இயேசு சபையினரால் நடத்தப்படும் Kuangchi தொலைக்காட்சி நிறுவனம் தாயாரித்து வரும் இந்த ஆவணப் படம், Taiwanஇலும், சீனாவிலும் ஒளிபரப்பப்படும் என்று இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் அருள்தந்தை Jerry Martinson செய்தியாளர்களிடம் கூறினார்.
"சீனாவில் Giuseppe Castiglione, அரண்மனை ஓவியர், தாழ்ச்சியான பணியாளர்" என்ற தலைப்புடன் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில், சீன அரசர்களின் அரண்மனையில் பணிபுரிந்த இயேசு சபை ஓவியரின் தனிப்பட்டச் சேவை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
சீன மண்ணில் கிறிஸ்துவ மறையைப் பரப்பிய Matteo Ricci என்ற இயேசு சபை அருள்தந்தை, அவரது சீடர் Paul Xu Guangqi, மற்றும் Adam Schall என்ற மற்றொரு இயேசு சபை அருள்தந்தை ஆகியோரைப் பற்றி உருவாக்கப்பட்ட ஆவணப் படங்களை 20 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை பார்த்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

7. சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ்: வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்

டிச.27,2012. சுவிட்சர்லாந்தில் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கு, வாழ்த்துகளை விட பரிசுகளே அதிகம் அனுப்பப்பட்டதாக Swiss.com தகவல் வெளியிட்டிருக்கிறது.
இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, சுவிஸ் தபால்துறை டிசம்பர் 1ம் தேதி  முதல் 24ம் தேதி வரை 1 கோடியே, 60 இலட்சம் பரிசுப்பொருட்களை அனுப்பியுள்ளது கடந்த வருடம் வரை இந்த எண்ணிக்கை 1 கோடியே, 50 இலட்சமாக இருந்தது.
கிறிஸ்துமஸ் அன்று 2 கோடியே, 44 இலட்சம் வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டதாக Swiss.comமின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் முன்னிரவு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று கடந்த ஆண்டைவிட குறைவான குறுந்தகவல்களே அனுப்பப்பட்டதாக Swiss.com தெரிவித்தது.
சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பலரும் வாழ்த்துகளை அனுப்பியதனால் அலைபேசிகளில் வாழ்த்துகள் அனுப்புவது குறைந்துபோனது என்று Swiss.comமின் தகவல் தொடர்பாளர் Jeff Huber கூறினார்.