Saturday 29 January 2011

Catholic News - hottest and latest - 28 Jan 2011

1. திருத்தந்தை : கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையேயான இறையியல் உரையாடல்கள், முழு ஒன்றிப்பை நோக்கி உறுதியுடன் செல்வதற்கு உதவுகின்றன

சன.28,2011. கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே இடம் பெற்று வரும் இறையியல் உரையாடல்கள் இவ்விரு சபைகளும் ஒன்றையொன்று இன்னும் அதிக ஆழமாய்ப் புரிந்து கொள்வதற்கு வழி அமைப்பது மட்டுமல்ல, கிறிஸ்து நமக்கு விடுத்துள்ள முழு ஒன்றிப்பை நோக்கி உறுதியுடன் தொடர்ந்து செல்வதற்கும்  உதவுவதாய் இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையேயான சர்வதேச இறையியல் உரையாடல் பணிக்குழுவின் முப்பது உறுப்பினர்களை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்கள், தனிப்பட்ட முறையிலும் சமூகங்களாகவும் சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்நோக்கி வரும் பகுதிகளிலிருந்து இந்தப் பணிக்குழுவில் உள்ள பலர் வந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டு, இப்பகுதிகளில் அமைதியும் நீதியும் ஏற்படுவதற்கு நம்பிக்கை மற்றும் பரஸ்பர அங்கீகரிப்பு நோக்கி அனைத்துக் கிறிஸ்தவர்களும் சேர்ந்து உழைக்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
2003ம் ஆண்டு சனவரியில் தனது உரையாடலைத் தொடங்கிய இப்பணிக்குழு, இரண்டு கட்டமாக நடத்தியக் கூட்டங்களில் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்தும் திருத்தந்தை எடுத்துச் சொன்னார்.
2. கொலம்பியாவில் அருட்பணியாளர்கள் கொல்லப்பட்டு வருவது குறித்த விரிவான விசாரணைகளுக்குத் தலத்திருச்சபை அரசை வலியுறுத்தல்

சன.28,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அருட்பணியாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது குறித்த விரிவான விசாரணைகள் நடத்தப்படுமாறு அந்நாட்டுத் தலத்திருச்சபை அரசை விண்ணப்பித்துள்ளது.
பொகோட்டா நகரின் தென்பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் இப்புதன் இரவில் இரண்டு கத்தோலிக்கக் குருக்களின் வாகனம் தனியாகக் கிடந்த நிலையில் அக்குருக்களின் உடல்களைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
இக்கொலை குறித்துப் பேசிய கொலம்பிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் ஹூவான் கொர்தோபா விலோத்தா, ஒரே வாகனத்தில் சென்ற இவ்விரு குருக்களும் இனம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
இவ்விரு குருக்களும் 37,38 வயதினர்.  கொலம்பியாவில் 1984ம் ஆண்டு முதல் இதுவரை 74 குருக்கள், 8 துறவியர், 3 குருத்துவ மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

3. மத்ரித் உலக இளையோர் தினத் திருப்பயணிகளுக்கு விசா இலவசம், ஸ்பெயின் அரசு தீர்மானம்

சன.28,2011. ஸ்பெயினின் மத்ரித்தில் வருகிற ஆகஸ்டு 16 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் உலக கத்தோலிக்க இளையோர் தினத்திற்கு வருகைதரவிருக்கும் திருப்பயணிகளுக்கு விசா அனுமதிகளை இலவசமாக வழங்குவதற்கு அந்நாட்டு அரசு இசைவு தெரிவித்துள்ளது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்து கொள்ளும் இத்தினக் கொண்டாட்டங்களின் போது ஆறாயிரம் பாதுகாப்புப் படையினரையும் பணியில் அமர்த்துவதற்கு ஸ்பெயின் அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
உலக இளையோர் தினத்திற்குப் பொறுப்பான ஸ்பெயின் அமைச்சர் ரமோன் ஹூவாரெகெய் மற்றும் இத்தாலிக்கு வெளியே பாப்பிறைப் பயணங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆல்பெர்த்தோ கஸ்பாரி உட்பட அந்நிகழ்வுக்குப் பொறுப்பானத் திருச்சபை உறுப்பினர்களுக்கிடையே நடைபெற்ற கூட்டத்தில் இத்தகைய உறுதிகள் வெளியிடப்பட்டன.
உலகெங்கிலுமிருந்து சுமார் 2 இலட்சத்து நாற்பதாயிரம் இளையோர் இவ்வுலக தினத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 23,000 பேர் ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளைச் சேராதவர்கள்.

4. சென்னையில் புத்தமதக் கோயில் தாக்கப்பட்டுள்ளது குறித்து இலங்கை பல்சமயத் தலைவர்கள் கண்டனம்

சன.28,2011. சென்னையில் ஸ்ரீ மகபோதி புத்தமதக் கோயில் தாக்கப்பட்டு நான்கு புத்தத் துறவிகள் காயமடைந்து இருப்பது குறித்தத் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இலங்கை பல்சமயத் தலைவர்கள்.
சென்னை புத்தமதக் கோயில் பல்சமய நல்லிணக்கத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்று குறிப்பிட்டுள்ள இலங்கை கிறிஸ்தவ, புத்த, இந்து மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள், இத்தாக்குதலு்க்கு எதிரானத் தங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மக்கள் அமைதி காத்து புத்தத் துறவிகள் குணமடைவதற்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் கொழும்புக் கத்தோலிக்கக் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
எண்பது ஆண்டுகள் பழமையுடைய சென்னை ஸ்ரீ மகபோதி புத்தமதக் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 12 இலட்சம் பயணிகள் செல்கின்றனர்
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கைத் துணைத்தூதுரகம், மஹாபோதி சங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது

5. தென் கொரிய காரித்தாஸ் வட கொரியாவுக்கு மனிதாபிமான உதவிகள்

சன.28,2011. தென் கொரிய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து வட கொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கொரிய ஆயர்களின் அதிகாரப்பூர்வமான முதல் வெளிநாட்டு நிவாரண நிறுவனமான சர்வதேச கொரிய காரித்தாஸ், வட கொரியாவில் மிகவும் நலிந்த சிறார், பெண்கள், முதியோர் ஆகியோர்க்கெனப் பத்து இலட்சம் டாலர் மதிப்பிலான உதவிகளை அனுப்பும்.
கடந்த நவம்பரில் வட கொரியா, தென் கொரியத் தீவில் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்து, தென் கொரிய அரசு வட கொரியாவுடனானப் பரிமாற்றத்திற்குத் தடை விதித்திருந்தது. தற்சமயம் அத்தடை இலேசாகத் தளர்த்தப்பட்டு வருகிறது என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

6. யூத இனப் படுகொலைகள் நாளை நினைவுகூர்ந்தார் கான்டர்பரி பேராயர்

சன.28,2011. இரண்டாம் உலகப் போரின் போது நடத்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் குறித்து மனித சமுதாயம் மீண்டும் மீண்டும் பேசாமல் இருந்தால் அச்சமயத்தில் துன்பப்பட்டவர்கள் பற்றிய நினைவையே வருங்காலத் தலைமுறை இழந்து விடும் என்று இங்கிலாந்து ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர் கூறினார்.
சனவரி 27ம் தேதி, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட யூத இனப் படுகொலை நாளுக்கெனச் செய்தி வெளியிட்ட பேராயர் ரோவன் வில்லியம்ஸ், அந்தச் சகாப்தத்தில்  பரிட்டனில் வாழ்ந்த யூதர்கள் எதிர்நோக்கிய வெளிப்படையாய்ச் சொல்லாமல் விடப்பட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
மேலும், இந்நாளில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இத்தகைய கொடுஞ்செயல்கள் வரலாற்றில் மீண்டும் இடம்பெறக் கூடாது என்றார்.
இரண்டாம் உலகப் போரின் போது நாத்சி வதைப்போர் முகாம்களில் சுமார் அறுபது இலட்சம் யூதர்களும் இன்னும் பெருமளவில் பிற மக்களும் கொல்லப்பட்டனர்.    

7. புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களை அகற்றுவதற்கு உலக வணிகத் தலைவர்களுக்கு பான் கி மூன் அழைப்பு

சன.28,2011. உலகில் இடம் பெறும் இறப்புகளில் அறுபது விழுக்காடு புற்றுநோய், இதய நோய், stroke போன்ற நோய்கள் காரணமாக இருக்கும்வேளை இந்த நோய்க்கானக் காரணிகளைக் களைவதற்கு உலக வணிகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு பான் கி மூன் கேட்டுள்ளார்.
தாவோ-உலகப் பொருளாதார மாநாட்டில் இவ்வாறு பேசிய மூன், 2030ம் ஆண்டுக்குள் இந்நோய்கள் வளரும் நாடுகளில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.
இந்நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் 3 கோடியே 50 இலட்சம் பேர் இறக்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றுரைத்த மூன், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவையும் இவற்றில் உள்ளடங்கும் என்றார்.
தொற்று நோய்கள் அல்லாத இந்த நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த உயர்மட்ட அளவிலானக் கூட்டத்தை வருகிற செப்டம்பரில் நியுயார்க்கி்ல்   ஐ.நா.பொது அவை நடத்தும் என்றும் மூன் அறிவித்தார்.
நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டம் பற்றிப் பேசிய அவர், இந்நோய்களைக் கட்டுப்படுத்தப் பொது மற்றும் தனியாரின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
இதில் கூறினார்.காரணமாக இருக்கும்வேளை இந்த நோய்க்கானக் காரணிகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

8. உணவுப் பொருட்கள் விலையேற்றம் குறித்து உலகத் தலைவர்கள் எச்சரிக்கை

சன.28,2011. உலகில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது சமூகப் பதட்டநிலைகளுக்கும் பொருளாதாரப் போருக்கும்கூட இட்டுச் செல்லும் என்று உலகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டு தாவோவில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய இந்தோனேசிய அரசுத் தலைவர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகையோடு வளங்கள் பற்றாக்குறையும் போட்டி போடுவதால் இந்நிலை மோதல்களுக்குக் காரணமாக அமையக்கூடும் என்று குறிப்பிட்டார்.
தற்போது 700 கோடியாக இருக்கும் உலக மக்கள் தொகை 2045ம் ஆண்டுக்குள் 900 கோடிக்குமேல் உயரக்கூடும் என்றும் யுதோயோனோ கூறினார்.
ஜி20 பொருளாதார மாநாட்டிற்கும், ஜி8 நாடுகளின் பொருளாதாரக் கூட்டத்திற்கும் தலைமை வகித்துள்ள ப்ரெஞ்சி அரசுத்தலைவர் நிக்கோலாஸ் சர்கோசி பேசுகையில், விலைவாசிகளில் சரிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இம்மாதம் 26 முதல் 30 வரை இம்மாநாடு நடைபெறுகின்றது

Zoe Dawn Center remembers People's Bihop Leon - 29 Jan 11- Some fine moments
















Monday 24 January 2011

Catholic News - hottest and latest - 25 Jan 2011

இணையதளம் வழியாக நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கருக்குத் திருத்தந்தை அறிவுரை

சன.24,2011. நவீன இணையதள வசதிகளைப் பயன்படுத்தி நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கர் பிறரை மதிப்பவர்களாகவும், ஆன்லைனில் புகழ்பெற வேண்டுமென்பதைத்  தங்களது இறுதி இலக்காகக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் என திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் 45 வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென இத்திங்களன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
Blog, Facebook, YouTube போன்றவை வழியாக நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கர், பொறுப்பு, நேர்மை, முன்னெச்சரிக்கை, காலமறிந்து செயல்படல் ஆகிய கிறிஸ்தவப் பண்புகளைக் கையாள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் டிஜிட்டல் உலகத்தின் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறியுள்ள திருத்தந்தை, சமூகப் பன்வலை அமைப்புகள் உறவுகளையும் சமூகங்களையும் கட்டி எழுப்புவதற்கு நேர்த்தியான வழிகள், எனினும், உண்மையான நட்புகளின் இடத்தில் மாயத்தோற்றமான உறவுகள் வைக்கப்படுவதும், உண்மையான விவரங்களைவிட செயற்கையான பொது விவகாரங்களை உருவாக்குவதற்கு சோதிக்கப்படுவதும் குறித்து எச்சரித்துள்ளார்.
புதிய தொடர்புச் சாதனங்கள் வழியாக நற்செய்தியை அறிவிப்பது என்பது, பல்வேறு ஊடகங்களில் மதம் சார்ந்தவைகளை வெளியிடுவது மட்டுமல்ல, ஒருவர் தனது சொந்த இணையப் பக்கத்தில் தனது கிறிஸ்தவப் பண்புகளுக்குச் சாட்சியாகவும் நற்செய்தியோடு முழுவதும் அவை ஒத்திணங்கிச் செல்வதாகவும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
நடைமுறையில் மெய்மை எனக் கொள்ளத்தக்க தொடர்பு, நம் வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் இடம் பெறும் நேரடியான மனிதத் தொடர்பாக இருக்க முடியாது மற்றும் அதன் இடத்தை அது எடுக்கவும் முடியாது என்றும் அவர் கூறினார்
"டிஜிட்டல் உலகில் உண்மை, அறிவிப்பு, வாழ்க்கையின் எதார்த்தம்", என்ற தலைப்பில் இந்த 45 வது உலக சமூகத் தொடர்பு நாள், வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எழுத்தாளர்க்குப் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதி, உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் திருத்தந்தையின் இச்செய்தி ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
  
திருத்தந்தை, ஜெர்மனியின் லூத்தரன் சபைப் பிரதிநிதிகள் சந்திப்பு

சன.24,2011. லூத்தரன்  கிறிஸ்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே இதுவரை இடம் பெற்றுள்ள உரையாடல்களின் பலன்கள் இத்தகைய உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஊக்கம் அளிப்பதாய் இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்
உரோமையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவு செய்வதற்காக வந்திருக்கும் ஜெர்மனியின் இவாஞ்சலிக்கல்-லூத்தரன் ஐக்கிய அமைப்பின் பிரதிநிதிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பிரிவினைகள் கிறிஸ்து விரும்பிய திருச்சபையின் முழுமையான வாழ்வுக்குத் தடங்கலாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
மார்ட்டின் லூத்தரின் கொள்கைத் திரட்டுகள் வெளியிடப்பட்டதின் 500ம் ஆண்டு 2017ம் வருடம் இடம் பெறுவதைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, லூத்தரன்  கிறிஸ்தவரும் கத்தோலிக்கரும் உலகளாவியக் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைகின்றது என்றார்.
அச்சமயத்தில் இவ்விரண்டு சபைகளும் ஒருவர் மற்றவருக்கு இழைத்தத் தவறான செயல்களுக்கு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது நமது உருக்கமான செபமாக இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
லூத்தரன் சபையைத் தொடங்கிய மார்ட்டின் லூத்தர் உரோமைக்கு வந்ததன் 500ம் ஆண்டின் நிறைவாக இந்த லூத்தரன் சபை பிரதிநிதிகள் குழு வத்திக்கானைப் பார்வையிட்டு வருகின்றது.
கத்தோலிக்கக் குருவாகவும் இறையியல் பேராசிரியருமாக இருந்த ஜெர்மானியரான மார்ட்டின் லூத்தர், 1517ம் ஆண்டில் 95 கொள்கைத் திரட்டுகளை வெளியிட்டார். அதைத் திரும்பப் பெறுமாறு 1520ல் அப்போதைய திருத்தந்தை பத்தாம் சிங்கராயரும் 1521ல் புனித உரோமைப் பேரரசராகிய ஐந்தாம் சார்லசும் கேட்டுக் கொண்டனர். ஆனால் லூத்தர் அதற்கு இணங்காததால் அவர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார். இதுவே புராட்டஸ்டாண்ட் சீர்திருத்தத்திற்கு வித்திட்டது. கடவுளின் மீட்பை ஒருவர் தனது நல்ல செயல்களிலிருந்து பெறுவதில்லை, மாறாக அது இயேசு பாவத்திலிருந்து மீட்கிறார் என்ற அவரின் மீதான விசுவாசத்தின் வழியாக அது கடவுள் அருளால் இலவசமாக்க கொடுக்கப்படுகிறது என்று மார்ட்டின் லூத்தர் போதித்தார். இவரது போதனை திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுப்பதாக இருந்தது.  

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் ஏழு குருக்களும் 300 விசுவாசிகளும் கத்தோலிக்க திருச்சபையில் இணைய‌ விருப்பம்.

சன 24, 2011.   இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஏழு குருக்களும் 300 விசுவாசிகளும் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக Brentwood மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை ஒரு காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையோடு பகிர்ந்து வந்த பாரம்பரியங்களிலிருந்து விலகிச்செல்வதால் கவலையுற்றுள்ள மக்களே கத்தோலிக்கத் திருச்சபையுடன் இணைவதில் ஆர்வம் காட்டி வருவதாக உரைத்த Brentwood ஆயர் தாமஸ் மெக்மஹொன், இது ஒரு துணிவான முடிவு என்றார்.
300 ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க மதத்தில் இணைவது, இழப்பின் வருத்தத்தை தனக்கு தருகின்றபோதிலும், அக்கிறிஸ்தவர்களின் விருப்பத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்தார் Chelmsford  ஆங்கிலிக்கன் ஆயர் Stephen Cottrell.

70 இலட்சம் குழந்தைகளுக்கு தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து

சன 24, 2011.   தமிழகத்தில் 40 ஆயிரத்து 399 மையங்கள் மூலம்  ஐந்து வயதிற்குட்பட்ட 70 இலட்சம் குழந்தைகளுக்கு இஞ்ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்தியாவில் போலியோ நோயை ஒழிக்க 1995ம் ஆண்டு முதல் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் 40 ஆயிரத்து 399 மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஞாயிறன்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரசுத் துறைகள், ரோட்டரி சங்கங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் 70 இலட்சம் குழந்தைகள் உட்பட இந்தியா முழுவதும் 16 கோடியே 80 இலட்சம் குழந்தைகளுக்கு ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்திய அளவில், 42 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2011 இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும்

சன 24, 2011.   உலக மக்கள் தொகை இந்த ஆண்டு இறுதியில் 700 கோடியைத் தொடும் என நேஷனல் ஜியாக்ரபிக்கின் ஆய்வு தெரிவிக்கிறது.
1800 ஆம் ஆண்டு 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை தற்போது 210 வருடங்களில் 700 கோடியாக உள்ளது.
நேஷனல் ஜியாக்ரபிக் இதழின் ஆய்வின் படி, உலகில் ஒரு வினாடிக்கு ஐந்து குழந்தைகள் பிறப்பதாகவும், அதில் இருவர் இறப்பதால், ஒவ்வொரு நொடிக்கும் மக்கள் தொகையில் மூன்று பேர் கூடிக் கொண்டே செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.
உலகெங்கும் ஏழாயிரம் மொழிகள் பேசக்கூடிய மக்கள் 194 நாடுகளில் வசித்து வருகிறார்கள்.
ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இன்றைய உலகில் 21 உள்ளன.

Saturday 22 January 2011

Catholic News - hottest and latest - 22 Jan 11

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : கிறிஸ்தவத் திருமணத்தில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு மட்டுமே திருச்சபையில் திருமணம் செய்வதற்கு உரிமை உள்ளது

சன.22,2011. உண்மையானத் திருமணத்தில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு மட்டுமே திருச்சபையில் திருமணம் செய்வதற்கு உரிமை உள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தம்பதியர் மற்றும் அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தின் ஒருங்கிணைந்த மனித மற்றும் கிறிஸ்தவக் கூறுகளின் நன்மையை உண்மையாக்குவதன் ஒரு செயலாக திருச்சபையில் திருமணம் செய்வது இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இதிலிருந்தே கிறிஸ்தவத் திருமணத்திற்கானத் தயாரிப்பு, திருமண முறிவுகளைத் தவிர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் வருகின்றது என்றும் அவர் கூறினார்.
நீதித்துறை ஆண்டின் தொடக்கமாக, Roman Rota எனப்படும் திருச்சபையின் உச்சநீதிமன்ற உறுப்பினர்களை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
உண்மையில், வாழும் திருமணம், சட்டத் திருமணம் என்று இருவிதங்கள் கிடையாது மாறாக, ஒரேயொரு திருமணமே உள்ளது, அது, தாம்பத்திய வாழ்வு மற்றும் அன்பின் உண்மையான கூறுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான உண்மையான சட்டரீதியான பிணைப்பைக் கொண்டது என்றும் அவர் கூறினார்.
தம்பதியரால் கொண்டாடப்படும் திருமணம் ஒரே இயல்பையும் மீட்புத்தன்மையையும் கொண்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், திருமணத் தயாரிப்பின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார்
திருமணத் தயாரிப்பில் ஈடுபடுவது ஒரு சிறப்பு மேய்ப்புப்பணி என்றும் திருமணத்திற்கான அழைப்பை ஒருவர், மனிதனாக, கிறிஸ்தவனாக உண்மையின் முன்னால் முழு பொறுப்புடன் ஏற்க உதவுவதாக ஒரு குருவின் நட்புணர்வுடன்கூடிய தயாரிப்பு உதவிகள் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

Friday 21 January 2011

Catholic News - hottest and latest

கடந்த 37 ஆண்டுகளில் அமெரிக்காவின் மருத்துமனை கருக்கலைப்புகள் வழி 6 கோடி உயிர்கள் இழப்பு.

சன.20, 2011. கருக்கலைப்புக்கு ஆதரவான அமெரிக்க ஐக்கிய நாட்டின் 1973ம் ஆண்டு தீர்ப்பிற்குப் பின் அந்நாட்டின் மருத்துவமனைகள் வழி இதுவரை 6 கோடி கருக்கலைப்புகள் இடம்பெற்றுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ராபர்ட் ஃபின்.
மனித வாழ்வை அழிக்கும் கருக்கலைப்பு எனும் நடவடிக்கைக்குத் தங்கள் ஆதரவை வழங்கும் அரசு அதிகாரிகளுக்குத் தலத்திருச்சபையின் ஆதரவு இல்லை என்றார் ஆயர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்வுக்கு ஆதரவான ஊர்வலம் இச்சனியன்று இடம்பெற உள்ளதை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர் ஃபின், கடந்த 37 ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 6 கோடி உயிர்கள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளது குறித்த கவலையையும் தெரிவித்தார்.

Thursday 20 January 2011

robert john kennedy: Kenny's Articles// WORDS IN DAILY LIFE

robert john kennedy: Kenny's Articles// WORDS IN DAILY LIFE: "WORDS IN DAILY LIFE 01. INTRODUCTIONIn the context of healing the sick at Capernaum, the centurion replied to Jesus, “For I am a man unde..."

robert john kennedy: Kenny's Articles// VALLUVAR AND KURAL

robert john kennedy: Kenny's Articles// VALLUVAR AND KURAL: "VALLUVAR AND KURAL 01. INTRODUCTION Thiruvalluvar is one of the greates..."

robert john kennedy: Kenny's Articles// THE MYSTERY OF SUFFERING

robert john kennedy: Kenny's Articles// THE MYSTERY OF SUFFERING: "THE MYSTERY OF SUFFERING: A REFLECTION IN THE LIGHT OF THE BOOK OF JOB The book of Job affirms that suffering is universal from the experi..."

robert john kennedy: Kenny's Articles// KURAL IN DAILY LIFE

robert john kennedy: Kenny's Articles// KURAL IN DAILY LIFE: "KURAL: ON LOVE The ethical thinking of Thiruvalluvar on love runs parallel to the teaching of the Gospels. Hence he sounds very much..."

robert john kennedy: Kenny's Biblical Articles// THE GRACIOUS EMPLOYER

robert john kennedy: Kenny's Biblical Articles// THE GRACIOUS EMPLOYER: "THE GRACIOUS EMPLOYER(MATTHEW 20:1-16) 1. INTRODUCTION The English word..."

robert john kennedy: Kenny's Biblical Articles// THE BOOK OF DEUTERONOM...

robert john kennedy: Kenny's Biblical Articles// THE BOOK OF DEUTERONOM...: "THE EXEGETICAL STUDY OF CHAPTER SIX OF THE BOOK OF DEUTERONOMY 01. INTRODUCTION &nb..."

robert john kennedy: Kenny's Biblical Articles// Gal 4:12a: A Reflecti...

robert john kennedy: Kenny's Biblical Articles// Gal 4:12a: A Reflecti...: "Brethren, I beseech you, become as I am (Gal 4:12a): A Reflection on Witness of Life &nbsp..."

robert john kennedy: Kenny's Biblical Articles// JESUS THE JEW AND THE...

robert john kennedy: Kenny's Biblical Articles// JESUS THE JEW AND THE...: "JESUSTHE JEW AND THE PHARISEE 01. INTRODUCTION Though the Second Testa..."

robert john kennedy: Kenny's Biblical Articles// JESUS THE UNIQUE JUDGE...

robert john kennedy: Kenny's Biblical Articles// JESUS THE UNIQUE JUDGE...: "JESUS THE UNIQUE JUDGE 01. INTRODUCTION The judges of the First Te..."

robert john kennedy: Kenny's Biblical Articles// THE BOOK OF LEVITICUS

robert john kennedy: Kenny's Biblical Articles// THE BOOK OF LEVITICUS: "THE EXEGETICAL STUDY OF CHAPTER TWENTY-FOUR OFTHE BOOK OF LEVITICUS 01. INTRODUCTION &nbsp..."

robert john kennedy: Kenny's Biblical Articles// THE PARABLE OF THE HOL...

robert john kennedy: Kenny's Biblical Articles// THE PARABLE OF THE HOL...: "THE PARABLE OF THE HOLY ONE AND THE OUTCAST 01. INTRODUCTION Most of th..."

robert john kennedy: Kenny's Biblical Articles// The Titles of Jesus in...

robert john kennedy: Kenny's Biblical Articles// The Titles of Jesus in...: "The Titles of Jesus in Philippians: Their Implications and Christological Significance 1. INTRODUCTION &n..."

robert john kennedy: Kenny's Theological Articles// THE RELATIONSHIP BE...

robert john kennedy: Kenny's Theological Articles// THE RELATIONSHIP BE...: "THE RELATIONSHIP BETWEEN FAITH AND REASON ACCORDING TO FIDES ET RATIO 01. INTRODUCTIONPope John Paul’s 13th Encyclical Letter on “Faith an..."

robert john kennedy: Kenny's Theological Articles// LITURGICAL INCULTUR...

robert john kennedy: Kenny's Theological Articles// LITURGICAL INCULTUR...: "LITURGICAL INCULTURATION: An Ongoing Process in the Multi-Religious, Cultural Context of India01. INTRODUCTION The Second Vatican Council, i..."

robert john kennedy: Kenny's Theological Articles// Spirituality of Pri...

robert john kennedy: Kenny's Theological Articles// Spirituality of Pri...: "Spirituality of Priesthood:In the Light of the Study, a Search into the Roots of the Christian Spirituality, Specifically of Priestly Spir..."

robert john kennedy: Kenny's Poem// AN ENCOUNTER WITH HER

robert john kennedy: Kenny's Poem// AN ENCOUNTER WITH HER: "AN ENCOUNTER WITH HER It was a rainy dayI rushed into my room, And put on the light.With in a second…I was surprised to see,A swam of May..."

robert john kennedy: Kenny's Poem// AN ENCOUNTER WITH HER

robert john kennedy: Kenny's Poem// AN ENCOUNTER WITH HER: "AN ENCOUNTER WITH HER It was a rainy dayI rushed into my room, And put on the light.With in a second…I was surprised to see,A swam of May..."

robert john kennedy: CPCI Meet at Mangalore -fine moments and beautiful...

robert john kennedy: CPCI Meet at Mangalore -fine moments and beautiful...